Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

முருகேசன் கொலைக்கு கழக கண்மணிகளின் வருமானத்திற்காக டாஸ்மாக் திறந்த அரசு தான் காரணம்! -டாக்டர் க.கிருஷ்ணசாமி

Oredesam by Oredesam
June 24, 2021
in செய்திகள், தமிழகம்
0
முருகேசன் கொலைக்கு கழக கண்மணிகளின்  வருமானத்திற்காக டாஸ்மாக் திறந்த அரசு தான் காரணம்!  -டாக்டர் க.கிருஷ்ணசாமி
FacebookTwitterWhatsappTelegram

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

சேலம் முருகேசன் கொலைக்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்த மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்!
இனியாவது டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடிட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திட வேண்டும் !!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முருகேசன் என்பவரை உயிர் போகும் வரை தாக்கி கொன்ற காவல்துறையின் அராஜக செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த சம்பவம் உச்சக்கட்ட மனித உரிமை மீறலாகும்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, அமெரிக்காவில் கருப்பின சகோதரர் ஜார்ஜ் பிளைட் என்பவரை வெள்ளையின காவல்துறை அதிகாரி ஒருவர் தனது முழங்காலால் கழுத்தை நெரித்துக் கொன்ற செயலுக்கும், இதற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. ஜார்ஜ் கொலை செய்ய எட்டு நிமிடம் பிடித்தது; முருகேசனின் கதை ஐந்தே நிமிடத்தில் முடித்து விட்டது.

கரோனா கட்டுப்பாடு தளர்வுகள் இன்னும் 50 சதவீத அளவிற்கு கூட அமலுக்கு வராத நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், தமிழக பெண்களும் ஒரு சேர எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளை எதிர்த்து எந்த போராட்டமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும் காலை முதல் மாலை வரை நான்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

கழக கண்மணிகளின் மதுபான ஆலைகளில் வரும் வருமானத்தைக் கணக்கில் கொண்டும், அரசின் கஜானா நிரம்ப வேண்டும் என்ற அடிப்படையிலும் யார் குடும்பம் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? என்று எண்ணித்தானே டாஸ்மாக் கடைகளைத் திறந்தீர்கள்?

கரோனா காலத்திலும் தங்களுடைய குடும்ப நலனையும், உடல் நலனையும் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், மது குடித்து அரசிற்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்த அந்த தலைசிறந்த குடிமகன்கள் ஒருவேளை தள்ளாடி, தட்டுத்தடுமாறி வந்திருந்தால் அவர்களை பாதுகாப்புடன் வீட்டில் கொண்டு போய் சேர்ந்திருக்க வேண்டியது தானே காவல்துறையின் பொறுப்பு; அரசின் கடமை. ஆனால், முருகேசன் என்பவரை இரண்டு, மூன்று காவலர்கள் ஈவிரக்கமில்லாமல் காட்டுமிரண்டித் தனமாகத் தாக்கியதை காணொளியில் காண முடிகிறது. சாலையிலேயே அடித்துக் கொல்லும் அளவிற்கு அவர் என்ன இமாலய தவறு செய்து விட்டார்?

முருகேசன் கொலை செய்யப்பட்டு விட்டார். இரு காவலர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தோடு இது முடிந்து விட்டதாக எவரும் கருதக்கூடாது. ஒரு மாதமாக டாஸ்மாக் கடைகள் மூடிக்கிடந்த நேரத்தில் வீடுகளில், வீதிகளில், சாலைகளில் எவ்வித சண்டை சச்சரவுகளும் இல்லை. டாஸ்மாக் கடைகள் திறந்த பிறகு வீடுகளிலும், வீதிகளிலும் சண்டை சச்சரவுகள் தலைவிரித்து ஆடுகின்றன. இது குறித்து ஏற்கனவே நாம் எச்சரித்துள்ளோம். அதையும் மீறி டாஸ்மாக் கடைகளைத் திறந்ததால் தான் சேலம் முருகேசனுக்கு இந்த கொடிய செயல் அரங்கேறியுள்ளது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? தெரியவில்லை.

எனவே, முருகேசனின் மரணத்திற்கு காவலர்களின் தாக்குதல் காரணமாகக் காட்டப்பட்டாலும், டாஸ்மாக் கடைகளைத் திறந்ததே முழு முதல் காரணமாகும். எனவே சேலம் முருகேசன் கொலைக்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்த இம்மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும், இனியாவது டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடிட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி. 23.06.2021
ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

விரைவில் தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் – அண்ணாமலை அதிரடி !

விரைவில் தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் – அண்ணாமலை அதிரடி !

July 6, 2022
துணை முதல்வராகும் வாரிசு! முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன் வெளியாகும் அறிவிப்பு!

அன்பில் மகேஷ் ஏரியாவில் நடந்த சம்பவம்… மாணவர்களுக்கு நேர்ந்த நிலைமை..

October 14, 2024
மத்திய அரசின் ஒப்புதலை பெற்றது பிசிசிஐ இந்தாண்டு ஐபில் 2020 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது . டைட்டில் ஸ்பான்சர்ஷிப்க்கு கடும் போட்டி

மத்திய அரசின் ஒப்புதலை பெற்றது பிசிசிஐ இந்தாண்டு ஐபில் 2020 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது . டைட்டில் ஸ்பான்சர்ஷிப்க்கு கடும் போட்டி

August 11, 2020
நகா்மயமாதலுக்காக ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் 5,151 திட்டங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது

நகா்மயமாதலுக்காக ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் 5,151 திட்டங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது

June 26, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x