Monday, July 7, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

முருகேசன் கொலைக்கு கழக கண்மணிகளின் வருமானத்திற்காக டாஸ்மாக் திறந்த அரசு தான் காரணம்! -டாக்டர் க.கிருஷ்ணசாமி

Oredesam by Oredesam
June 24, 2021
in செய்திகள், தமிழகம்
0
முருகேசன் கொலைக்கு கழக கண்மணிகளின்  வருமானத்திற்காக டாஸ்மாக் திறந்த அரசு தான் காரணம்!  -டாக்டர் க.கிருஷ்ணசாமி
FacebookTwitterWhatsappTelegram

READ ALSO

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

சேலம் முருகேசன் கொலைக்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்த மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்!
இனியாவது டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடிட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திட வேண்டும் !!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முருகேசன் என்பவரை உயிர் போகும் வரை தாக்கி கொன்ற காவல்துறையின் அராஜக செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த சம்பவம் உச்சக்கட்ட மனித உரிமை மீறலாகும்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, அமெரிக்காவில் கருப்பின சகோதரர் ஜார்ஜ் பிளைட் என்பவரை வெள்ளையின காவல்துறை அதிகாரி ஒருவர் தனது முழங்காலால் கழுத்தை நெரித்துக் கொன்ற செயலுக்கும், இதற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. ஜார்ஜ் கொலை செய்ய எட்டு நிமிடம் பிடித்தது; முருகேசனின் கதை ஐந்தே நிமிடத்தில் முடித்து விட்டது.

கரோனா கட்டுப்பாடு தளர்வுகள் இன்னும் 50 சதவீத அளவிற்கு கூட அமலுக்கு வராத நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், தமிழக பெண்களும் ஒரு சேர எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளை எதிர்த்து எந்த போராட்டமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும் காலை முதல் மாலை வரை நான்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

கழக கண்மணிகளின் மதுபான ஆலைகளில் வரும் வருமானத்தைக் கணக்கில் கொண்டும், அரசின் கஜானா நிரம்ப வேண்டும் என்ற அடிப்படையிலும் யார் குடும்பம் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? என்று எண்ணித்தானே டாஸ்மாக் கடைகளைத் திறந்தீர்கள்?

கரோனா காலத்திலும் தங்களுடைய குடும்ப நலனையும், உடல் நலனையும் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், மது குடித்து அரசிற்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்த அந்த தலைசிறந்த குடிமகன்கள் ஒருவேளை தள்ளாடி, தட்டுத்தடுமாறி வந்திருந்தால் அவர்களை பாதுகாப்புடன் வீட்டில் கொண்டு போய் சேர்ந்திருக்க வேண்டியது தானே காவல்துறையின் பொறுப்பு; அரசின் கடமை. ஆனால், முருகேசன் என்பவரை இரண்டு, மூன்று காவலர்கள் ஈவிரக்கமில்லாமல் காட்டுமிரண்டித் தனமாகத் தாக்கியதை காணொளியில் காண முடிகிறது. சாலையிலேயே அடித்துக் கொல்லும் அளவிற்கு அவர் என்ன இமாலய தவறு செய்து விட்டார்?

முருகேசன் கொலை செய்யப்பட்டு விட்டார். இரு காவலர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தோடு இது முடிந்து விட்டதாக எவரும் கருதக்கூடாது. ஒரு மாதமாக டாஸ்மாக் கடைகள் மூடிக்கிடந்த நேரத்தில் வீடுகளில், வீதிகளில், சாலைகளில் எவ்வித சண்டை சச்சரவுகளும் இல்லை. டாஸ்மாக் கடைகள் திறந்த பிறகு வீடுகளிலும், வீதிகளிலும் சண்டை சச்சரவுகள் தலைவிரித்து ஆடுகின்றன. இது குறித்து ஏற்கனவே நாம் எச்சரித்துள்ளோம். அதையும் மீறி டாஸ்மாக் கடைகளைத் திறந்ததால் தான் சேலம் முருகேசனுக்கு இந்த கொடிய செயல் அரங்கேறியுள்ளது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? தெரியவில்லை.

எனவே, முருகேசனின் மரணத்திற்கு காவலர்களின் தாக்குதல் காரணமாகக் காட்டப்பட்டாலும், டாஸ்மாக் கடைகளைத் திறந்ததே முழு முதல் காரணமாகும். எனவே சேலம் முருகேசன் கொலைக்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்த இம்மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும், இனியாவது டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடிட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி. 23.06.2021
ShareTweetSendShare

Related Posts

#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பல லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழகத்திற்கு தேவையா மேலவை! மக்கள் வரிப் பணத்தை வீணாக்கும் முயற்சி! கிருஷ்ணசாமி

பல லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழகத்திற்கு தேவையா மேலவை! மக்கள் வரிப் பணத்தை வீணாக்கும் முயற்சி! கிருஷ்ணசாமி

July 26, 2021
Annamalai vs Uday

உதயநிதி சவாலை ஏற்ற அண்ணாமலை நேரத்தை சொல்லுங்கள்… நான் ரெடி தனி ஆளாக அண்ணாசாலை வருகிறேன்… நீங்கள் தயாரா ?

February 20, 2025
இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த பிரதமரின் புதிய திட்டம் அறிமுகம்.

ஏழைகளுகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சி பாஜக – பிரதமர் மோடி .

February 25, 2022
EaseMyTrip

மாலத்தீவுக்கு மரண பயத்தை காட்டிய இந்தியவிமான சேவை நிறுவனங்கள்.. சமரசத்திற்கு முயலும் மாலத்தீவு..

January 11, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!
  • காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !
  • பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.
  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x