சனாதனத்திற்கு எதிராக பேசுபவரின் நாக்கை பிடுங்க வேண்டும் மத்திய அமைச்சர் அதிரடி !

தமிழக வாரிசு அமைச்சர் உதயநிதி சனாதனத்திற்கு எதிராக பேசிய பேச்சு நாடுமுழுவதும் திமுக இண்டியா கூட்டணிக்கு பல எதிர்ப்பை கிளம்பியுள்ளது.இந்த நிலையில் சனாதனத்திற்கு எதிராக பேசுபவரின் நாக்கை பிடுங்க வேண்டும் என மத்திய நீர்வளதுறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்என பேசியுள்ளார்.,

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்தியஅமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாவது: சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் நாட்டில் அரசியல் அதிகாரத்தை, மதிப்பை தக்க வைக்க முடியாது. சனாதனத்தை ஒழிப்பதாக கூறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.

முன்னோர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து சனாதனத்தை காப்பாற்றினர். ஆனால் அதனை ஒழிக்க வேண்டும் என சிலர் பேசி வருகின்றனர். சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்களின் நாக்கை பிடுங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Exit mobile version