ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் சிறப்பு அனுமதிச் சீட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

சர்வ தரிசனம் டோக்கன்கள் நாளை காலை வெளியாகும் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் வெளியிடப்பட உள்ளது.

இலவச தரிசனத்துக்காக தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

Exit mobile version