Thursday, June 1, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கூசாமல் பொய் சொல்வார் திருமாவளவன் முரசொலி பஞ்சமி நிலத்தை மீட்க போராடுவாரா? – தடா பெரியசாமி!

Oredesam by Oredesam
June 27, 2021
in செய்திகள், தமிழகம்
0
கூசாமல் பொய் சொல்வார் திருமாவளவன் முரசொலி பஞ்சமி நிலத்தை மீட்க போராடுவாரா? – தடா பெரியசாமி!
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சமி நிலம் மூலபத்திரம் என்றால் தி.மு.கவிற்கு சற்றுபயம் வந்துவிடும் என்பதே உண்மை. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தை அபகரித்து கட்டப்பட்டது என முதலில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்பிக்க அதை தொடர்ந்து பா.ஜ.க வின் தடா பெரியசாமி, டாக்டர் ஸ்ரீநிவாசன் ஆகியோரின் புகாரை எஸ்.சி. எஸ்.டி ஆணையத்திடம் புகார் அளிக்க அந்த புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணையில் இறங்கியது எஸ்.சி. எஸ்.டி ஆணையம்.

இதனை தொடர்ந்து திமுக-தலைவர் ஸ்டாலினுக்கு முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைப்பு வந்தது.பின்பு மாற்று பிரமுகராக ஆர்.எஸ்.பாரதியை அனுப்பியது மேலும் முரசொலி அலுவலகம் வாடகைக்கு தான் இருக்கிறோம் என பல்டி அடித்தார் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் ஆனால் இன்னும் முரசொலி மூல பத்திர விஷயம் கிடப்பில் தான் இருக்கிறதே தவிர மூடவில்லை. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மூல பத்திர விவகாரம் சூடு பிடிக்கும்.

READ ALSO

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சி நிர்வாகிகளுடன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, ‘தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்’ என்று, கோரிக்கை விடுத்தார். என கூறப்படுகிறது. இதற்கு தலித் தலைவர்கள், திருமாவளவனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தினமலர் நாளிதழுக்கு பாரதிய ஜனதா கட்சியின் , தேசிய செயற்குழு உறுப்பினரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வையாளருமான தடா பெரியசாமியின் பேட்டியில்..

தமிழகம் முழுவதும் , பட்டியலின மக்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து, தொடர்ந்து தகவல் சேகரித்து வருகிறோம். இதற்காக, தலித் இயக்க தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். இதில், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை சேர்க்கவில்லை. காரணம், அவர்களுக்கு, தலித் பிரச்னைகளை தீர்ப்பதிலும், தலித் முன்னேற்றத்திலும் துளியும் ஆர்வமில்லை. தென் மாவட்டங்களில், குறும்பர், பன்னாடி, பள்ளர் உள்ளிட்ட, ஏழு ஜாதிகளை உள்ளடக்கி, தேவேந்திர குல வேளாளர் என, பொதுப் பெயரிட்டு அழைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு, அது, கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அதேபோல, பறையரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில், பறையர், சாம்பவர், ஆதிதிராவிடர் என, தனித்தனியாக பெயரிட்டு அழைக்கும் வழக்கம் உள்ளது.ஆகவே, பறையர் இனத்தைச் சேர்ந்த இந்த மூவரையும், ஆதி திராவிடர் என, ஒரே பெயரிட்டு அழைக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை.தமிழகம் முழுதும், 1.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன. நாலு வகைகளில், பஞ்சமி நிலம் பிரிக்கப்பட்டு இருந்தாலும், ஒரே சட்டத்தின் கீழ் தான் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த நிலம், தலித்களுக்கு உரியவை.ஆனால், எல்லாமே தலித் அல்லாதோரிடம் இருக்கிறது. அதை மீட்க வேண்டும் என்பது, இரண்டாவது கோரிக்கை.

பல கிராமங்களிலும், தலித் மக்கள் தனி இடங்களில் வசிக்கின்றனர். அவர்கள் வசிக்கும் இடங்கள், சேரி, காலனி, அரிஜன காலனி, பறத் தெரு, பள்ளத்தெரு என, அழைக்கப்படுகிறது. அலுவலக பதிவுகளிலும் அப்படியே உள்ளது. இதுவும் ஒரு தீண்டாமை தான்; அதை ஒழிக்க வேண்டும்.அதற்காக, இந்தப் பகுதிகளை பொதுப் பெயரிட்டு அழைக்க அரசு உத்தரவிட வேண்டும் என்பது, மூன்றாவது கோரிக்கை.இந்த மூன்று கோரிக்கைகளுக்காக, தலித் இயக்கங்கள் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. நாங்கள், இந்த போராட்டங்களை கையில் எடுத்தால், தலித் மக்களிடமிருந்து தான் தனிமைப் படுத்தப்படுவோம் என, அஞ்சத் துவங்கினார் திருமாவளவன்.

இதையடுத்தே, முதல்வர் ஸ்டாலினை கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து, பஞ்சமி நில மீட்பு தொடர்பாக, மனு அளித்திருக்கிறார். அதில், பஞ்சமி நிலம் மீட்பு தொடர்பாக, கமிஷன் அமைக்கவும் கோரியிருக்கிறார்.இது தொடர்பாக, ஏற்கனவே மூன்று கமிஷன் அமைக்கப்பட்டு, அவற்றின் முடிவுகள் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், தலித் மக்களை ஏமாற்ற திருமாவளவன் நாடகம் போடுகிறார். எனினும், தலித் மக்களின் நலனுக்கான கோரிக்கை விடுத்திருப்பதை வரவேற்கிறோம். தி.மு.க வின், ‘முரசொலி’ அறக்கட்டளைக்காக வாங்கப்பட்டுள்ள நாளிதழ் அலுவலகம் இருக்கும், சென்னை, கோடம்பாக்கம் நிலமும், பஞ்சமி நிலம் தான். அந்த நிலத்தை, தலித் மக்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் வலியுறுத்துவாரா?

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவரின் சிறுதாவூர் பங்களா உள்ள நிலமும், பஞ்சமி நிலம் என்ற, குற்றச்சாட்டு எழுந்தது. விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டு, பஞ்சமி நிலம் என கண்டறியப்பட்டது.அப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த திருமாவளவன், சிறுதாவூர் நிலம், பஞ்சமி நில வகையைச் சேர்ந்தது அல்ல’ என, கூறினார். தன் அரசியல் நிலைப்பாட்டுக்காக திருமாவளவன், கூசாமல் பொய் சொல்வார். அதனால், திருமாவளவன் முன்னர் போல் இல்லாமல், சிறுதாவூர் பங்களா மற்றும் முரசொலி அலுவலக இடத்தை மீட்டு, மீண்டும் தலித்களுக்கே திருப்பி அளிக்கச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்

ShareTweetSendShare

Related Posts

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
உலகம்

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

May 25, 2023
புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
செய்திகள்

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

May 25, 2023
தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !

May 25, 2023
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை  தீர்க்கும் பரிகாரம் என்ன !
ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

May 25, 2023
சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு
இந்தியா

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023
“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.
உலகம்

“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.

May 24, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது கோடி கோடியாக சம்பாதித்தது உண்மை ! தி.மு.க எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம்!

தமிழகத்தில் வரிகளை உயர்த்துவது உறுதி! விடியல் அரசு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டம்!

August 13, 2021

ஜூன் 3 வரை 4197 சிறப்பு ரயில்இயக்கப்பட்டுள்ளது! 58 லட்சம் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குக் சென்றுள்ளார்கள் !

June 5, 2020
சீனா வைரஸ் கொரோனவை கட்டுப்படுத்த வருகிறது குளோரோகுயின்! கொரோனாவின் கொட்டத்தை அடக்குமா!

சீனா வைரஸ் கொரோனவை கட்டுப்படுத்த வருகிறது குளோரோகுயின்! கொரோனாவின் கொட்டத்தை அடக்குமா!

March 21, 2020
இந்தியா வெளியுறவுக்கொள்கையை பாராட்டிய இம்ரான் கான் !

இந்தியா வெளியுறவுக்கொள்கையை பாராட்டிய இம்ரான் கான் !

March 21, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
  • புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
  • தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
  • பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x