Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சமூக நீதி ஆட்சியில் பிணத்தை புதைக்க முடியவில்லை ! மயானத்துக்காக போராடும் பட்டியல் சமூக மக்கள்.!

Oredesam by Oredesam
June 5, 2025
in செய்திகள், தமிழகம்
0
சமூக நீதி

சமூக நீதி

FacebookTwitterWhatsappTelegram

சமூக நீதி ஆட்சியில் பிணத்தை புதைக்க முடியவில்லை ! மயானத்துக்காக போராடும் பட்டியல் சமூக மக்கள்.!

’பல தலைமுறைகளாகத் தாங்கள் மயானமாகப் பயன்படுத்திவந்த நிலத்தை, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், அந்த நிலத்தை மீட்க கால் நூற்றாண்டுக்காலமாக அரசிடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை…’ எனவும் வேதனை தெரிவிக்கின்றனர் பட்டியல் சமூக மக்கள்!ஈரோடு மாவட்டம், கண்ணுடையாம்பாளையம் கிராமத்தில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 700 பேர் வசித்துவருகின்றனர். இந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக இவர்கள் பயன்படுத்திவந்த மயானப் பகுதியை, ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் ஆக்கிரமித்துவைத்திருப்பதாகக் குமுறுகின்றனர் கிராம மக்கள்.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

மண்ணுக்குள் போகிறபோதுகூடப் பிரச்னையாக இருக்கிறது!”

இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்துப் போராடிவரும் உதயகுமாரிடம் இது குறித்துப் பேசியபோது, “பல தலைமுறைகளாகக் கண்ணுடையாம்பாளையத்தில் சர்வே எண் 315-ல் இருக்கும் சுமார் 12 சென்ட் அளவிலான அரசுப் புறம்போக்கு நிலத்தை, மயானமாக நாங்கள் பயன்படுத்திவருகிறோம். எங்கள் மயானத்தை ஒட்டி, ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் விவசாய நிலம் இருக்கிறது. அவர் எங்கள் மயானத்துக்குச் சொந்தமான சுமார் 6 சென்ட் நிலத்தைப் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துவைத்திருக்கிறார். ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், எங்களாலும் அவரை எதிர்த்து போராட முடியவில்லை. இதனால், மீதமுள்ள 6 சென்ட் நிலத்தில்தான் உடல்களைப் புதைத்து வந்தோம். இந்த 6 சென்ட் நிலத்திலும் பெரும்பாலான பகுதி பாறையாக இருப்பதால் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையே மீண்டும் தோண்டி, அங்கிருக்கும் எலும்புகளை அகற்றிவிட்டு அதே இடத்தில் உடல்களை அடக்கம் செய்யவேண்டிய அவலநிலையில் இருக்கிறோம்.

இந்த நிலையில், ‘பாறைகள் நிரம்பிய இந்த 6 சென்ட் நிலமும்கூட எனது தோட்டத்துக்குச் செல்லும் பாதை. எனவே, அங்கும் உடல்களைப் புதைக்கக் கூடாது’ என்று 2007-லிருந்து பிரச்னை செய்துவருகிறார் வேலுச்சாமி. இதனால் எங்கள் சமூகத்தில் ஒவ்வொரு முறை இறப்பு நிகழும்போதும், பிரச்னையுடனேயே பிணத்தைப் புதைக்கவேண்டியிருக்கிறது. மண்ணுக்குள் போகிறபோதுகூட பிரச்னையாக இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 9 பேர் இறந்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பெரிய பிரச்னைக்குப் பிறகுதான் உடல்களை அடக்கம் செய்திருக்கிறோம்.

கால் நூற்றாண்டாக மனு கொடுத்து, சலித்துவிட்டோம்!”
கடைசியாக விஜயராகவன் என்பவர் மே 25-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்யவிடாமல் வேலுச்சாமி குடும்பத்தினர் தடுத்து பிரச்னை செய்தனர். காலையில் தொடங்கிய இந்தப் பிரச்னை, மாலை வரை நீண்டது. காவல்துறையின் தலையீட்டுக்குப் பின்னர்தான், ஒருவழியாக அவரது உடலை அடக்கம் செய்ய முடிந்தது. அப்போதும்கூட வருவாய்த்துறை உயரதிகாரிகள் ஒருவர்கூட அங்கு நேரில் வரவில்லை.

வேலுச்சாமி ஆக்கிரமித்து வைத்திருக்கும் எங்கள் மயான நிலத்தை மீட்டுத் தரவும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்படியும் ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் வரை அனைவருக்கும் கடந்த கால் நூற்றாண்டாக மனு கொடுத்து, சலித்துவிட்டோம். இதுவரை ஒரு அதிகாரிகூட இங்கு நேரில் வந்து ஆய்வு நடத்தியதில்லை. வேலுச்சாமி ஆதிக்கச் சாதி என்பதுடன், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராகவும் இருப்பதால் அதிகாரிகளும் அவருக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். நாங்களும்தான் காலங்காலமாக தி.மு.க-வுக்கு வாக்களிக்கிறோம். ஆனால், அரசும் எங்களை மக்களாகக் கருதவில்லை; அதிகாரிகளும் கருதவில்லை. காரணம், நாங்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்” என்றார் ஆதங்கத்துடன்.

இது தொடர்பாக, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி நம்மிடம் பேசுகையில், “உறவினர் இறப்பின் வலியைவிடவும் ‘எப்படி இந்த உடலைப் புதைக்கப்போகிறோம்… என்ன பிரச்னை வருமோ?’ என்ற அச்சத்துடனேயே இருக்கவேண்டி யிருக்கிறது. உயிரோடு இருக்கும்போதுதான் நாங்கள் ஒதுக்கப்படுகிறோம். இறந்த பின்பு, கண்ணியமாகப் பிணத்தைப் புதைக்கக்கூட விடாமல் சாதி தடுக்கிறது. எல்லாக் கிராமங்களிலும் மயானங்களில் சுற்றுச்சுவர், மின்சார வசதி, தண்ணீர் வசதி, இறுதிச்சடங்குக்கான அறை ஆகிய வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், எங்கள் மயானத்தில் மட்டும் இது போன்று எந்த வசதியும் செய்து கொடுக்காமல் இப்போதும் புதர்மண்டியே கிடக்கிறது. சுற்றுச்சுவர் கட்டித் தந்தால்தான் ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியும்” என்றார்.

‘இறந்த உடல்களைக்கூடப் பிரச்னையில்லாமல் புதைக்க முடியவில்லை’ என்று சொல்லும் இந்த மக்களின் கண்ணீரைத் துடைக்குமா சமூக நீதி அரசு? Source : vikatan

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

வனிதாவின் மூன்றாவது கல்யாணத்தில் முதல் நாளே வந்த பிரச்சனை ! மூன்றாவது கணவர் பீட்டர்பால் மீது புகார்!

வனிதாவின் மூன்றாவது கல்யாணத்தில் முதல் நாளே வந்த பிரச்சனை ! மூன்றாவது கணவர் பீட்டர்பால் மீது புகார்!

June 29, 2020
Narendra Modi

உலகத் தலைவர்களில் உயர்ந்த தலைவர் பிரதமர் மோடி! மக்கள் பேராதரவுடன் மீண்டும் நம்பர் ஒன்!

February 23, 2024
மேற்குவங்கத்திற்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க! ஜான் பர்லாவுக்கு அமைச்சர் பதவி! மேற்கு வங்கம் இரண்டாக பிரிக்கப்படுகிறதா!

மேற்குவங்கத்திற்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க! ஜான் பர்லாவுக்கு அமைச்சர் பதவி! மேற்கு வங்கம் இரண்டாக பிரிக்கப்படுகிறதா!

July 13, 2021
இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.

February 7, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x