Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பொய்யை தூக்கி கொண்டுவந்த ஆர்.எஸ்.பாரதியை விரட்டியடித்த வானதி சீனிவாசன்! இனிதான் ஆட்டமே ஆரம்பம் ! இதுக்கே பதறினா எப்படி!

Oredesam by Oredesam
June 9, 2025
in செய்திகள், தமிழகம்
0
oredesam Vanathi Srinivasan
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டுவிட்டது. அதில் பாமகவும் இணையப் போகிறது என்று தெரிந்தவுடன் திமுகவுக்கு பெரும் அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் விளைவு தான் ஆர்.எஸ் பாரதியின் பேச்சு என்றும், அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய இருப்பதாகவும், அப்போது திமுக எந்த அளவுக்கு மிரளப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் .பிரதமர் குறித்து பேசிய ஆர்.எஸ் பாரதிக்கு பதிலடி கொடுத்துள்ளார். வானதி சீனிவாசன்.

அவர் கூறியுள்ளதாவது! தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை.
கடந்த 2024 ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது, “தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், ஒடிசாவின் முதலமைச்சர் ஆவதா என்று கேட்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா” என்று, திராவிட முன்னேற்ற கழகம் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார்.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் அவர்கள், அம்மாநிலத்தை ஆண்ட, ‘பிஜூ ஜனதா தளம்’ கட்சியில் சேர்ந்து, தீவிர அரசியலில் ஈடுபட்டார். அதற்கு அக்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. ஒடிசா மக்களும் பாண்டியன் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை விரும்பவில்லை. அதனால்தான், “பாண்டியன் அரசியலில் தலையிட மாட்டார். ஆட்சி அதிகாரத்துக்கு வர மாட்டார்” என்று, பிஜு ஜனாதளம் கட்சியின் தலைவரும், அப்போது முதலமைச்சராக இருந்தவருமான நவீன் பட்நாயக் அறிவிக்க வேண்டிய நிலை வந்தது.
ஒடிசா மக்களின் அந்த மனநிலையைதான் அமித்ஷா வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஜெயலலிதா அவர்களை மைசூரில் பிறந்தவர் என்பதற்காக, ‘கன்னடர்’ என்றும், தமிழக மக்களின் மனங்களை வென்று தான் உயிரோடு இருக்கும் வரை திமுகவை ஆட்சி அதிகாரத்துக்கு வரை விடாமல் செய்த எம்ஜிஆர் அவர்களை, ‘மலையாளி’ என்றும், திமுகவில் M. K. Stalin க்கு போட்டியாக வந்து விடுவார் என்பதற்காக கட்சியை விட்டு நீக்கப்பட்ட வைகோவை, ‘கலிங்கப்பட்டி தெலுங்கர்’ என்றும் வசைபாடிய ஒரு கட்சி, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், ஒடிசாவின் முதலமைச்சர் ஆவதை பாஜக எதிர்த்தது என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆகவில்லை. அதற்கான வாய்ப்பு இருமுறை வந்தது. முதல் முறை பெருந்தலைவர் காமராஜருக்கு வந்தது. அதை அவரே விரும்பவில்லை. ஏற்கவில்லை. இரண்டாவது முறையாக காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜி.கே. மூப்பனாருக்கு வந்தது.

1997ல் தேவகவுடாக்கு பிறகு ஜி.கே. மூப்பனாருக்கு வந்த பிரதமர் வாய்ப்பை தடுத்து நிறுத்தி ஐ.கே. குஜ்ராலை பிரதமர் ஆக்கியது திமுக. தமிழர் ஒருவர் பிரதமராவதை தடுத்து நிறுத்திய கட்சி, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசா முதலமைச்சர் ஆவதை பாஜக தடுத்துவிட்டது என்று கூறுவது வேடிக்கையாக இல்லையா? கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்.
“அதிமுக, பாமகவை கபளீகரம் செய்து அந்த இடத்தில் பாஜகவை கொண்டு வருவது தான் அமித்ஷாவின் ஒற்றை இலக்கு” என்றும் ஆர். எஸ். பாரதி கூறியிருக்கிறார்.

அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டுவிட்டது. அதில் பாமகவும் இணையப் போகிறது என்று தெரிந்தவுடன் திமுகவுக்கு பெரும் அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் விளைவு தான் இப்படி புலம்பி தள்ளியிருக்கிறார் ஆர்.எஸ் பாரதி. கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல், அந்தக் கட்சிகளை எல்லாம் ஏமாற்றி வரும் திமுக, மற்ற கட்சிகளைப் பார்த்து கபளீகரம் செய்கிறது என்று பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.

இதற்கே இப்படி என்றால், அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய இருக்கின்றன. அப்போது திமுக எந்த அளவுக்கு மிரளப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிரான கட்சி பாஜக என்று நிறுவ திமுக முயற்சிக்கிறது. அதற்காகவே ஆர்.எஸ். பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், தமிழர் ஒருவரை பிரதமராக விடாமல் தடுத்து நிறுத்திய திமுக தான், தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிரான கட்சி. இதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். இதை யாராலும் மறுக்க முடியுமா? பதில் சொல்லுங்கள் ஸ்டாலின்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பா.ஜ.க இளைஞர்களை கண்டு அஞ்சி நடுங்கும் தி.மு.க! உண்மையை ஒப்புக்கொண்ட திமுகவின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பா.ஜ.க இளைஞர்களை கண்டு அஞ்சி நடுங்கும் தி.மு.க! உண்மையை ஒப்புக்கொண்ட திமுகவின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

September 20, 2020
மிரட்டிய இந்தியாவின் கடற்படை ..தெறித்து ஓடிய கடற்கொள்ளையர்கள்...

மிரட்டிய இந்தியாவின் கடற்படை ..தெறித்து ஓடிய கடற்கொள்ளையர்கள்…கப்பலில் கடத்தப்பட்ட இந்தியர்கள் மீட்பு..

January 6, 2024

அடுத்த மாஸ்டர் பிளானுக்கு தயாராகும் அமித்ஷா குடியரசுத் தலைவரை சந்தித்ததன் முக்கிய காரணம்.

July 10, 2021
காங்கிரஸ் ஆட்சியில் 45,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது!சரத்பவார் அதிரடி மகாராஷ்ட்ராவில் ஆட்சி நிலைக்குமா?

காங்கிரஸ் ஆட்சியில் 45,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது!சரத்பவார் அதிரடி மகாராஷ்ட்ராவில் ஆட்சி நிலைக்குமா?

June 28, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x