Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

பட்டியலின வகுப்பை சேர்ந்தவரை தமிழக துணை முதல்வராக நியமிக்க வேண்டும்-வானதி சீனிவாசன்

Oredesam by Oredesam
June 23, 2022
in அரசியல், இந்தியா, செய்திகள், தமிழகம்
0
oredesam Vanathi Srinivasan
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் துணை முதல்வராக ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கப்படவேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை :
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

பா.ஜ.கவுக்கு இதுவரை மூன்று முறை, குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது, 2002ஆம் ஆண்டு முதல் முறையாக குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பா.ஜ.கவுக்கு கிடைத்தது. அப்போது, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் அவர்களை குடியரசுத் தலைவராக பாஜக தேர்வு செய்தது.

திரு நரேந்திர மோடி அவர்கள் பிரதமரான பிறகு 2017இல் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் வாய்ப்பு பாஜகவுக்கு கிடைத்தது. அப்போது பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களை குடியரசுத் தலைவராக பாஜக தேர்வு செய்தது.

இப்போது வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது முறையாக பாஜகவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த முறை ஒடிசா மாநிலத்தின் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த திருமதி திரெளபதி முர்மு அவர்களை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.
பாஜகவை பொறுத்தவரை ‘சமூக நீதி’ என்பது வெறும் பேச்சு, எழுத்து மட்டுமல்ல. மேடைகள் தோறும் “சமூக நீதி, சம நீதி, சமத்துவம், சகோதரத்துவம்” என்று முழங்கிவிட்டு அவர்களுக்கு, அரசியல் அதிகாரம் கொடுக்காமல் ஏமாற்றுவது தான் இந்த நாட்டில் இதுவரை நடந்து வந்திருக்கிறது.
ஆனால், பாஜகவை பொறுத்தவரையில் ‘சமூக நீதி’ என்பது உயிர்மூச்சு. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, வாய்ப்பே கிடைக்காது என்ற நிலையில் உள்ள மக்களுக்கு வாய்ப்புகளை பாஜக வழங்கி வருகிறது.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே, அதிகமான பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருப்பது தற்போதைய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் தான். பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான்.

காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் நாங்கள் பட்டியலின், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன செய்திருக்கிறோம் என்று அவ்வப்போது பட்டியலிட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்தக் கட்சிகளின் நோக்கம் அவர்களின் வாக்குகளை அறுவடை செய்வது மட்டுமே. ஆனால் பாஜகவின் நோக்கம் அவர்களுக்கு தேவையானவற்றை, அவர்களே செய்து கொள்ளும் அளவுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவது.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் குடியரசுத் தலைவராக, பிரதமராக, மத்திய அமைச்சர்களாக, மாநிலங்களின் முதல்வராக வந்துவிட்டால் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே செய்து கொள்வார்கள். அவர்களை முடிவெடுக்கும் இடத்திற்கு, திட்டங்களை செயல்படுத்தும் இடத்திற்கு அதாவது கொடுக்கும் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பாஜகவின் சமூக நீதி.
அரசியல் அதிகாரம் கிடைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான், அவர்களை வாங்கும் இடத்திலேயே வைத்திருப்பது? கொடுக்கும் இடத்திற்கு அவர்களை மாற்றுவது தான் உண்மையான சமூக நீதி. அதன் இதுதான் பாஜக அரசியல் கொண்டிருக்கிறது.

சமூக நீதி தான் எங்களின் உயிர்நாடி கொள்கை என்று முழங்கி வரும் திமுகவுக்கு இப்போது அதனை செயல்படுத்த ஒரு நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த திருமதி திரெளபதி முர்மு அவர்களை திமுக ஆதரிக்க வேண்டும். அதுபோல தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க, பட்டியலின சமுதாயத்தினருக்கு அரசியல் அதிகாரம் வழங்க முன்வரவேண்டும். பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் நியமிக்க வேண்டும் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பட்டியலின சமுதாயத்தினருக்கு அரசியல் அதிகாரம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறேன்.இவ்வாறு வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மிதுனம் குருபெயர்ச்சி

குருபெயர்ச்சி – மிதுன ராசிக்காரர்களே இந்த கோவிலுக்கு செல்லுங்கள் முயற்சி வெற்றி அடையும்! சோதனைகள் இல்லை.!

April 28, 2024
கொரோனவிற்கான தடுப்பூசியின் மனிதசோதனை வியாழக்கிழமை தொடங்குகிறது

கொரோனவிற்கான தடுப்பூசியின் மனிதசோதனை வியாழக்கிழமை தொடங்குகிறது

April 22, 2020

ஊடக அறம் மீறிய “மாலை முரசு” தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கண்டனங்கள்.

June 6, 2020
முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் படி அமைச்சர் சேகர் பாபு கெஞ்சிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் படி அமைச்சர் சேகர் பாபு கெஞ்சிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

May 9, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x