குருடன் நொண்டிபயலுகள் என்று தரக் குறைவாக பேசிய திருமாவளவனுக்கு மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் கண்டனம்.

இவர்களுக்கு இதுவே பிழைப்பாய் போய்விட்டது ….

இந்து பெண்களை விபச்சாரிகள் என்பதும்,மாற்றுத்திறனாளர்களை
உதாரணப்படுத்துவதும்!…

ஒருநாள் கண்களை மூடிக்கொண்டு வாழ்ந்துபார்…
அப்போது தெரியும் பார்வையற்றவரின் சூழ்நிலை..

ஒரு நாள் தவழ்ந்து சென்று பார்.. அப்போது தெரியும் தவழ்ந்து செல்வோரின் கஷடம்!..

இன்றைய கால சூழ்நிலையில் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துவரும்
பல மாற்றுத்திறனாளர்களை இழிவு படுத்தும் விதமாக அரசியல் சுயலாபத்திற்காக மாற்றுத்திறனாளர்களை உதாரணப்பொருளாக
பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எத்தனை மாற்றுத்திறனாளர்கள் மனைவி குழந்தைகளோடு
குடும்பம் நடத்திவருகின்றனர்.

பொறுப்பான பதவியில் இருக்கும் ஓர் மாநிலங்களவை
MP.மாற்றுத் திறனாளிகளை இழிவு படுத்தும் விதமாக பேசிய திரு.திருமாவளவன் அவர்களை வண்மையாக கண்டிக்கின்றோம்

ஆ.பத்மநாதன்,மாநிலத் தலைவர்
சக்ஷம் தமிழ்நாடு,மாற்றுத்திறனாளர்நலம்விரும்பும்
தேசியஅமைப்பு.

Exit mobile version