தப்லிகி ஜமாத்தால் பயங்கர ஆபத்து: தடை செய்ய விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை!

இந்தியாவில் தப்லிகி ஜமாத் அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு விஷ்ய இந்து பரிஷத் கோரிக்கை வைத்துள்ளது. தப்லிகி ஜமாத் அமைப்புக்கு முஸ்லீம் நாடான சவுதி அரேபியா கூட சமீபத்தில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அந்த அமைப்பால் சவுதி அரேபியாவுக்கு ஆபத்து இருப்பதாகவும் பேசப்பட்டு வந்தது. இதனால் உலகத்தில் பல நாடுகளில் தப்லிகி ஜமாத் அமைப்பு குறித்து பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தப்லிகி ஜமாத் அமைப்பு நம் நாட்டுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே பெரும் அச்சுறுத்தால் அமைந்துள்ளது.

இந்த அமைப்பு சர்வதேச அளவில் மிகப்பெரிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. எனவே இந்த அமைப்புக்கு உடனடியாக தடை விதிக்க வேணடும். இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version