விழுப்புரம் அரசு பள்ளி ஆசிரியையை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், PEN DRIVE மூலம் மாணவர்களுக்கு பாடங்களை வழங்கிய தமிழகத்தை சேரிந்த ஆசிரியைக்கு பிரதமர் மோடி மான்-கி-பாத் நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், குன்னத்தூர் அரசு பள்ளி ஆசிரியை ஹேமலதா தமிழ் மொழி பாடங்களை வீடியோ பதிவு செய்து PEN DRIVE மூலம் மாணவர்களுக்கு வழங்கினார். இதனை அறிந்த பிரதமர் மோடி மான்-கி-பாத் நிகழ்ச்சியில் பேசியபோது, ஆசிரியையின் முயற்சிக்கு பாராட்டினைத் தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னை பற்றி பேசியது உத்வேகத்தை அளிப்பதாகவும், பிரதமர் வாழ்த்தியதை சக ஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் சமர்பிப்பதாக ஆசிரியை ஹேமலதா தெரிவித்துள்ளார்.

Exit mobile version