மேற்கு வங்கத்தில் கொடி நாட்ட அமித்ஷாவின் ‘மாஸ்டர் பிளான்’ என்ன?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக மேற்கு வங்காளத்திலும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவிருக்கிறது. தேர்தல்களில் வெற்றி பெற வியூகங்களை அமைப்பதில் சாணக்கியர் என்று அறியப்படும் பாரதிய ஜனதா கட்சியின் அமித்ஷா மேற்கு வங்காளத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேற்கு வங்காளத்திற்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்த மண்ணின் மைந்தர்களுக்கு மரியாதை செய்தார். மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்த பெரிய மனிதர்களுக்கு வணக்கம் தெரிவித்து, தன்னுடைய தேர்தல் மூலோபாயம் என்ன என்பதை அவர் சுட்டிக் காட்டிவிட்டதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இது அமித் ஷா வகுக்கும், இதுவே மேற்கு வங்காளத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் மூலோபாயம் என்று தெரிகிறது. அதாவது,  திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தில் வங்காளத்தின் பெரிய மனிதர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதை நிரூபிக்க பாஜக முயற்சிக்கும்.

மேற்கு வங்கத்தில் வெற்றியைப் பெற பாஜகவின் மூலோபாயம் என்ன என்பது இப்போது படிப்படியாக தெளிவாகி வருகிறது. மேற்கு வங்கத்தின் பெரிய மனிதர்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து எப்போதும் குரல் கொடுக்கும் பாஜக, தற்போது அந்த மண்ணின் மைந்தர்களாய் தலைசிறந்து விளங்கியவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் தன்னை வங்காள அடையாளத்துடன் இணைத்துக் கொள்கிறது, இது சட்டசபை தேர்தலில் பயனடைவதற்கான பாஜகவின் சிறந்த உத்தியாக இருக்கும்.  

எப்போதும் அமித்ஷா வெச்ச குறி தப்பியது இல்லை அதுபோல் இதுவும் நடக்கும்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version