அழகான பசுமை மலையழகுக்கு பெயர் பெற்ற பஹல்காம் சுற்றுலா மையம், ஏப்ரல் 22ம் தேதி ரத்த வெள்ளமாக மாறியது. மத அடையாளத்தின் பேரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல், வழக்கமான பயங்கரவாதத்தைக் கடந்தது. இது ஒரு திட்டமிட்ட மத அடிப்படையிலான சுடுகாடாக இருந்தது. உயிரிழந்தோர் அனைவரும் பொதுமக்கள், பெரும்பாலானோர் மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள்.சாட்சியங்களின் படி, பயங்கரவாதிகள் முதலில் ஐ.டி கார்டுகளை கேட்டு மத அடையாளத்தை உறுதிப்படுத்தினர்.
அதன் பின்னர், ஆண்களை நிர்வாணமாக்கி, முஸ்லிம் அல்லாதவர்களை கண்டறிய ‘மூட நம்பிக்கை’ முறைகளை பயன்படுத்தினர். ஹிந்துக்கள் தனியே பிரிக்கப்பட்டு, ‘கலிமா’ ஓத அழுத்தம் கொடுக்கப்பட்ட போது, அதை மறுத்தவர்களும், தெரியாமல் தயங்கியவர்களும் உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.இதுவெறும் சாதாரண தாக்குதலா? இது ஒரு மதத்தையும், ஒரு நாட்டு கலாச்சார அடையாளத்தையும் அழிக்க திட்டமிட்ட ஜிஹாதியாகும். “இது ஒரு பயங்கரவாதச் செயலல்ல; இது இந்தியா மீது நடத்தப்படும் மத யுத்தம்,”
அதுமட்டுமில்லாமல் நமது அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்த, 27 வயது இளைஞர் சுதீப் நியூபனே. இவர் பொதுசுகாதார கல்வி பயன்றவர்.சமூக சேவை பணிகளில் ஈடுபாடு கொண்டவர். விடுமுறையை கழிக்க, தனது தாய் ரிமா மற்றும் சகோதரியுடன் பஹல்காம் வந்துள்ளார். அவர் வெளிநாட்டவராக இருந்தும், ஹிந்து என தெரிந்ததால், பயங்கரவாதிகள் ஈவிரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். கொல்லப்படுவதற்கு முன், உன் பெயர் என்ன என, பயங்கரவாதிகள் கேட்டுள்ளனர். ‘சுதீப்’ என கூறியதும், ‘மதம் பிடித்த’ பயங்கரவாதிகள் தலையில் குறிவைத்து சுட்டுள்ளனர் என, அவரது தாத்தா சோகத்துடன் தெரிவித்தார்.
இது ஒரு சுற்றுலாப் பயணத்தின் மீதான தாக்குதலல்ல – இது இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்ட ஒரு அராஜகம். இந்தக் கொடூரத்தின் பின்னணி காஷ்மீரை தாக்கி வரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத கொள்கையாகவே உள்ளது. இது மக்களின் மனங்களில் பயத்தை விதைக்கும், மதங்களில் முரண்பாடு உண்டாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.இந்தியாவின் புதிய அரசியல் மனப்பான்மை எச்சரிக்கையாக பேசுவதில்லை. நாம் இனி மெளனமாக இருக்கப்போவதில்லை. நாம் இனி அடக்குமுறையை ஏற்கப்போவதில்லை.
இந்தியா பதிலளிக்கும். தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து குரல் எழுகிறது. ‘இது புதிய இந்தியா – பயமற்றது. உறுதியானது. பாரம்பரியத்தையும் மத அடையாளத்தையும் பாதுகாப்பதில் ஒருமித்தது.’இந்த சம்பவம் இந்தியா முழுவதும் இந்தச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா திடமான நடவடிக்கையை உறுதியளித்துள்ளனர். “நம் மக்களை கொன்றவர்கள் அமைதியாக தூங்க முடியாது. அவர்கள் மீது எடுக்கப்போவது, நீதிமன்ற நடவடிக்கையே அல்ல, இந்திய அரசின் முழுமையான பதிலடியாகும்,” எனக் கூறியுள்ளார் பிரதமர்.அதனைத்தவிர, அமித் ஷா நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து, “இந்தியா அச்சுறுத்தலுக்கு தலைவணங்காது. ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களை இப்போது நாம் முழு தைரியத்துடன் எதிர்கொள்வோம்,” என்றார்.
இது ஒரு சுற்றுலாப் பயணத்தின் மீதான தாக்குதலல்ல – இது இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்ட ஒரு அராஜகம். இந்தக் கொடூரத்தின் பின்னணி காஷ்மீரை தாக்கி வரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத கொள்கையாகவே உள்ளது. இது மக்களின் மனங்களில் பயத்தை விதைக்கும், மதங்களில் முரண்பாடு உண்டாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.இந்தியாவின் புதிய அரசியல் மனப்பான்மை எச்சரிக்கையாக பேசுவதில்லை. நாம் இனி மெளனமாக இருக்கப்போவதில்லை. நாம் இனி அடக்குமுறையை ஏற்கப்போவதில்லை. இந்தியா பதிலளிக்கும். தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து குரல் எழுகிறது. ‘இது புதிய இந்தியா – பயமற்றது. உறுதியானது. பாரம்பரியத்தையும் மத அடையாளத்தையும் பாதுகாப்பதில் ஒருமித்தது.’