Tuesday, July 8, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

Oredesam by Oredesam
May 25, 2023
in ஆன்மிகம், செய்திகள்
0
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை  தீர்க்கும் பரிகாரம் என்ன !
FacebookTwitterWhatsappTelegram

தடைகளை உண்டாக்கும் பிரம்மஹத்தி தோஷம் – தீர்க்கும் பரிகாரம் !

ஜோதிடத்தில் மறைந்துள்ள சூட்சுமங்களை நீங்கள் அனைவரும் தெரிந்து கொண்டு, அதன் வழியாக பயன் பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தோஷங்கள் குறித்த இப்பதிவையும், எளிமையான பரிகாரங்களையும் உங்களுக்கு வழங்கி வருகிறேன்.

READ ALSO

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

தொடர்ந்து நம்முடைய கட்டுரைகளைப் படித்து நீங்கள் பயன்பெற்று வருவதை நீங்கள் அளிக்கும் தகவல்களில் இருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.இந்த இடத்திலும் ஒரு சிறிய குழப்பம் வாசகர்களாகிய உங்களுக்கு இருக்கிறது.

உங்களில் ஒரு சிலர், வீட்டில் பூஜைகள் நடத்துவதின் வழியாக, அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று அங்கு பரிகாரம் செய்வதின் வழியாக இந்த தோஷம் பரிகாரமாகி விடுமா? என்பது போன்ற கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். கண் நோய்க்கு பல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாமா? இருதய நோய்க்கு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்டிடம் சிகிச்சை பெற்று கொள்ளலாமா? என்பதுபோல் உள்ளது அவர்களின் கேள்வி.

கிரகங்களுக்குரிய பரிகாரங்களை செய்ய வேண்டுமென்றால் அந்த கிரகத்தின் ஸ்தலத்திற்கு சென்றுதான் பரிகாரம் செய்திட வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு தகவலை அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும். கிரகங்கள் என்பவர்கள் அனைத்திற்கும் மேலான சக்திகளால் படைக்கப்பட்டவர்கள் என்று நூல்களும் புராணங்களும் சொல்கிறது. உலகை வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள் கிரகங்கள்தான்.

வாழ்க்கையின் வழிகாட்டி கிரகங்கள்தான் !

நம் ஒவ்வொருவருக்கும் உரிய பலன்களை நம் கர்ம வினைகளுக்கேற்ப வழங்குவதற்காகவே கிரகங்கள் படைக்கப்பட்டன. நமக்கு மட்டுமல்ல நமக்கும் மேலான சக்திகளும் கிரகங்களின் பார்வைக்கு உட்பட்டவர்கள்தான் என்பதற்கு சிவபெருமானுக்கேற்பட்ட ஒரு அனுபவத்தை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

சிவ பெருமானுக்கு ஏழரை சனிக்குரிய காலம் ஏற்பட்டபோது அவரைத் தேடியும் சனி பகவான் வருகிறார். சனி பகவானால் தம்மைப் பிடிக்க முடியாமல் போக வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு குகைக்குள் மறைந்து தியானத்தில் மூழ்குகிறார் சிவபெருமான். ஒரு கட்டத்திற்குப்பின் கண்விழித்து அந்த குகைக்குள் இருந்த வெளியில் வருகிறார். வாசலில் சனி பகவான் நிற்பதைப்பார்த்த சிவ பெருமான் “என்னை உன்னால் பிடிக்க முடிந்ததா? என்பதுபோல் சனி பகவானை நோக்கி ஒரு பார்வை பார்க்க, நான் உங்களைப் பிடித்திருந்த காரணத்தினால்தான் தாங்கள் குகைக்குள் மறைந்திருந்தீர்கள், என்னுடைய பார்வையில் இருந்து நீங்கள் விலகும் நேரம் வந்தபோதுதான் குகையை விட்டு வெளியில் வந்தீர்கள்… என்று சனிபகவான் கூற, கடமை நெறி தவறாமல் செயல்பட்ட காரணத்தினால் சனி பகவானுக்கு ஈஸ்வர பட்டத்தை சிவபெருமான் சூட்டி மகிழ்ந்ததாக புராணங்கள் கூறுகிறது. யாராக இருப்பினும் அவர்களுக்குரிய பலன்களை வழங்கும் நிலையில் கிரகங்கள் உள்ளனர் என்பதற்கு இது ஒன்றே சாட்சியாகும்.

தோஷங்களை ஜாதகத்தில் காணலாம் !

நம் ஒவ்வொருவரின் கர்ம வினைகளே ஏழு பிறவிக்கும் நம்மைத் தொடர்ந்து வருகிறது. கடந்த பிறவியில் நாம் செய்த பாவங்கள் நமக்கு சாபங்களாக மாறி இப்பிறவியில் அது தோஷமாக நம்முடைய ஜாதகத்தில் வெளிப்படுகிறது. நம் ஜாதகத்தைப் பார்த்தாலே நமக்குள்ள தோஷத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும். அந்த தோஷம் எந்த வகையில் நமக்கு வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முடியும்.

தோஷங்கள் ஒவ்வொன்றிற்கும் பரிகாரம் என்று ஒன்றுண்டு. அந்தப் பரிகாரம் என்பது எந்த கிரகத்தினால் நமக்கு தோஷம் உண்டாகியுள்ளதோ அந்த கிரகத்தை சரணடைந்து முன்னோர்கள் சொல்லி வைத்தபடி பூஜை, ஹோமம் போன்றவற்ற செய்து நமக்கேற்பட்ட தோஷங்களில் இருந்து நாம் விடுபடலாம்.பொதுவாக, தான் செய்த தவறை ஒரு மனிதன் உணர்கின்ற போது, அவன் மனம் அதற்காக வலிக்கின்ற போது நிச்சயமாக அவனுக்குரிய தண்டனையில், அவனுக்குண்டாகும் பாதிப்புகளில் மாற்றம் உண்டாகும்.

யோகத்திற்கு தடைபோடும் தோஷங்கள்

ஒருவர் ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சார நிலை, திசா புத்தி, கோச்சார பலன் என்று அனைத்துமே சாதகமாக இருக்கிறது. கல்வி, குடும்பம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், அவற்றில் எந்த ஒன்றையும் எதிர்பார்த்த அளவிற்கு அடைய முடிவதில்லை. கல்வியில் தடைகள், வேலைகளில் தடைகள், வியாபாரத்தில் நஷ்டம், குடும்பத்தில் குழப்பம், பிள்ளை பேறு தள்ளிப் போகுதல் இப்படி ஒவ்வொரு விதமான சங்கடத்தை ஒவ்வொருவரும் அனுபவித்து வருகின்றனர். ஏதேனும் ஒரு வகையில் நெருக்கடியிலும் குழப்பத்திலுமே வாழ்ந்து வருகின்றனர். ஜோதிடர்கள் குறித்த நேரத்தில் திருமணம் நடைபெறவில்லை. குழந்தை பாக்கியம் உண்டாகவில்லை. வேலை கிடைக்கவில்லை. தொழிலில் முன்னேற்றம் உண்டாகவில்லை என்பதை எல்லாம் பார்க்கும்போது, அதற்கு என்னதான் காரணம் என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கு விடைகள்தான் ஜாதகத்தில் மறைந்திருக்கும் தோஷம். ஒரு சிலருக்கு தோஷங்கள் நிறையவே இருக்கும். ஒரு தோஷம் மட்டுமல்ல மூன்று நான்கு தோஷங்கள் அவர் ஜாதகத்தில் மறைந்திருக்கும். ஒரு சிலரின் ஜாதகத்தில் ஏதாகிலும் ஒரு தோஷம் இருக்கும். தம்முடைய வாழ்க்கையில் சங்கடங்களைத் தவிர வேறு ஒன்றையும் அனுபவிக்காதவர்களின் ஜாதகங்களை பார்க்கும்போது அவற்றை முறையான ஜோதிடர்களால் தெரிந்து கொள்ள முடியும். ஜோதிடர்கள் என்று சொல்லிக்கொண்டு பஞ்சாங்கத்தை மட்டுமே வைத்து நாள் குறித்து கொடுப்பவர்களுக்கு இவற்றைக் கண்டு பிடித்து கூறுவதில் போதுமான ஆற்றல் என்பது இருக்காது என்பதே உண்மை.

தோஷங்கள் என்று வருகின்ற போது ஒவ்வொரு தோஷமும் நம்முடைய கடந்த பிறவியில் நாம் செய்த பாவங்களின் வழியாக நமக்கு வருவதுதான். அந்த தோஷங்களில் பிரம்மஹத்தி தோஷம் என்பதும் ஒன்று.

பிரம்மஹத்தி தோஷம் உண்டாக காரணம்

முற்பிறவியில் குருவிற்கு துரோகம் இழைத்ததாலும், கொலை பாவம் புரிந்ததாலும், சுவாமி சிலையை திருடியதாலும், ஆலயத்திற்கு சேதம் விளைவித்ததாலும், ஆலய சொத்தை அபகரித்ததாலும், வெள்ளிக்கிழமையில் நல்ல பாம்பை கொன்றதாலும், ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்களித்து அனுபவித்து விட்டு ஏமாற்றியதாலும், கொடுமையான பாவங்களை செய்ததாலும், தாய்க்கு உணவளிக்காமல் விரட்டி அடித்ததாலும், பசுவைக் கொன்றதாலும், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ததாலும், பிராமணரை வதைத்ததாலும் பிரம்மஹத்தி தோஷம் பற்றுவதாக நமது புராணங்கள் தெரிவிக்கிறது.

ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் உள்ளதை எப்படி தெரிந்து கொள்வது ?

ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதே வீட்டில் அவருடன் சனி பகவான் இணைந்திருந்தால் அந்த ஜாதகம் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. குருவுடன் சனி இணைந்து ஒரே வீட்டில் இருந்தாலும், குரு – சனி ஆகிய இரண்டு கிரகங்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும், ஒருவரின் நட்சத்திர சாரத்தில் மற்றவர் இருந்தாலும் அந்த ஜாதகமும் பிரம்மஹத்தி தோஷம் உடைய ஜாதகமாகும். லக்னத்திற்கு நாலாம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, ஆறு, எட்டு, பனிரெண்டாம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும், பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிலும், பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அல்லது அசுப கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் அந்த ஜாதகமும் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகமாகும். ராகு இருக்கும் ராசியில் இருந்து ஐந்து அல்லது ஒன்பதாம் வீடுகளில் சனி குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் அந்த ஜாதகமும் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகம் என்று கூறப்படுகிறது.

பிரம்மஹத்தி தோஷத்தினால் மனிதர்கள் மட்டும் அல்லாமல், இறைவனின் அவதாரங்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக, இராமாயணப் போரில் சிறந்த தெய்வ பக்தனான ராவணனைக் கொன்ற காரணத்தினால் ராமபிரானுக்கும், மகிஷாசுரன் என்னும் அரக்கனைக் கொன்றதால் சப்த கன்னிகளுக்கும், பிரம்மனின் தலையை வெட்டியதால் பைரவருக்கும், பிராமணனை கொன்றதால் வீரசேன வரகுண பாண்டிய மன்னனுக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகி அதற்கு அவர்கள் பரிகாரம் செய்து கொண்டதை புராணங்கள் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது.

பிரம்மஹத்தி தோஷத்தால் ஏற்படும் பாதிப்பு

என்ன உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்காமல் போகும். முயற்சிகளில் தோல்வி, பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்பில் தடை, அப்படியே வேலை அமைந்தாலும் அது தகுதிக்குரியதாகவோ, எதிர்பார்த்ததாகவோ இருக்காது. வேலையில் நிம்மதியை விட தொல்லைகளே நிறைந்திருக்கும். திறமை இருந்தும் அந்தஸ்து என்பது இருக்காது, ஒரு சிலருக்கு அவர்களுடைய குடும்பத்தில் கூட மரியாதை இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றமற்ற நிலை. ஒரு சிலருக்கு தங்கள் தொழிலை மூட வேண்டிய நிலை, எப்போதும் மனக்குழப்பம், எந்த ஒன்றிலும் போராட்டம், செய்யாத தவறுக்கு தண்டனை, திருமணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து தடைகள், கிடைக்க வேண்டிய ஒவ்வொன்றும் நெருங்கி வரும் நேரத்தில் தட்டிக் கொண்டு போவது, எந்த வகையான சிகிச்சை அளித்தாலும் நோயின் குணமாகாத நிலை, தொழிலில் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை, என்று ஒவ்வொன்றிலும் தடைகளும் போராட்டமுமாகவும் மாறிவிடும் வாழ்க்கை.

பரிகாரம் !

தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரம்மஹத்தி தோஷத்திற்குரிய பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த ஆலயத்தை பிரம்மஹத்தி தோஷத்திற்குரிய பரிகாரத்தலமாகவே கூறப்படுகிறது. இங்கு சென்று பிரம்மஹத்தி தோஷத்திற்குரிய பரிகாரம் செய்து அங்குள்ள வாசல் வழியே மூலஸ்தனத்திற்கு சென்று பூஜை பொருளை பெற்றுக்கொண்டு மறு வாசல் வழியே வரவேண்டும்.

இத்தலத்தின் சிறப்புகள் பற்றி அறியும் போது, ஒரு முறை மாலை நேரத்தில் வரகுண பாண்டியன் வேட்டைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில் உறங்கிக் கொண்டிருந்த அந்தணர் மீது குதிரையின் காலடி பட்டதால் அவர் இறந்து விட்டதாகவும், இது வரகுண பாண்டியனுக்கு தெரியாமல் நடந்தது என்றாலும் அந்த அந்தணருடைய ஆவி வரகுண மன்னனைப் பற்றி கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து விடுபட வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரிடம் வேண்டியதாகவும் அப்போது வரகுண பாண்டியனின் கனவில் இறைவன் தோன்றி அவரின் எதிரியான சோழ நாட்டில் உள்ள திருவிடைமருதூர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் எனக் கூறியுள்ளார். எதிரியின் நாடான சோழ நாட்டுக்கு எப்படி செல்வது என வரகுணப்பாண்டியன் நினைத்துக் கொண்டிருந்தபோது பாண்டிய நாடு மீது சோழ மன்னன் படையெடுத்து வருவதாக செய்தி கிடைத்து போருக்கு சென்ற வரகுணப் பாண்டியன் அந்தப் போரில் வென்று சோழர் படைகளை அவர்களது எல்லைக்கு விரட்டியதுடன், திருவிடைமருதூர் கோயிலின் கிழக்கு வாயில் வழியாக நுழைந்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டுள்ளார். அவர் கோயிலுக்குள் நுழையும்போது அவரைப் பற்றியிருந்த அந்த ஆவியால் மூலஸ்தனத்திற்குள் செல்ல முடியவில்லை. அதனால், பூஜை முடிந்து அவர் திரும்பி வரும்போது மீண்டும் அவரைப் பற்றிக்கொள்ளும் நோக்கத்துடன் அந்த வாசலிலேயே அந்தணரின் ஆவி மறைந்தபடி காத்திருந்ததாகவும், அப்போது இறைவன் வரகுண பாண்டியனிடம் நீ மேற்கு வாயில் வழியாக வெளியே செல் எனக் கூறினாராம். அதன்படியே அவர் மேற்கு வாயில் வழியாக வெளியே சென்றதால் வரகுண பாண்டியனைப் பற்றி இருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாம். வரகுண பாண்டியன் சென்றதுபோல் இன்றும் இந்த கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கிழக்கு வாயிலில் நுழைந்து மேற்கு வாயில் வழியாக வெளியே செல்வது வழக்கமாக உள்ளது.

பிரம்மஹத்தி தோஷத்திற்கு இந்த ஆலயம் சிறப்பு மிக்கதாக அறியப்படுகிறது.

அடுத்து, ராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள தேவிபட்டினத்திற்கு சென்று, அங்கு கடலுக்கு அடியில் இராம பிரானால் அமைக்கப்பட்ட நவகிரகங்களை வழிபாடு செய்து, கடலில் நீராடி பெருமாளை மனம் உருகி வழிபட்டு வர பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும் என்றும் கூறப்படுகிறது.திருவிடைமருதூர், தேவிபட்டினம் என்ற இரண்டு இடங்களுக்குமே செல்ல இயலாதவர்கள் அமாவாசை நாளில் அருகிலுள்ள சிவாலயத்திற்கு மாலை ஐந்து மணிக்கு சென்று சிவனை ஐந்து முறை வலம் வந்து வணங்கலாம். இதேபோல் தொடர்ந்து ஒன்பது அமாவாசை நாட்களில் செய்து வர பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாவதுடன் திருமணத்தில் இருந்த தடை நீங்கும், தீராத நோய் அகலும், வேலைகளில் இருந்த தடைகள் விலகும், குழந்தை பாக்கியம் உண்டாகும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மாறும், தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் நீங்கும். தடைபட்டிருந்த காரியங்கள் நடைபெறும்.

ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

ShareTweetSendShare

Related Posts

#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட  ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி! அடுத்த மைல் கல்லை எட்டிய இந்தியா

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி! அடுத்த மைல் கல்லை எட்டிய இந்தியா

July 23, 2021
mamta

மம்தா பானர்ஜிக்கு கிடைத்த மரண அடி ! மேற்கு வங்கத்தில் ஆட்சியை தீர்மானிப்பது நீதிமன்றம் தான்!

August 19, 2021

தமிழகத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி ! 30ஆம் தேதி வரை ஊரடங்கு !

April 13, 2020
மத்திய பாஜக அரசு மீது பொய்யை பரப்பாமல் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள் – வானதி சீனிவாசன்..!

மத்திய பாஜக அரசு மீது பொய்யை பரப்பாமல் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள் – வானதி சீனிவாசன்..!

September 16, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!
  • காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !
  • பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.
  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x