பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி, சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். நீங்கள் இந்துவா என கேட்டு அவர்களின் உயிர்களை பறித்தனர். இதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
அதன்படி நள்ளிரவு முதல் இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஆகிய தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
பஹல்காம் தாக்குதலுக்கு கொடுக்கப்படும் இந்த பதிலடியை பலரும் வரவேற்று வருகின்றனர். இதுகுறித்து பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சந்தோஷ் ஜக்தலே என்பவரின் மகள் அஸ்வரி ஜக்தலே கூறுகையில், “ராணுவத்தின் பதிலடி தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்தமுறை மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வருகிறது. பிரதமர் மோடி சரியான முறையில் ரிவெஞ்ச் எடுத்துள்ளார். இதற்கு சிந்தூர் என்று பெயரிடப்பட்டது எங்கள் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. எங்கள் கண்ணீர் நிற்க போவதில்லை. சிந்தூர் என்பது திருமணத்தின் அடையாளம். தீவிரவாதிகள் அதை அழிக்க நினைத்தனர். தற்போது அதற்குண்டான பிரதிபலனை அனுபவிக்கிறார்கள்.” என்றார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழி தாக்குதல் மேற்கொண்ட உடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் மார்கோ ரூபியோவை தொடர்பு கொண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா மிகுந்த நிதானத்தைக் காட்டியுள்ளது.
25 இந்தியர்களும், ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இபாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என இந்திய ராணுவம் பெயரிட்டது.தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதும் நீதி நிலைநாட்டப்பட்டது, ஜெய்ஹிந்த் என இந்திய ராணுவம் அறிவித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத அமைப்புகளை அழிப்பதே இந்த சிந்தூரின் நோக்கமாகும்.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகளின் உயிரை பறித்த கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடி சப்தங்கள் கேட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.ஆபரேஷன் சிந்தூர் சாத்தியப்படுத்தியது எப்படி என்பது குறித்து விரிவான விளக்கத்தை இன்று அளிப்பதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள அனைத்து வான்வழி பாதுகாப்பு கருவிகளும் செயல்படத் தொடங்கிவிட்டன.
பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.சொந்த மண்ணில் இருந்தபடியே பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அடியோடு அழித்தன முப்படைகள்பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டவுடனேயே பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
பாகிஸ்தானில் தீவிரவாதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன. அது போல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளது.டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.