Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பஹல்காம் தாக்குதல்: ஏன் ருத்ராட்சம் அணிந்திருக்கிறீர்கள் ..குரான் படியுங்கள்… முஸ்லீம்கள் இந்துக்கள் தனித்தனியே பிரியுங்கள்..சுற்றலா பயணிகள் வாக்குமூலம்.

Oredesam by Oredesam
April 25, 2025
in இந்தியா, செய்திகள்
0
பஹல்காம் தாக்குதல்: ஏன் ருத்ராட்சம் அணிந்திருக்கிறீர்கள் ..குரான் படியுங்கள்… முஸ்லீம்கள் இந்துக்கள் தனித்தனியே பிரியுங்கள்..சுற்றலா பயணிகள் வாக்குமூலம்.

பஹல்காம்

FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மகன் பேசுகையில், அங்கு பயணிகளை தாக்கிய பயங்கரவாதிகள் முஸ்லீம் – இந்துக்கள் என தனியாக பிரிக்க சொன்னதை கேட்டதாக கூறியுள்ளார்ஜ ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு முகமைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், தாக்குதலில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) உட்பட பல்வேறு விசாரணை முகமைகள் இந்தத் தாக்குதல் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

உயிரிழந்தவர்களில் குஜராத் மாநிலம் சூரத் நகரின் வராச்சா பகுதியை சேர்ந்த ஷைலேஷ் கல்தியா என்பவரும் ஒருவர். அவரும் தனது குடும்பத்தோடு பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள்ளார். தனது தந்தை ஷைலேஷ் கல்தியா பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததைஅவரது மகன் நக்ஷ் கல்தியா சம்பவ இடத்தில் இருந்து பார்த்துள்ளார் .

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

அந்த கோர நிகழ்வு பற்றி சிறுவன் கூறும்போது சில அதிர்ச்சி தகவலையும் கூறினான். சிறுவன் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ​​”மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காமில் நாங்கள் இருந்தோம். அப்போது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. பயங்கரவாதிகள் அப்பகுதிக்குள் நுழைந்ததை நாங்கள் உணர்ந்து மறைந்து இருந்தோம்.

ஆனால், அவர்கள் எங்களை கண்டுபிடித்தனர். இரண்டு பயங்கரவாதிகளை நான் நேரில் பார்த்தேன். அவர்களில் ஒருவர் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களை தனியாக பிரிந்து இருக்கும்படி கூறியதை நான் கேட்டேன். பிறகு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு சென்றனர். உள்ளூர்வாசிகள் உடனடியாக வந்து, நாங்கள் கீழே இறங்கிய ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்திய இராணுவம் வந்துவிடும் எனக் கூறினார்கள். பயங்கரவாதிகள் என் தந்தையை பேச விடவில்லை.” என்று இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவன் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறினான்.

அவரது மனைவி ஷீத்தல் கல்தியா ANI செய்தியாளரிடம் கூறும்போது, ​​” துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் ஒளிந்து கொள்ள ஓடி வந்தோம். ஆனால், அந்த பகுதி முழுவதையும் வெளிப்படையாக இருந்ததால் மறைந்திருக்க இடமில்லை. திடீரென எங்கள் எதிரில் ஒரு பயங்கரவாதி நின்றான். இந்துக்களை ஒருபுறமும், இஸ்லாமியர்களை மறுபுறமும் பிரிந்து நிற்குமாறு கட்டளையிட்டான். எல்லாருமே ஒரு நீளமான துப்பாக்கியை வைத்திருந்தார்கள். சுட்டுக் கொகொல்வதற்காக அங்கேயே நின்றுகொண்டிருந்தான். 6-7 பேரை எங்களுக்கு முன்னால் சுட்டுக் கொன்றான். சுடப்பட்ட 2-3 நிமிடங்களுக்கு மேல் அந்த ஆட்கள் உயிர் பிழைக்கவில்லை. காஷ்மீரில் ஹிந்து-முஸ்லிம் மோதலை நாங்கள் அனுபவிக்கவில்லை. பாகிஸ்தானியர்கள்தான் அங்கு மோதல்களை உண்டாக்குகிறார்கள் என்று நான் உணர்கிறேன்.” என தகவல்களை தெரிவித்தார்.

இது குறித்து மற்றொரு சுற்றுலா பயணி ஏக்தா திவாரி கூறுகையில், “எங்கள் குழுவில் 20 பேர் இருந்தோம். ஏப்ரல் 13 அன்று ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தோம். ஏப்ரல் 20 அன்று பஹல்காம் சென்றோம். அன்று எங்கள் குழுவினருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. அதனால், தாக்குதல் நடந்த பைசரன் பகுதிக்கு சுமார் 500 மீட்டர் முன்பாகவே அனைவரும் இறங்கினோம். சுற்றிலும் இருந்த சிலரின் நோக்கம் சரியாகத் தோன்றவில்லை. அவர்கள் எங்களிடம் குரான் படிக்கச் சொன்னார்கள்” என்றார்.

மேலும் நாங்கள் கோவேறு கழுதைகளில் (mule) ஏறிக்கொண்டிருந்தபோது, இரண்டு பேர் எங்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் என்னைப் பற்றியும், எங்கள் குழுவில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் விசாரித்தனர். நாங்கள் என்ன மதம், இந்துவா முஸ்லிமா என்றும் கேட்டனர். மேலும், குரான் படிக்கச் சொன்னார்கள். ஏன் ருத்ராட்சம் அணிந்திருக்கிறீர்கள் என்றும் கேட்டனர். என் சகோதரர் ருத்ராட்சம் அணிய பிடிக்கும் என்று சொன்னபோது, அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் அங்கிருந்து இறங்கி, மற்ற கோவேறு கழுதை ஓட்டுபவர்களின் உதவியுடன் திரும்பிவிட்டோம்.”

சிறிது நேரத்திலேயே, அவர்களில் ஒருவருக்கு ஒரு அழைப்பு வந்தது என்றும், சிறிது தூரம் சென்ற பிறகு, அவர் தொலைபேசியில் ரகசிய குறியீட்டு வார்த்தைகளில் “பிளான்-ஏ தோல்வியடைந்துவிட்டது” என்று கூறியதாகவும் ஏக்தா திவாரி தெரிவித்துள்ளார். 35 துப்பாக்கிகளை அனுப்புவது குறித்தும் அவர்கள் பேசினர் என்றும் அவர் கூறினார்.

“இந்த விஷயங்கள் என் சந்தேகத்தை ஆழப்படுத்தின. 35 துப்பாக்கிகள் பற்றி பேசிய பையனின் புகைப்படம் என்னிடம் உள்ளது. பயங்கரவாதிகளின் ஓவியங்கள் வெளியான பிறகு, நான் அவரை அடையாளம் கண்டுகொண்டேன்” என்று ஏக்தா திவாரி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ஏக்தா திவாரியின் கணவர் பிரசாந்த் திவாரி கூறியதாவது: “நாங்கள் வைஷ்ணோ தேவி தரிசனத்துக்காக இங்கிருந்து புறப்பட்டோம். கட்ராவில் வைஷ்ணோ தேவியை தரிசித்த பிறகு, ஒரு முழு பேக்கேஜ் டூர் எடுத்தோம். எங்கள் குழுவில் 20 பேர் இருந்தனர். என் மனைவியுடன் நடந்து வந்த ஒருவன் அவரை குரான் படிக்கச் சொன்னான். அதை அவர் என்னிடம் தெரிவித்தார். நாங்கள் அங்கிருந்து திரும்பிச் செல்லச் சொன்னபோது, அவர்கள் எங்களுடன் சண்டையிடத் தொடங்கினர்.”

அவர்களை சந்தேகிக்க மிக முக்கியமான காரணம், அவர்கள் திரும்பத் திரும்ப குரான் படிக்கச் சொன்னதுதான் என்றும், எங்கள் முகவரியையும் கேட்டனர் என்றும், துப்பாக்கிகளை அனுப்புவது பற்றிய பேச்சு எங்கள் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது என்றும் அவர் கூறினார். ஏக்தா திவாரியின் இந்த வாக்குமூலம் பாதுகாப்பு முகமைகளின் விசாரணையில் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாட்களாகவே மதரீதியாக மக்களை பிரித்து பார்த்தபடி வந்த தீவிரவாதிகள், பிறகு நேரம் எடுத்து துப்பாக்கி சூடு நடத்தியிருப்பதாக இந்த பெண்ணின் வாக்குமூலம் கருத வைக்கிறது.

https://x.com/ians_india/status/1915448601859543193?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1915448601859543193%7Ctwgr%5E057f5e01a666c4d57d1aab1d36b0722c98810945%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.oneindia.com%2Fnews%2Findia%2Fthey-asked-us-to-read-quran-womans-shocking-account-of-meeting-pahalgam-attackers-698847.html

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் பிரதமர் நரேந்திரமோதி வேண்டுகோள்.

March 20, 2020
Drugs smuggled

மசாலா பாக்கெட்டுகளில் போதை பொருள் கடத்தல்! ஜாபர் சாதிக்கின் மாஸ்டர் மைண்ட்! களத்தில் இறங்கும் என்.ஐ.ஏ

March 14, 2024
தலைநிமிரும் இந்தியா தலைமகனால்! உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்! வெளிவந்த ஆய்வு முடிவு!

பிரதமர் மோடியின் மாஸ் உதான் திட்டம் மெகா வெற்றி !

October 20, 2024
காங்கிரஸ் ஆட்சியில் 45,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது!சரத்பவார் அதிரடி மகாராஷ்ட்ராவில் ஆட்சி நிலைக்குமா?

காங்கிரஸ் ஆட்சியில் 45,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது!சரத்பவார் அதிரடி மகாராஷ்ட்ராவில் ஆட்சி நிலைக்குமா?

June 28, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x