எதற்கும் துணிந்தவன் ஏன் படத்தை தியேட்டரில் ரீலிஸ் செய்யவில்லை! செய்திருந்தால் தெரிந்திருக்கும்! சூர்யாவை மிஞ்சிய சந்தானம்!

சூர்யாவுக்கு ஆதரவும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன. சமூகவலைதளங்களில் #WestandwithSurya என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது. சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமல்ல சில அரசியல் கட்சிகளும் சமூகவலைத்தளத்தில் ஆதரவு அளித்துவந்தார்கள். இந்த நிலையில் நடிகர் சந்தானம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஒருவரை உயர்த்துவதற்காக மற்றவர்களை தாழ்த்தி பேசக் கூடாது என கூறியிருந்தார்.

மேலும் அவர் கூறியது இந்து மதம் பிடிக்கும் என்றால் தூக்கி கொண்டாடுங்கள் அது தவறில்லை. ஆனால் அடுத்த மதத்தினை தாழ்த்தி தன் மதத்தை பெரிது என கொண்டாடாதீர்கள் என கூறினார்.ஆனால் சூர்யா தரப்பினர் இதை திசை மாற்றி வேண்டுமென்றே சந்தானம் பக்கம் திரும்பி சாதி வெறியர் சந்தானம் என ட்ரெண்ட் செய்தார்கள்.

இதன் எதிர்வினை சூர்யாவின் பக்கம் திரும்பியது. வன்னியர்களுக்கு எதிரானவர் சூர்யா என ஒரு ஹாஷ்டாக் பரவியது இது சூர்யா தரப்பிற்கு பெரும் தலைவலியானது. ஏனென்றால் தமிழகத்தில் பெருவாரியான மக்கள் வன்னியர் சமுதாயம் ஆகும். அவர்களிடம் எதிர்ப்பு சம்பாதித்துள்ளதால் இது அரசியல் ரீதியாக பேசப்பட்டது ஆனால் இந்த ஹாஸ்டேக் இளைஞர்கள் அதிகம் செய்வதால் சூர்யாவுக்கு மற்றும் கார்த்திக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வட தமிழகத்தில் இனி இவர்களின் படம் ஓட வாய்ப்பில்லை என்பதை இந்த ஹாஸ்டக் காட்டுகிறது. மேலும் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பிம்பத்தையும் சூர்யாவிற்கு கொடுத்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சந்தானத்திற்கு ஆதரவாக #WeStandWithSanthanam என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி விட்டது. சூர்யா ரசிகர்களை மிஞ்சும் அளவிற்கு இந்த ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது. அதுவும் வெள்ளித்திரையில் சில ஆண்டுகளாக தான் சந்தானம் இருக்கிறார். ஆனால் சூர்யா பல ஆண்டுகளாகவும் அவரின் அப்பா எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து திரை உலகில் உள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இதுமட்டுமில்லாமல் பல ஊடகங்கள் பிரபலங்கள் சூர்யாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்தார்கள். ஆனால் சந்தானத்திற்கு அப்படி இல்லை ரசிகர்கள் மற்றும் அவர் சார்ந்த சமூகத்தினர் ஆதரவு கொடுத்தார்கள்.

இதனை தொடர்ந்து எதற்கும் துணிந்தவர் சூர்யா என அவரது ரசிகர்கள் பெருமைப்பட்டு வந்தநிலையில் அதற்கும் ஆப்படிக்கும் விதமாக வன்னிய குலத்தை சாந்தவர்கள் எதற்கும் துணிந்தவன் எதற்கு OTT யில் படம் ரீலிஸ் செய்தார். தியேட்டர்களில் ரீலிஸ் செய்திருந்தால் அவர் எதற்கும் துணிந்தவன் என சொல்லலாம் எனவும்எதற்கும் துணிந்தருக்கு எதற்கு போலீஸ் பாதுகாப்பு என வச்சு செய்துவிட்டார்கள்.

Exit mobile version