கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது லஷ்கர் இ தொய்பாவின் அமைப்பின் துணை அமைப்பாகும்.
இந்த தாக்குதலால் தற்போது இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே தான் பயங்கரவாத தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பொதுவாக பயங்கரவாத தாக்குதலை நடத்திவிட்டு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் நாடகமாடுவது வழக்கமான ஒன்று தான். அதனை தான் இந்த முறையும் பாகிஸ்தான் செய்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியை நம் நாடும் கொடுத்து வருகிறது. முதற்கட்டமாக நம் நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றி வருகிறது. சிந்து நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா திட்டத்தை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதையடுத்து விரைவில் பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடி கொடுக்க உள்ளது. பாகிஸ்தானை பொறுத்தவரை சிந்து நதி நீர் என்பது தான் உயிர் நாடியாகும். 21 கோடி மக்கள் அந்த தண்ணீரை நம்பி தான் உள்ளனர்.
இதற்கிடையே தான் நம் நாடு சிந்து நதி நீரை நிறுத்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. இது பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக மாற உள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் முஷ்டி முறுக்கி கொண்டு நம் நாட்டுடன் மோத தயாராகி வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்களை குவிப்பதோடு, துப்பாக்கிச்சூடும் நடத்தி வருகிறது. இதற்கு நம் நாட்டு வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் படை வீரர்கள் ஓடஓட விரட்டி அடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தானுக்கு உலக வங்கி முக்கிய வார்னிங்கை செய்துள்ளது. அதாவது இந்த நிதி ஆண்டில் பாகிஸ்தானில் ஒரு கோடி பேருக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக வங்கி சார்பில், ‛‛பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி என்பது 2.7 என்ற சதவீதத்துக்கு சரியும். நாட்டின் நிலையற்ற தன்மை தான் இதற்கு காரணம். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் என்பது வருவாய் பற்றாக்கறையுடன் தான் இருக்கம். அதேபோல் நாட்டின் கடன் என்பது உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளது.
காலநிலை மாற்றத்தால் பாகிஸ்தானில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். அரிசி, கோதுமை உற்பத்தி என்பது பெரிதும் பாதிக்கப்படும். இதனால் பாகிஸ்தானில் இந்த நிதியாண்டில் ஒரு கோடி பேருக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும். இது நாட்டில் நிலவும் வறுமையை இன்னும் அதிகப்படுத்தும். வேலைவாய்ப்பின்மை என்பது ஏற்படும். கூலிகள் குறையும்” என்று எச்சரித்துள்ளது. ஆனாலும் கூட பாகிஸ்தான் அதனை எல்லாம் பற்றி கவலைப்படாமல் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நிதி ஒதுக்கீடு செய்து எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதலை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கையால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான், பஹல்காம் விவகாரத்தில் நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று கூறியுள்ளது. இதனை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார்.
பஹல்காம் விவகாரத்தில் தங்களை தேவையில்லாமல் இழுப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து மழுப்பி வந்த நிலையில், தற்போது நடுநிலையான விசாரணைக்கு தயார் என சொல்லியிருப்பது இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளை கண்டு அஞ்சி பாகிஸ்தான் இறங்கி வருவதை காட்டும் விதமாக அமைந்து இருக்கிறது.மேலும் உள்நாட்டு பாகிஸ்தானில் உள்நாட்டு போறும் அதிகரித்த வண்ணம் உள்ளதால் பாகிஸ்தான் என்ற நாடே காணாமல் போகும் நிலை உருவாகியுளது. மேலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளவர்களை நாடு கடத்த உலகநாடுகள் முடிவெடுத்துள்ளது இதனால் இதனால் பல நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் இந்தியா பாகிஸ்தான் மோதல் என்பது உலக நாடுகளுக்கும் தீவிரவாதத்திற்கும் இடையே உள்ள சண்டையாக மாறியுள்ளது.