திமுக அரசு வழங்கி உள்ள மோசமான பரிசு சிபிஎம்,சிபிஐ உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு.

12 மணி நேர வேலை சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இன்னும் அடுத்த சில தினங்களில் மே தின கொண்டாட்டங்களுக்காக தமிழ்நாடு அரசு வழங்கி உள்ள மோசமான பரிசு என சிபிஎம்,சிபிஐ உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு.

தமிழக சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு.

தொழிலாளர்களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதா, தமிழக சட்டமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மமக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும் சட்டமன்றத்தில் இருந்தும் வெளிநடப்பு செய்தன. முதல்முறை ஒரு சட்ட மசோதாவிற்கு இவ்வளவு எதிர்ப்பு திமுக அரசிற்கு எதிராக கிடைத்திருக்கிறது. இந்த சட்ட மசோதாவை சட்டமன்ற தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு கொண்டு வந்ததற்காக இதைக் கொண்டு வரவில்லை.

குறிப்பிட்ட சில தொழிலுக்கு மட்டுமே இது பொருந்தும். எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். தன்னார்வ அடிப்படையில் 12 மணி நேரம் வேலை செய்வதாக கூறுவோருக்கு மட்டுமே சட்டம் பொருந்தும். வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன.

எனவே தொழிற்சாலைகளில் நெகிழ்வுத்தன்மை வர வேண்டும் என்பதற்காக சட்டம் கொண்டு வரப்படுகிறது என்று கூறினார். மேலும் தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கணேசன் தெரிவித்தார். ஆனால் அரசியல் கட்சிகள் இதை ஏற்கவில்லை.

இதுகுறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து :-

தொழிலாளர் விரோத போக்கை தான் திமுக இன்று கடைபிடித்திருக்கிறது. மே தின வரலாறே 8 மணி நேர வேலையை மையமாக வைத்து தான் வந்தது. இப்படி ஒரு சூழலில் 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவை கொண்டு வந்ததை ஏற்க முடியாது. தொழிலாளர்களை வஞ்சிக்கும் போக்கு என்பது தெளிவாக தெரிகிறது. அடிப்படை விஷயமே 8 மணி நேரம் தான். இந்த சட்டத்தை கொண்டு வந்தால் எல்லா நிறுவனங்களும் அமல்படுத்த வாய்ப்புள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்பாலகிருஷ்ணன் கருத்து

இது ஒரு மோசமான சட்டம். அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஏன் இந்த சட்ட முன்வடிவை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவகம் செய்வதை போன்ற சூழலை தான் காட்டுகிறது. மே தினக் கொண்டாட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்த மாநிலம் தமிழ்நாடு. இப்படி ஒரு சூழலில் 12 மணி நேர சட்டத்தை ஏற்கவே முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சிந்தனைச்செல்வன், விசிக கருத்து .

இது நடைமுறைக்கு வந்தால் தொழிலாளர்கள் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் கொண்டு வரப்பட்ட 44 வாரியங்களும் அந்தஸ்தை இழந்துவிடும். இந்த சட்டம் யார் மீதும் திணிக்கப்படாது என்று அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் நடைமுறையில் அப்படி சாத்தியமில்லை. தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கு வழிவகுக்கும். எனவே இந்த சட்டத்தின் திரும்ப பெற வேண்டும் என்று விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Exit mobile version