தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தபால்காரர் என்று விமர்ச்சித்த விளம்பர அரசின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டங்கள் வலுத்து வருகிறது குறிப்பாக எதிர்கட்சியாக இருந்த போது எதற்காக கோரிக்கைகளுடன் ராஜ்பவனுக்கு சென்றீர்கள் என கேள்விகள் எழுந்துள்ளது மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் ஏப்ரல் 19 குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. அதில் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய அனைத்து மசோதாக்களும் உச்ச நீதிமனறம் தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்திருந்தது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், டெல்லியில் இன்று ஆளுநர் ரவி ஜெகதீப் தன்கரை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஜெகதீப் தன்கர், ஆளுநர் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது…
இதற்கிடையே பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில், ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2022 முதல் ஆண்டுதோறும் துணைவேந்தர்கள் மாநாட்டை ஊட்டியில் நடத்தி வருகிறார். இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்று வந்தனர்.. மேலும், இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில் பங்கேற்குமாறு மாநிலத்தில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகங்களின் வேந்தரா ஆளுநரே தொடர்வதால் துணை வேந்தர்கள் மாநாடு நடத்தும் உரிமை ஆளுநருக்கு இருக்கிறது. மேலும், இந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள துணை குடியசு துணை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக துணை குடியசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறிய கருத்துகள் பேசுபொருள் ஆன நிலையில், ஆளுநர் ரவி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஏற்கனவே ஆளுநர் கொடுத்த ஆறு அமைச்சர்கள பைல்களின் அடிப்படையில் இருவர்அதாவது வேலூர் அமைச்சர் மற்றும் திருச்சி திமுகவின் தூண் அமைச்சர் வீடுகளில் ரைடு பாய்ந்துள்ளது. மேலும் இன்னும் சில மாதங்களில் தி.மு.க-வுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் முளைக்கலாம்’ என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது எல்லாம் இனி எல்லாம் சைலன்ட் மூவ் தான் என்கிறார்கள். திமுகவில் முதல்வரை தவிர அவரை சுற்றி இருக்கும் அனைத்து அல்லக்கைகளுக்கும் விலங்கு தயாராக உள்ளது. முதல்வரே கொஞ்சம் அமைதியாக இருங்கள் நீங்கள் பேசிவிட்டு போய்விடுவீர்கள் மாட்டி கொள்வது நாங்கள் தானே என அறிவாலயம் அழுது புலம்ப தொண்டங்கியுள்ளது .