Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கிராமப்புற இளைஞர்கள் முன்னேற கூடாது என்பதே திமுக காங்கிரஸ் கட்சிகளின் திட்டமா ?

Oredesam by Oredesam
August 24, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

ரயில்வே, வங்கி, மத்திய அரசு பணியாளர் பணிகளுக்கு, அதாவது, கெசட்டட் அதிகாரி அல்லாத குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளுக்கு தற்போது அந்தந்த துறைசார்ந்த பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மத்திய பணியாளர் வாரியம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு மையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, முதல் நிலை தகுதிக்கான பொதுவான தகுதித் தேர்வு நடத்தும் வகையில், தற்போது ‘தேசிய பணியாளர் தேர்வு முகமை’ அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 2020-21 நிதி நிலை அறிக்கையிலேயே இது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரூபாய் 1517. 57 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

மூன்று தேர்வு வாரியங்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் வேலைதேடுவோர் தனித்தனியாகத் தேர்வு எழுத வேண்டியதில்லை. பணியாளர் தேர்வு நடைமுறைகளை இந்த தேசிய முகமை எளிதாக்குவதோடு, கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் இந்த தேர்வுகளுக்கு அவர்கள் செலவிடும் நேரம் மற்றும் பயண சுமையை குறைக்கும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வு நடத்தப்படும் என்பது சிறப்பானது. தேர்வு மைய வசதிகள் தொடர்பான பிரச்சினைகளை பெருமளவில் குறைக்கும். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறும் என்பதும், ஆன்லைன் மூலமாகவே திறனறி தேர்வுகள் நடத்தப்படும் என்பதும் கூடுதல் சிறப்பு.

இதில் பெறும் மதிப்பெண்கள், மூன்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

தங்களுடைய மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள விரும்புவோர், எவ்வளவு முறை வேண்டுமானாலும் வயது வரம்புக்குட்பட்டு தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுவதோடு, அதில் பெற்ற அதிகமதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

அதே போல், பட்டதாரிகள், பத்தாம் வகுப்பு படித்தவர்கள், மேல்நிலை பள்ளி முடித்தவர்களுக்கு தனித்தனியாக தேர்வு நடத்தப்படும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வி தாள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமலில் உள்ள இடஒதுக்கீடு முறை தொடரும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளது.

ஒரே தேர்வு நடத்துவதன் மூலம் தற்போதைய நீண்ட கால தேர்வு முறை அகற்றப்பட்டு பணியாளர் தேர்வு விரைந்து நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள மூன்று துறைகளுக்கான தேர்வாக இவை இருந்தாலும், எதிர்காலத்தில், ‘விருப்பப்பட்டால்’ மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் கூட இந்த தகுதி தேர்வின் அடிப்படையில், தங்கள் நிறுவனங்களின் பணியாளர் நியமனங்களை முடிவு செய்வது, தொடர்புடைய அமைப்புகளின் பணியாளர் தேர்வுக்கான கால விரயம் மற்றும் நிதி விரயத்தை அதிகளவில் குறைக்கும்.

கல்வியறிவு அதிகமுள்ள தமிழகத்தில் கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு வகைகளில் நலன் பயக்கும் இந்த ‘தேசிய பணியாளர் தேர்வு முகமை’ அமைக்க ஒரு சில கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பை தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சீர் திருத்தமானது, மாநில உரிமைகளை பறிக்கும் என்றும் மொழி ரீதியான பிரச்சினைகளை உருவாக்கும் என்றெல்லாம் உள்நோக்கத்தோடு விமர்சனங்களை செய்வதன் மூலம், சீர்திருத்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கின்றவர்களின் எண்ணங்களை மக்கள் தவிடு பொடியாக்குவார்கள் என்பது உறுதி.

கட்டுரை:- நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர்,
தமிழக பாரதிய ஜனதா கட்சி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சக்சஸானது ஆபரேஷன் லோட்டஸ் கோவாவில்  முன்னாள் முதல்வர் உட்பட 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

சக்சஸானது ஆபரேஷன் லோட்டஸ் கோவாவில் முன்னாள் முதல்வர் உட்பட 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

September 14, 2022
ஜோதிடம் என்பது உண்மையா ! பொய்யா ?

ஜோதிடம் என்பது உண்மையா ! பொய்யா ?

August 11, 2023
விடியல் விடியல்னு கேள்விபட்ருக்கோம் ஆனா இந்த மாதிரி விடியல பார்த்தது இல்லை முதல்வரை பங்கம் செய்த சென்னைவாசிகள்!  வைரல் வீடியோ!

விடியல் விடியல்னு கேள்விபட்ருக்கோம் ஆனா இந்த மாதிரி விடியல பார்த்தது இல்லை முதல்வரை பங்கம் செய்த சென்னைவாசிகள்! வைரல் வீடியோ!

November 10, 2021
விவசாயிகளுக்கான 100வது கிசான் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

விவசாயிகளுக்கான 100வது கிசான் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

December 29, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x