கிருஸ்துவராக மதம் மாற சொல்லி தலித் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்! நடு ரோட்டில் விரட்டி விரட்டி அடித்த சம்பவம்!

தற்போது நாடு முழுவதும் இந்து மதத்தினை எப்படியாவது அழித்து விடவேண்டு என்ற நோக்கத்துடன் ஒரு கும்பல் மதமாற்றம் செய்யும் தொழிலை மேற்கொண்டுள்ளது. இந்துக்கள் என்ற போர்வையில் அரசாங்க சலுகைகைள் மற்றும் அரசு வேலையை பெற்றுக்கொண்டு பணத்திற்காக வேறு மதம் தழுவுகின்ற சம்பவமும் அரங்கேறி வருகிறது.

மேலும் மதம்மாறிய அரசு ஊழியர்கள் தனக்கு கீழ் வேலைசெய்பவர்களுக்கு பணமோகத்தை காட்டி அவர்களையும் மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சலுகைகளை பெற வேதனைக்குரிய அதிர்ச்சியான சம்பவம். வேலை தேடுபவர்கள்,காதல் தோல்வி மாணவர்களுக்கு பண மேகத்தை காட்டி கிடைக்கும் இடெமெலாம் மதமாற்ற பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கிருஸ்துவ பெண்ணை காதலித்து மணந்த இளைஞரை சேர்த்து வைப்பதாக கூறி தேவாலயத்திற்கு அழைத்து சென்று இளைஞரை மதம் மாற வற்புறுத்தி உள்ளார்கள். மேலும் அந்த இளைஞர் மதம்மாற மறுத்ததால் வீதியில் விரட்டி விரட்டித் தாக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் , ஆனத்தலவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மிதுன்கிருஷ்ணா. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர் தீப்தி 22 வயது மிதுன்கிருஷ்ணாவும் தீப்தியும் 2 வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். மேலும் மிதுன்கிருஷ்ணா இந்து மதத்தை சேந்தவர் தீப்தி கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர். வேறு வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டில் இவர்களின் காதலுக்கு மிகப்பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் 31 ந்தேதி மிதுன்கிருஷ்ணவும் தீப்தியும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துளளார்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி பொணாக்காட்டில் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். தீப்தியின் பெற்றோர் தங்கள் மகளை, மிதுன் கிருஷ்ணா கடத்திச்சென்றுவிட்டதாக சிறையின்கீழ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அறிந்த மிதுன் கிருஷ்ணாவும், தீப்தியும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தீப்தி தன்னை யாரும் கடத்தவில்லை எனக்கு பிடித்து தான் கால்யாணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார். நான் மேஜர் என்பதால் மிதுன் கிருஷ்ணாசெல்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் காதல் திரைப்படத்தில் வரும் சித்தப்பா போல பாசமாகப் பேசி, மணமக்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்த தீப்தியின் சகோதரர் டேனிஷ், “நடந்தவற்றை மறந்து இருவரையும் ஏற்றுக் கொள்கிறோம், எப்படி கோவிலில் வைத்து தாலி கட்டினீர்களோ ? அதேபோல தேவாலயத்தில் வைத்தும் திருமணம் செய்து வைக்கிறேன்” என்று கூறி அழைத்துச்சென்றுள்ளார்.

அங்குவைத்து மிதுன் கிருஷ்ணாவை, தங்கள் மத வழக்கப்படி பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் கிறிஸ்துவ மதத்துக்கு மாற வேண்டும் என்று கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு சம்மதிக்காமல் மிதுன்கிருஷ்ணா தீப்தியை அழைத்துக் கொண்டு தேவாலயத்தை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த டேனிஷ், தங்கள் வீட்டுப்பெண்ணை ஏமாற்றி தாலி கட்டியதோடு, தற்போது தங்கள் மதத்துக்கு மாறுவதற்கும் மறுக்கிறாயா ? எனக்கேட்டு மிதுன் கிருஷ்ணாவை தாக்கத் தொடங்கி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் மருத்துவர் டேனிஷ், மிதுன் கிருஷ்ணாவை விரட்டி விரட்டி வீதியில் வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுளளார் இந்த தாக்குதலில் கழுத்துப்பகுதியில் பலத்தகாயம் அடைந்த மிதுன் கிருஷ்ணா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளித்தும், கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தீப்தி தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் மிதுன் கிருஷ்ணாவை தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் டேனிஷ் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகிறார்கள்
மதம்மாற சம்மதிக்காத காதலனை காதலியின் சகோதரர் ஓடவிட்டுத் தாக்கிய இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

source : பாலிமர் செய்திகள்

Exit mobile version