மீண்டும் யு டியூபில் ஒரு சேனல் விஷமத்தனம் ஹிந்து அமைப்புகள் புகார்…

‘யு டியூப்’ விஷமத்தனம் ஹிந்து அமைப்பு புகார்.

‘மதக் கலவரத்தை துாண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளியிடும் ‘யு டியூப் சேனல்’ நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ரவிக்குமார் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: சமூக வலைதளமான ‘யு டியூப்’பில் ‘U2brutus’ என்ற பெயரில் சேனல் நடத்தி வருபவர்கள் ஹிந்து மத வேதத்தில் ஆபாசம் நிறைந்து இருப்பதாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோக்கள் குறித்து பேசும் பிரகாஷ் என்பவர் ஹிந்து மக்களின் மனம் புண்படும்படி பேசி வருகிறார். ஹிந்து மதத்தினரின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி அவர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்பதே வீடியோ வெளியிடுபவர்களின் நோக்கமாக உள்ளது.

உண்மைக்கு புறம்பான அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்பி பொது அமைதியை சீர்குலைக்க சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடும்யூ டியூப் சேனலை முடக்க வேண்டும். அவற்றை கையாளும் நபர்கள் உரிமையாளர்கள் பிரகாஷ் உள்ளிட்டோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில்கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து தனது சமூகவலைத்தளத்தில் கருத்தினை பதிவிட்டுள்ளார்.

இந்து மதத்தின் மீதும் இந்து தெய்வங்கள் மற்றும் இந்துமத புராணங்கள் மீதும் பொய் பரப்புரை அவதூறு பரப்பும் @U2Brutus_off என்ற யூடியூப் சேனல் மீது காவல்துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி உயர்திரு தமிழக DGP @tnpoliceoffl அவர்களிடம் புகார் மனு கொடுத்தோம். திரு.ராமரவிக்குமார்,இந்து தமிழர் கட்சி.

நிறுவன தலைவர்.திரு ஜெயம் எஸ்கே கோபி அவர்கள் -அகில உலக இந்து மத கட்சி தலைவர்,மற்றும் திரு.சோ வீரமணி.இந்து தமிழர் கட்சி மாநில குழு உறுப்பினர் |திரு.MKS குமார் அவர்கள்,இந்து புரட்சி முன்னனிநிறுவனத் தலைவர்,திருமதி.வளசை பிரியா அவர்கள் (மாநில பொதுச்செயலாளர் இந்து புரட்சி முன்னனி)ஆகியோர் ஒருங்கிணைந்து புகார் மனுவை தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி அவர்களிடம் கொடுத்தோம்.நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் !

Exit mobile version