தலித் இளைஞரை விவசாயிகள் போர்வையில் இருக்கும் தீவிரவாதிகள் கை காலை வெட்டிக் கொன்று இருக்கிறார்கள். கடந்த வாரம் உத்தரபிரதேசத்தில் கலவரம் அமைச்சர் மகன் பற்றி செய்திகளை பரப்பிய எந்த ஊரு ஊடகத்தையும் காணவில்லை இதை பற்றி எந்த ஒரு அரசியல் கட்சிகளையும் காணவில்லை.
தங்களுடைய அரசியல் லாபத்திற்காக நேரு குடும்பம் மற்றும் திமுக குடும்பம் பல வழிகளில் இந்தியா மற்றும் தமிழகத்த்தினை நாசப்படுத்தி இருக்கிறார்கள்.இப்பொழுதும் விவசாயிகள் போராட்டம் என்கிற பெயரில் நடைபெறும் பா.ஜ.க எதிர்ப்பு அரசியலை ஊக்குவிக்க தீவிரவாதத்தை விதைத்து வருகிறார்கள்.
ஹரியானா சிங்கு எல்லையில் நடைபெற்று வரும் போராட்ட இடத்தில் கை துண்டிக்கப்பட்ட நிலையில் கம்பி வேலியில் உடல் தொங்கிய நிலையில் இரு இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட இளைஞர் தலித் இனத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சோனேபட் (ஹரியானா) காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,சீக்கிய மதத்தின் புனித நூலக கருதப்படும் குரு கிரந்த் சாஹிப்பை அந்த இளைஞன் அவமதித்ததாகக் குற்றம் எழுந்தது இந்த நிலையில் நிஹாங்ஸ் என்ற சீக்கிய குழு அந்த நபரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் “அவர்கள் முழு சம்பவத்தையும் வீடியோ எடுத்தார்கள். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர், ”என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார். எல்லையில் உள்ள போராட்டத் தளம் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளின் கூடாரமாக அமைந்துள்ளது.
விவசாயிகள் என்ற பபோர்வையில் இந்தியா முழுவதும் கலவரத்தினை ஏற்படுத்த ஒரு குழு உருவாகியுள்ளது. இதை மேலும் வளரவிடாமல் இருப்பதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும்
சிங்கு பார்டரில் விவசாயிகள் போர்வை யில் தலித் இளைஞரை கொலை செய்த கொலைகாரன்களை கைது செய்ய ஆர ம்பித்து இருக்கிறது ஹரியானா போலீஸ்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















