ஜப்பான் ராணுவ அமைச்சர் திரு. டாரோ கோனோவுடன், நமது பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான தங்களின் எதிர்வினைகள் குறித்து இரு பாதுகாப்பு அமைச்சர்களும் விவாதித்தனர். கொவிட்-19க்கு எதிரான சர்வதேச முயற்சிகளுக்கு இந்தியாவின் பங்களிப்புக் குறித்து திரு. கோனோ டாரோவுக்கு எடுத்துரைத்த திரு. ராஜ்நாத் சிங், பெருந்தொற்றுக்கு எதிரான உலகளாவியப் போரில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து ஆலோசித்தார். கொவிட்-19க்கு பிறகு எழும் அதன் தொடர்பான சவால்களைச் சமாளிப்பதற்கு, இதர நாடுகளுடன் இரு தேசங்களும் இணைந்து பணியாற்ற, இந்தியா-ஜப்பான் சிறப்பு வியூகமும், சர்வதேசக் கூட்டுறவும் நல்ல அடித்தளத்தை அமைத்துள்ளதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இந்தியா-ஜப்பான் சிறப்பு வியூக சர்வதேசக் கூட்டின் கட்டமைப்புக்குக் கீழ், இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்கள் உறுதியை இரு அமைச்சர்களும் தெரிவித்துக் கொண்டனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















