Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

Oredesam by Oredesam
May 8, 2025
in இந்தியா, உலகம், செய்திகள்
0
MODI

MODI

FacebookTwitterWhatsappTelegram

இந்தியா எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்த்து இருந்த பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி, இந்திய மண்ணில் இருந்தபடியே பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா எடுக்கப்போகும் நடவடிக்கையை பாகிஸ்தான் முன்கூட்டியே மோப்பம் பிடித்து விடக்கூடாது என்பதில் பிரதமர் மோடியின் நடவடிக்கை மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் போருக்கு தான் இந்தியா தயாராகிறது என்ற நினைப்பில் இருந்தனர். மேலும் இந்தியா பொருளாதர ரீதியாக தான் பாகிஸ்தானை தாக்கும் என நினைத்திருந்தார்கள்.. இந்த நிலையில் இந்தியாவின் மாபெரும் சர்ஜிக்கல் ஸ்ட்ரிக்கை உலக நாடுகள் எதிர்பார்க்கவில்லை. அனைத்தும் தயார் செய்து விட்டு பாகிஸ்தானை அடித்துவிட்டோம் என உலக நாடுகளுக்கு அதிகாலையில் மெஜேஜ் அனுப்பியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பகல்ஹோட் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு முன்பாக எந்த ஒரு சமிக்ஞையும் காட்டாமல் சத்தமின்றி பாகிஸ்தான் கண்ணில் மண்னை தூவி இந்தியா அதிரடியை நிகழ்த்தியிருக்கிறது. பிரதமர் மோடியும் தனது வழக்கமான பணிகளில் எப்போதும் போல ஈடுபட்டு எந்த நேரத்திலும் பாகிஸ்தான் முன்கூட்டியே அறிந்துவிடக்கூடாது என்பதில் கனக்கச்சிதமாக செயல்பட்டு இருக்கிறார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

நள்ளிரவில் திடீர் தாக்குதல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதால் நாடே கொதித்து போயிருந்தது. பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி இருக்கும் என்று மோடி சூளுரைத்தார். இதனால், பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சி பாகிஸ்தான் நடுங்கியது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடியான நடவடிக்கையை இந்தியா எடுத்தது. பாகிஸ்தானை ஒருவாரத்திற்கு மேலாக பதற்றமாகவே வைத்து இருந்த இந்தியா, நள்ளிரவில் எதிர்பாராத நேரத்தில், அதிரடி நடவடிக்கையை எடுத்தது. நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவத தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

மிகவும் சீக்ரெட்டாக செய்து முடித்த இந்தியா
இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் தவிடுபொடியாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தானில் ஒரு குடிமக்கள் கூட கொல்லப்படவில்லை எனவும் பயங்கரவாதிகள் மீது மட்டுமே அட்டாக் நடைபெற்று இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. உச்சகட்ட பரபரப்புக்கு இடையே, பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா எடுக்கப்போகும் நடவடிக்கையை பாகிஸ்தான் முன்கூட்டியே மோப்பம் பிடித்து விடக்கூடாது என்பதால் இந்தியா மிகவும் சீக்ரெட் ஆக இந்த விஷயத்தை அணுகியது.

அதிலும் பிரதமர் மோடி வழக்கமான தனது பணியை எப்போதும் போல தொடர்ந்து கொண்டார். இதுதான் மிக முக்கியமான விஷயமாக சொல்லப்படுகிறது. அதாவது, இந்தியா எடுக்கபோகும் இந்த நடவடிக்கை தெரிந்து விடக்கூடாது என்பதால் எந்த பரபரப்பும் இன்றி, கடந்த சில நாட்களை போலவே வரிசையாக நாட்டின் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை பார்த்து வந்தார். ஒரே நாளில் இந்த சந்திப்புகள் நடைபெறாமல் ஒவ்வொரு நாளாக நடைபெற்றது.

சர்ஜிக்கல் தாக்குதல்
இதனால், பாகிஸ்தான் கொஞ்சம் அசால்ட் ஆக இருந்தது. இந்த நேரத்தில்தான் இந்தியா திடீரென நள்ளிரவு பயங்கரவாத முகாம்களை அடித்து நொறுக்கியது. பாகிஸ்தானில் கடந்த 2016 ஆம் ஆண்டு சர்ஜிக்கல் தாக்குதலை இந்தியா முன்னெடுத்தது. அதிகாலை நேரத்தில் இந்த சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய நாள் போர் வீரர்களின் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். ஆனால், சர்ஜிக்கல் தாக்குதல் பற்றிய எந்த ஒரு சூசகமான தகவல் கூட கொடுக்கவில்லை.

லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு..
சர்ஜிக்கல் தாக்குதல் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அதாவது, விமானங்கள் புறப்பட தயாராக இருந்த நேரத்தில், டெல்லியில் ஊடக குழுமம் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போதும் இதுபற்றிய எந்த ஒரு கருத்தையும் மோடி பேசவில்லை. அதேபோலத்தான் தற்போது நடந்து இருக்க கூடிய தாக்குதலுக்கு முன்பாகவும் எந்த ஒரு சமிக்ஞையும் காட்டாமல் சத்தமில்லாமல் காரியத்தை சாதித்து இருக்கிறது இந்திய ராணுவம்.

பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைகளைத்தான் லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல திரும்புறது என்று சொல்வார்களே அதேபோல எதிராளிகளை அடுத்து என்ன செய்ய போகிறோ என்பதை யூகிக்க முடியாத யுக்தி என்று பாதுகாப்பு நிபுணர்களும், சர்வதேச நோக்கர்களும் கூறுகிறார்கள்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்தது. மொத்தம் 9 பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 80 பேர் வரை பலியாகினர். இதற்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கொக்கரித்து வரும் நிலையில் மீண்டும் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுமா? என்பது பற்றி நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அடுத்த பேட்டியில், ‛‛பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் நமக்கு இல்லை. ஆனால் பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்து சீண்டினால் உரிய பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.அதாவது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இன்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இனி பாகிஸ்தான் அமைதியாக இருக்க வேண்டும். அதையும் மீறி நம் நாட்டுடன் மோதினால் இன்னும் பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு வார்னிங் செய்துள்ளார்

இப்படியான சூழலில் தான் நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. அதேவேளையில் பாகிஸ்தான் தாக்கினால் திரும்பி அடிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் இந்தியா பதற்ற நிலைமையை தணித்தால், இந்தியாவுடனான பதட்டங்களை குறைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் வெள்ளை கொடி காட்டியுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சோலார் பேனல் மோசடி சரிதா நாயர் கைது ! தி.மு.க எம்.பி மீதான லஞ்சம் வழக்கும் சூடுபிடிக்கிறதா! பதவி நீடிக்குமா?

April 22, 2021
தமிழக மக்களுக்கு ஷாக் மேல் ஷாக்!  நீட் பிரச்னை முடியவில்லை அதற்குள் மின்கட்டண பிரச்சனை!  விழிபிதுங்கும் திமுக!

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி பத்திரப்பதிவுக்கு திடீர் தடைவிதித்த விடியல் அரசு..

January 11, 2022
Arvind Menon

தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக முக்கிய தலையை இறக்கிய டெல்லி அதிரபோகும் தமிழகம் …

January 27, 2024
மின்வெட்டும்  மக்களின் சகிப்பு தன்மையும்!சர்ச்சையை சமாளிக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன்!

கொரோனா தடுப்பு பணிகளுக்கு தமிழகத்திற்கு 800 கோடி வழங்கிய மத்திய அரசு! சொன்னார் தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன்!

July 16, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x