Monday, November 10, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

ஏறுமுகத்தில் அதிமுக பிஜேபி கூட்டணி.

Oredesam by Oredesam
January 8, 2021
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
FacebookTwitterWhatsappTelegram

சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழகம் சென்று கொண்டு இருக்கும் நிலையில் களங்களில் இருந்து வரும் செய்திகள் அதிமுக கூட்டணி ஏறு முகத்தை நோக்கியும் திமுக கூட்டணி இறங்கு முகத்தை நோக்கியும் செல்கிறது என்று கூறுகின்றன.

READ ALSO

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி31 சதவீத வாக்குகளையே பெ ற்று இருந்தது.திமுக கூட்டணிக்கு 52 சதவீதவாக்குகள் கிடைத்து இருந்தது.

திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணி க்கும்இருந்த வாக்கு வித்தியாசம் வரலா று காணாத வகையில் 21 சதவீதமாக இருந்தது.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தது அப்பொழுது தமிழக மக்களிடம் மேலோங்கி நின்ற பிஜேபி எதிர்ப்பு தானே தவிர திமுக கட்சிகளின் கூட்டணி பலம் அல்ல என்பது தான் 100 சதவீத உண்மையாகும்.

ஆனால் இப்பொழுது நிலைமை மாறிக்கொண்டு வருகிறது.லோக்சபா தேர்தலில் மையமாக இருந்த பிஜேபி எதிர்ப்பு இப்பொழுது குறைந்து சட்டமன்ற தேர்த லில் அதிமுக ஆதரவு மனநிலை மக்களி டம் அதிகரித்து வருகிறது.

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற 52 சதவீத வாக்குகளில் இருந்து இப்பொழுது 7 சதவீதம் குறைந்து 45 சத
விதமாக இருக்கிறது.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணி திமுக இழந்துள்ள 7சத வீத வாக்குகளில் 4 சதவீதவாக்குகளை இப்பொழுது பெற்று இருக்கிறது


அதனால் அதிமுக கூட்டணி இப்பொழுது குறைந்து 35 சதவீத வாக்குகளை வை த்து இருக்கிறது என்றே கள நிலவரங்கள்
கூறுகின்றன.

ஆக அதிமுக கூட்டணி திமுக கூட்டணியை விட இப்பொழுதும் 10 சதவீத வாக்கு கள் வித்தியாசத்தில் பின் தங்கியே இருக்கிறது.

இந்த 10 சதவீத வாக்குகளும் திமுக கூட்டணி பலத்தினால் கிடைக்கும் வாக்குகள் அல்ல.

மாறாக அதிமுக பிஜேபி கூட்டணிக்கு எதிராக உள்ள ஆன்டி இன்கம்பன்சி வாக்குகள் தான்.

இந்த 10 சதவீத வாக்குக ளை எப்படி திமுக கூட்டணியில் இருந்து
பிஜேபி பிரிக்க போகிறது என்பதில் தான் அதிமுக பிஜேபி கூட்டணியின் வெற்றி அடங்கி இருக்கிறது.

இப்பொழுது அந்த 10 சதவீத ஆன்டி இ ன்கம்பன்சி வாக்குகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கு ம் 3 வது மற்றும் 4 வதுஅணிகளால் பிரிக்கப்படும்.

இந்த வாக்குப்பிரிப்பு 3 வது 4 வது அணிகளில் இடம் பெறப்போ கும் கட்சிகளின் வலிமையை பொறுத்து அமையும்.

அதிமுக பிஜேபிக்கு எதிராக உள்ள கட்சிகள் 3 வது மற்றும் 4 வது அணிகளை உருவாக்கி கூட்டணி சேரும் பொழுது அதிமுக பிஜேபிக்கு எதிராக திமுக தான் ஒரே சாய்ஸ்வஎன்கிற ஆப்சன் இல்லாமல் போய் விடும்இதனால் திமுகவை பிடிக்காத பிஜேபி அதிமுக எதிர்ப்பு வாக்காளர்க ள் 3 வது4வது அணியை நோக்கி செல்வது தவிர்க்க முடியாத நிலை உருவாகிவிடும்.

இதனால் திமுக வசம் உள்ள அதிமுக அரசுக்கு எதிராக உள்ள 10 சதவீத ஆன்டி இன்கம்பன்சி வாக்குகளில் பாதி குறைந்து விடும்.

அதனால் திமுக இப்பொழுது உள்ள 45 சதவீத வாக்குகளில் இருந்து 5 சதவீத வாக்குகளை இழந்து 40 சதவீத
வாக்குகளாக குறைந்து விடும்.

ஆனாலும் அதிமுக வாக்குகள் அதே 35 சதவீதமாகவே இருக்கும்.அதிமுக கூட்ட ணி இனி எந்த ஒரு நிலையிலும் வாக்கு
களை இழக்க முடியாது. ஆனால் திமுக கூட்டணி இனி தொடர்ந்து வாக்குகளை இழந்து கொண்டே வரும்.

இனி வரும் காலங்களில் திமுக கூட்டணியில் தான் பிளவுகள் ஏற்பட்டு கூட்டணி கட்சிகள் வெளியேற முடியும் என்பதால் திமுக கூட்டணியின் ஓட்டு சதவீதம் தான் குறையும்.

இந்த நிலையில் வைகோ திருமாவளவ ன் போன்ற பிஜேபி எதிர்ப்பு தலைவர்கள்
திமுக கூட்டணியில் இருந்து விலகி விட் டால் திமுக கூட்டணி குறைந்தது 2 சதவீத வாக்குகளை இழந்து விடும்.இப்பொழுது திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 38 சதவீதமாக குறைந்து விடும்

திமுக இழக்கும் ஒவ்வொரு கூட்டணி கட்சிகளின் மூலமாக இனிஅதனுடைய வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வரும்.

இதனால் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்கிற மனநிலை .

மக்களின் மனதில் உருவாகி கொண்டே வரும்.

இது கொஞ்சம் கொஞ்சமாக அதிமுககூட்டணியின் வாக்கு சதவீதத்தை அதிகரித்து கொண்டே வரும்..

ஏனென்றால் ஜெயிக்கிற கட்சிக்கு தான் ஓட்டு போடுவோம் என்று ஓட்டு போடும் மனநிலையில் குறைந்தது 5 சதவீதம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

அவர்களின் மனதில் திமுக கூட்டணி தோற்கும் என்கிற நிலை உருவாகும் பொழுது அவ ர்களினால் திமுக கூட்டணி வாக்கு சதவீதம் குறைந்து அதிமுக வாக்கு சதவீதம் அதிகரித்து விடும்.

அதிமுக கூட்டணியில் போட்டி அதிமுக வை நடத்தும் தினகரனினால் அதிமுகவில் இருந்து இனிபெரிய அளவில் வாக்குகளை பிளக்க முடியாது.

ஆனால் அழகிரிஉருவாக்கும் போட்டி திமுகவினால் திமுக கூட்டணி இன்னும் வலு விழந்து கொண்டே செல்லும்

இதனால் தேர்தல் நெருங்கி வரும் பொழு து அதிமுக கூட்டணி திமுக கூட்டணியைவிட மயிரிழையில் முந்தி நிற்கும்.

ஒரு வேளை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விட்டது என்று வைத்து கொள்வோம் .

காங்கிரஸ் இல் லையென்றால் திமுக கூட்டணி 35 சதவீத வாக்குகளை நிச்சயமாக தாண்டாது. அ ப்பொழுது அதிமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளை தாண்டி விடும்.

ஒரு வேளை சசிகலா சிறையில் இருந்து வெளி வந்த பிறகு தினகரனின் போட்டி அதிமுக தேர்தலில் போட்டியிடாது என்று முடிவெடுத்தால் அதிமுக கூட்டணி நிச்சய மாக 45 சதவீத வாக்குகளை பெற்று விடும் என்று உறுதியாக கூறலாம்.

தினகரன் கட்சி இந்த சட்ட மன்ற தேர்தலில் போட்டி இல்லை அல்லது காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுதல் இந்த இரண்டு நிகழ்வுகளில் ஏதாவது ஒன்று நடைபெற்றாலே போதும் அதிமுக கூட்டணி மீண்டும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விடும்.

ஏனென்றால் திமுக வுக்கு இப்பொழுது உள்ள ஒரே ப்ளஸ் பாயிண்ட் காங்கிரஸ்கூட்டணி தான். அதே மாதிரி அதிமுகவுக்கு இப்பொழுது உள்ள ஒரே மைனஸ் தினகரன் கட்சி பிரிக்கும் ஓரளவு வாக்கு கள் தான்.

இந்த இரண்டு காரணங்களாலும் அதிமுக கூட்டணி பெற இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை மாறு படும்.

இந்த இரண்டில் எதுவுமே நடைபெற வில்லை என்றாலும் அதிமுக பிஜேபி கூட்ட ணி பீகாரில் பிஜேபி கூட்டணி வெற்றிபெற்றது மாதிரி வெற்றி பெறுவது உறுதி

தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் உண்டாகும் குழப்பங்கள் திமுகவை இறங்கு முகத்தை நோக்கியும் அதிமுகவை ஏறு முகத்தை நோக்கியும் கொண்டு செல்லும் சென்று கொண்டு இருக்கிறது என்பதையே தமிழக தேர்தல்
களம் தெரிவிக்கிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி: இன்று ஆரம்பம்.

July 30, 2020

பஞ்சாப் அரியானா விவசாயிகள் ஏன் போராடறாங்க?

December 1, 2020
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.02 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.02 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல்.

October 11, 2024
தமிழகத்தில் ஆறு மாதத்தில் அசுர வளர்ச்சி! அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் ஆட்சி!-அண்ணாமலை!

“தமிழக மீனவர் தவறுதலாக எல்லை தாண்டி பிடிபடுவோரை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்” – அண்ணாமலை

May 3, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x