பின்னணியில் இருந்து ஆட்டுவிக்கும் ஒரு அமெரிக்கரை முதல் முறையாக இந்தியா காலி செய்ய போகிறது !

இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களின் பின்னணியில் வெளிநாடுகளின் தூண்டுதல்கள் இருப்பதாக பலரும் குற்றசாட்டுகளை முன்வைத்தாலும் இது வரை நேரடியான ஆவணங்கள் இல்லை.

ஆனால் தற்போது உலகம் முழுவதும் இடதுசாரிகள், மதவாதிகள் சேர்ந்து இந்திய பிரதமர் மோடியையும் இந்தியாவின் அமைதியையும் சீர்குலைக்க திட்டமிட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றது முதல் மிக பெரிய அளவில் இந்தியர்களின்…
வரலாறு,
பெருமை,
சக்தி
ஆகியவற்றை உலக நாடுகளில் எதிரொலித்து வருகிறார், இந்தியாவின் மற்ற பிரதமர்களை காட்டிலும் மோடி என்றால் தனி கவனம் உலக அரங்கில் உருவாகியுள்ளது, இதன்மூலம் இந்தியா பல செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

தற்போது மோடி இருக்கும்வரை இந்தியாவில் மதமாற்றத்திற்கோ அல்லது, அரச பயங்கரவாதத்திற்கோ வாய்ப்புகள் இல்லை என்பதால் உலக அளவில் ஊடகங்களை பயன்படுத்தி மோடியை, வீழ்த்த…..அமெரிக்காவை சேர்ந்த மிக பெரிய தொழிலதிபர் பல லட்சம் கோடியை வாரி இறந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து சமூக அக்கறையாளர் பானு கோம்ஸ் கருத்துப்படி :-

டெல்லி கலவரத்தை அடுத்து உடனடியாக.. கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுகளை பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும்…,
தீர்ப்பாளர் முரளிதர் அவசரமாக ஒரு பக்க பேச்சாளர்களை மட்டும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க சொன்னதும் நினைவிருக்கலாம்.

இவ் வழக்கை தாக்கல் செய்தவர் Harsh Mander. முன்னாள் அதிகாரி. வழக்கமான pesudo liberal வகையாறாக்களில் ஒருவர். இவர் பேசிய வெறுப்பு பேச்சு உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு வந்ததை அடுத்து…அதன் மீது விளக்கம் கேட்டு இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது…உச்சநீதிமன்றம்.

இதையடுத்து உலக அளவிலான பல தொடர்புகள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கிறது.

அவ்வாறு இணையக் கூடிய புள்ளிகள்:
இந்த Harsh Mander…அமெரிக்க Democrat கட்சியை சேர்ந்த ஜார்ஜ்_சோரோஸ் (George Soros) என்கிற billionaire-ன் NGO-வான Open Society Foundations ல் board member.

இந்த George Soros..
அரசியல் ரீதியாக இடதுசாரி ஆதரவு போன்ற தோற்றத்தில்..
pesudo liberal களை பயன்படுத்தி முன்னேறும் ஆகப் பெரிய கார்ப்பரேட் பண முதலைகளில் ஒருவர் !

மிகத்தீவிரமான லிபெரலாக காட்டிக் கொள்பவர்.கடந்த ஜனவரியில்..
”The Open Society University Network ”-ல் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக கொட்டி இருக்கிறார் !

உலகளாவிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களை/ பல்கலைக்கழகங்களை இணைக்கும் வகையில் …உயர்கல்வி & ஆராய்ச்சிகளுக்கு என்கிற பெயரில் இயங்கப் போகிறது இந்த ”The Open Society University Network” . இம் மாபெரும் நிதியை பயன்படுத்தி…
உலகம் முழுவதும் கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோரை …
தீவிர liberal-களாக உருவாக்குவதே நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்தும் இருக்கிறார் !

https://www.bloomberg.com/news/articles/2020-01-23/soros-starts-new-global-university-with-1-billion-commitment

இதற்கு அவர் கூறிய காரணம் : உலகளாவிய அளவில் [Nationalist] தேசியவாத கருத்துகளை பேசும் வலதுசாரி ஆட்சியாளர்கள் அதிகமாகிவிட்டனர். இதை முறியடிக்க வேண்டுமானால்…அதற்கான அடிப்படைகளை உலகளவிலான வலைப்பின்னலோடு உருவாக்க வேண்டும்.

வெளிப்படையாகவே…இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக / மோடிக்கு எதிராக….
பலமான திட்டமிடுதலோடு, பெரும் முதலீட்டோடு களம் இறங்கியிருப்பவர்களில் ஒருவர் இந்த George Soros.
உலகின் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக , உரிமைகளுக்கானவராக காட்டிக் கொள்ளும் George Soros.. இந்த அரசுகளுக்கு ஆதரவாக facebook செயல்படுகிறது. அதை தடை செய்யவேண்டும் என்று கூறுவது தான் கவனிக்க வேண்டிய இரட்டை_நிலை.

பெரும் பணத்தோடு, பெரும் வலைப்பின்னலோடு, அந்தந்த நாட்டில் உள்ளூர் அரசியல் ஆதரவாளர்களோடு ..இடதுசாரி-லிபெரல்-மனித உரிமை- முகமூடி அணிந்த கார்ப்பரேட் பண முதலைகள்..
வலையை விரித்து காத்திருக்கின்றன.
டெல்லி கலவரத்திற்கு பின்னான விசாரணை..
இந்த வலைப்பின்னலை..
மிகக் கொஞ்சமாக வெளிக்கொணர்த்திருக்கிறது…என்பதையே இச் செய்திகள் உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்த வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் மீதோ தனி நபர்கள் மீதோ இந்தியா மீது கைவைக்கும் வரை நடவடிக்கையில் ஈடுபட்டது இல்லை…

ஆனால்….தற்போது இந்தியாவில் கலவரத்தை அதுவும் உலக அளவில் இணைந்து ஊடகத்துறையினர் மூலம் செய்ய இருப்பதால் நேரடியாக களத்தில் இறங்கி நிச்சயம் சரியான முறையில் தண்டிக்கும் என்றே தகவல்கள் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளன.

இனி இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்கியது…., சகிப்புதன்மை இல்லை…,உலக நாடுகள் அழுத்தம்….
போன்ற பல்வேறு செய்திகள் மோடியின் அரசாங்கத்திற்கு எதிராக வந்து கொண்டே இருக்குமாம் உள்ளூர் பத்திரிகையாளர்கள் துணையுடன்.

ஆனால்…அமெரிக்க அதிபரையே யார் என்று முடிவு செய்யப்போவது இந்தியாதான் (மோடி) என்பதுதான் சுவாரஸ்யம்.!

Exit mobile version