பாஜக தலைமை அலுவலகத்தில் கரண்ட் கட் அணில்கள் விளையாடியதா அண்ணாமலை செய்த தரமான சம்பவம்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்திகள் இடையே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.

புதிய வேளாண் சட்டம் குறித்து ஆகஸ்ட் 25ஆம் தேதி பாஜகவினர் விவசாயிகளிடம் தெளிவுபடுத்த உள்ளதாக, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த தமிழ் கையேட்டை அண்ணாமலை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாக கூறினார். 

அப்பொழுது தமிழக பாஜக மாநிலத் தலைவர் ஆண்ணாமலை அனில் ஓடிக்கொண்டிருக்கிறது என செய்தியாளரிடம் நகைச்சுவையாக பேசினார்.

Exit mobile version