பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல்.
நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்திய இந்திய ராணுவம்.
4 இடங்களில் இந்த தாக்குதல் நடத்தியுள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்புகளின் நிலையங்களின் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளது இந்திய ராணுவம்.
கோட்லி, முசாபர்பாத், பாவல்பூர் ஆகிய 5 இடங்களில் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தகவல்.
இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் தரப்பில் அறிவிப்பு.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் பாக்கிஸ்தான் ராணுவத்தினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களை குறிவைத்து துல்லியமான தாக்குதல்.
தேவையற்ற அத்துமீறலை தவிர்த்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எல்லையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார்
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் – இந்திய ராணுவம்
எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம் அறிவிப்பு