எச்.ராஜாவால் சிவகங்கையில் காலியாகும் திமுக கூடாரம்.

காளையார்கோயில் அருகே உள்ள மேப்பல் கிராமத்தைச் சேர்ந்த திமுகவின் ஒன்றிய பெருந் தலைவர் சக்தி தலைமையில் திமுககிளை,ஒன்றிய , அணி,மாவட்டப்பொறுப்பாளர்கள் என இருநூறுக்கு மேற்பட்டோர் பாஜக வின் கட்சிவிதிப்படி தீவிர உறுப்பினர்களாய்மாறி.

இன்று திமுகவில் இருந்து விலகி
பாஜக வில் இணையும் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டு.

சுமார் 2000 மேற்பட்ட திமுகவினர்
உடனடியாக இன்றே பாஜகவில்
தம்மை இணைத்துக் கொண்டனர்.

இந்த வரலாற்று நிகழ்வு 
பாஜக தேசிய செயலாளர்  எச்.ராஜா முன்னிலையில் சிறப்பாக  நடைபெற்றது.

இனி மாவட்டம் முழுமையும் உள்ள திமுகவினர் பின்னர் ஒருநாளில் பாஜக வில் இணைவதற்கு தேதி கேட்டுள்ளனர்.

அநேகமாக அது நமது பாரத பிரதமர் மோடி பிறந்த நாளாக
இருக்கலாம்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பாஜக மாவட்டதலைவர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளுடன், அப்பகுதி ஒன்றிய நிர்வாகிகளும்,முன்னாள் மாவட்டதலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்
வழக்கறிஞர் சொக்கலிங்கம், மாவட்ட மகளிர் அணிதலைவி மதிகோமதி நாச்சியார் மற்றும் செயலாளர்  சுகனேஸ்வரி தலைமையில் மாவட்ட மகளிர் அணியினரும் சிறப்பாகக் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சி குறித்து தமிழ்வளர்ச்சி மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் மாநிலசெயலாளர் முத்துராமன்.

தமிழர்களுக்கு திமுக செய்த துரோகத்தை உணரும் இந்து மக்கள் இன்று பாஜகவில் இணைகின்றனர்.

சிவகங்கை மாவட்டம்  தமிழக பாஜகவின் முன்மாதிரி மாவட்டமாக எழுச்சிபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறினார் !

Exit mobile version