மற்றவைகள்

Get real time update about this post category directly on your device, subscribe now.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் கவலை.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் கவலை.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, பொதுவாழ்வில் கண்ணியத்தைக் காப்பாற்றி, இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழுமாறு மக்கள் பிரதிநிதிகளை அவர் கேட்டுக்கொண்டார். பெங்களூருவில் உள்ள எம் எஸ் ராமையா குழுமத்தின் தலைவர் திரு எம் ஆர் ஜெயராமுக்கு ‘சர் எம் விஸ்வேஸ்வரய்யா நினைவு விருதை' வழங்கிய பிறகு, மாநிலங்களவை தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் குடியரசு துணைத் தலைவர், அண்மையில் நாடாளுமன்றத்திலும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் ஏற்படும் நிகழ்வுகளால் தாம் மிகுந்த வருத்தம் அடைந்ததாகக் கூறினார். நாடாளுமன்றத்தில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், ஒரு சில உறுப்பினர்களின் மோசமான நடவடிக்கையால் தாம் மிகவும் கவலை அடைந்ததாகத் தெரிவித்தார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடையூறு அளிக்கும் செயல்பாடுகளைக் கண்டித்த திரு நாயுடு, நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் விவாதம் மேற்கொள்ளவும், ஆலோசனை நடத்தவும், முடிவுகளை மேற்கொள்வதற்குமான தளமே தவிர இடைஞ்சல்களை ஏற்படுத்துவதற்கான இடமல்ல என்று கூறினார். மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கும் அதே வேளையில் மக்களின் தீர்ப்பிற்கும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “உடல் ரீதியாக எவரையும் உங்களால் நிர்ப்பந்திக்க முடியாது”, என்றார் அவர். சர் எம் விஸ்வேஸ்வரய்யா போன்ற மாபெரும் நபர்களை உத்வேகமாகக் கொண்டு, நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு  புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான யோசனைகளை மேற்கொள்ளுமாறு இளம் தலைமுறையினரை அவர் கேட்டுக்கொண்டார். தற்சார்பு இந்தியாவை நோக்கி முன்னேறும் வேளையில், வறுமையை ஒழிக்கவும், மண்டல ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், வலுவான நாட்டை கட்டமைக்கவும் இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறப்பாக செயல்படவும் பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெங்களூருவின் விதான் சவுதாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மாநில ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மக்களவை உறுப்பினர் திரு பி சி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

களத்தில் சுப்ரமணியசாமி! ஸ்டாலினுக்கு எச்சரிக்கை! அர்ச்சகர் நியமனத்தை திரும்ப பெறாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்!

களத்தில் சுப்ரமணியசாமி! ஸ்டாலினுக்கு எச்சரிக்கை! அர்ச்சகர் நியமனத்தை திரும்ப பெறாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்!

திமுக எப்போதும் இந்துக்களின் விரோதி என்பதினை மீண்டும் நிரூபித்துள்ளது. திக பேச்சை கேட்டு கொண்டு திமுக ஆட்சி செய்யும் நிலையில் உள்ளது. இந்து என்றால் திருடன் இராமன்...

பாஜக தலைமை அலுவலகத்தில் கரண்ட் கட் அணில்கள் விளையாடியதா அண்ணாமலை செய்த தரமான சம்பவம்.

பாஜக தலைமை அலுவலகத்தில் கரண்ட் கட் அணில்கள் விளையாடியதா அண்ணாமலை செய்த தரமான சம்பவம்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்திகள் இடையே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. புதிய வேளாண் சட்டம் குறித்து...

விளையாட்டுத்துறைக்கு  9 மடங்கு நிதியை அதிகப்படுத்திய மோடி அரசு! –  புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்திய எஸ்.ஜி. சூர்யா!

விளையாட்டுத்துறைக்கு 9 மடங்கு நிதியை அதிகப்படுத்திய மோடி அரசு! – புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்திய எஸ்.ஜி. சூர்யா!

இந்தியாவிற்கு சும்மா கிடைத்துவிடவில்லை ஒலிம்பிக் பதக்கங்கள். கடந்த காலங்களில் இல்லாதது போல பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு, விளையாட்டுத்துறைக்கும், விளையாட்டு வீரர்களும் நிதி தாராளமாக தற்போது ஒதுக்கப்படுகிறது....

அரியலூர் டு ரஷ்யா! விண்வெளி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ!

அரியலூர் டு ரஷ்யா! விண்வெளி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ!

அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த அரசு மேல் நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருபவர்கள் ரகசியா, வேதாஶ்ரீ இவர்கள் இருவரும் சிறு வயது முதலே அறிவியல் ஆர்வம்...

நல்லா கேட்டுக்கங்க தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்! அமைச்சர் அறிவிப்பு!

நல்லா கேட்டுக்கங்க தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்! அமைச்சர் அறிவிப்பு!

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட்...

ஈ.வெ.ரா.சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்தவர்! ஜெய் ஹிந்த் என்பது வீரத்தமிழன் செண்பகராம பிள்ளையின் கோஷம்!-காடேஸ்வரா சுப்பிரமணியம்

ஈ.வெ.ரா.சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்தவர்! ஜெய் ஹிந்த் என்பது வீரத்தமிழன் செண்பகராம பிள்ளையின் கோஷம்!-காடேஸ்வரா சுப்பிரமணியம்

சுதந்திரத்திற்காக போராடியவர்களை இழிவுபடுத்திய தமிழக சட்டமன்றம் – இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது - மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை #ஜெய்ஹிந்த் தேசத்தின் அடிமை...

பேனரில் பெயர் இல்லை அதிகாரிகளை மிரட்டிய  பூந்தமல்லி தி.மு.க எம்.எல்.ஏ வைரலானா வீடியோ!

பேனரில் பெயர் இல்லை அதிகாரிகளை மிரட்டிய பூந்தமல்லி தி.மு.க எம்.எல்.ஏ வைரலானா வீடியோ!

முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் தேடாத தலைவர் என தி.மு.கவினர் விளம்பரம் செய்து வரும் நேரத்தில் திமுக எம்.எல் ஏக்கள் பேனரில் படம் இல்லை என அதிகாரிகளை மிரட்டி...

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

2021 நிதிநிலை அறிக்கை இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது: அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி வாயிலாக இன்று (04.02.2021) உரையாற்றினார். இந்திய ரயில்வே தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் குறித்து பேசிய அவர், “2021 நிதிநிலை அறிக்கை, இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. இந்திய ரயில்வேயில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூலதன செலவு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் தற்சார்பு இந்தியாவை நோக்கி இந்திய ரயில்வேயை வழிநடத்தவும் உந்துசக்தியாக இருக்கும்”, என்று கூறினார். இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரக மந்திரம் குறித்து பேசிய திரு கோயல், “முன்னுரிமைகளை வழங்கி, வளங்களை பிரித்தளித்து, திட்டங்களை விரைவாக முடிவடையச் செய்வதே இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரகமந்திரமாகும்”, என்று குறிப்பிட்டார். இந்திய ரயில்வேக்கு 2021-22 நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ரூ. 1,10,055 கோடி தொகையில் ரூ. 1,07,100 கோடி மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதிநிலை மதிப்பீடுகளை விட ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 37,050 கோடி (53%) அதிகமாகும். பெருந்தொற்று காலத்திலும் இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கடல் விமான சேவையை தொடங்குகிறது மோடி அரசு…

கடல் விமான சேவையை தொடங்குகிறது மோடி அரசு…

சாத்தியமுள்ள விமான நிறுவனங்களின் மூலம் சிறப்பு நோக்க முகமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தொடங்கியுள்ளது. அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கடல் விமான சேவைகளுக்காக பல்வேறு வழித்தடங்கள் பரிசீலனையில் உள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபர், லட்சத்தீவுகள், கவுகாத்தி நதிக்கரை, அசாமில் உள்ள உம்ரான்சோ நீர்த்தேக்கம், யமுனா நதிக்கரை, தில்லியிலிருந்து அயோத்தி வரை, தெஹ்ரி, ஸ்ரீநகர் (உத்தரகாண்ட்), சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு கடல் விமான சேவைகள் திட்டமிடப்படுகின்றன. கேவடியா மற்றும் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரைக்கு கடல் விமான சேவை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2020 அக்டோபர் 31 அன்று இது துவக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே, முக்கிய துறைமுகங்களுக்கான தூர்வாருதல் வரைவு வழிகாட்டுதல்கள் மீதான கருத்துகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது. பங்குதாரர்களுடன் இணைந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. http://shipmin.gov.in/sites/default/files/Draft%2520guidelines%2520for%2520comments_compressed.pdf என்னும் முகவரியில் வரைவு வழிகாட்டுதல்களை காணலாம். கருத்துகளை 2021 ஜனவரி 31 வரை anil.pruthi@nic.in என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

Page 6 of 16 1 5 6 7 16

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x