சீனாவிற்கு பதிலடி! மோடி செய்த சம்பவம்! திபெத்தின் 30 இடங்களுக்கு பெயர் மாற்றம் !

அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத்திய பகுதி என்று சொந்தம் கொண்டாடும் சீனா, தேர்தல் நேரத்தில் வேண்டுமென்ற கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அம்மாநிலத்தில் உள்ள Zangnan பிரதேசத்தில் உள்ள 11 குடியிருப்புப் பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 மலைப்பாதைக்கு தங்களது மாண்டரின் மொழியிலும், திபெத்திய மொழியிலும் பெயர் சூட்டியிருந்தது சீனா.

இந்த நிலையில், புதிதாக பதவியேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, திபெத்தின் 30 இடங்களுக்கு மறுபெயர் சூட்டும் பரிந்துரைக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. அருணாசலப் பிரதேசத்தில் தனது கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாகக் கூறி சில பகுதிகளுக்கு சீனா பெயர் வைத்து, இந்தியாவை வெறுப்பேற்றியதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இந்தியா – சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வந்தாலும், 2020 மே 5ல் லடாக் எல்லையை சீனா ஆக்கிரமிக்க முயன்றபோது மோதலாக வெடித்தது.பாங்காங் ஸோ பகுதியில் இருநாட்டு வீரர்கள் மத்தியில் சண்டையாக உருவெடுத்தது.இந்த சம்பவத்துக்கு பின் இந்தியா – சீனா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. வர்த்தக உறவு தவிர மற்ற அனைத்து விதமான உறவுகளும் சுமுகமாக இல்லை.

இந்த எல்லை பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு ராணுவம் மற்றும் துாதரக அளவில், 21 சுற்றுகள் பேச்சு நடந்துள்ளது. தீர்வு எட்டப்படவில்லை.இதற்கிடையே, இந்தியாவை உசுப்பேற்றும் விதமான சேட்டைகளில் சீனா அவ்வப்போது ஈடுபட்டு வருகிறது.

அந்த வரிசையில், நம் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அங்குள்ள 30 இடங்களுக்கு சீன மொழியில் கடந்த ஏப்ரல் மாதம் பெயர்களை மாற்றியது.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, ‘புதிதாக பெயர்களை சூட்டுவதன் வாயிலாக, அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதி என்ற உண்மை நிலை மாறிவிடாது’ என, தெரிவித்தது.

சீனாவின் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு பதிலடி தர மத்திய அரசு முழு வேகத்தில் தயாராகி விட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற சூட்டோடு சூடாக, சீனாவுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

திபெத்தில், இந்தியா வசம் உள்ள 30 இடங்களுக்கு இந்திய மொழியில் புதிய பெயர்களை சூட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, பிராந்திய உரிமையை உறுதிப்படுத்துவதே நம் அரசின் நோக்கம். புதிய பெயர் சூட்டும் இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைப் பிரதேசங்கள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைவழிப்பாதை மற்றும் ஒரு நிலப்பரப்பு இடம் பெற்றுள்ளன.

திபெத் பிராந்தியத்தின் வரலாற்று ஆராய்ச்சி அடிப்படையில் சூட்டப்பட்டுள்ள இந்த பெயர்களை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.இந்த புதிய பெயர் பட்டியலுடன் கூடிய எல்லை கட்டுப்பாட்டு பகுதியை வரையறுக்கும் வரைபடத்தையும் நம் ராணுவம் விரைவில் வெளியிட உள்ளது.

இது குறித்து நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான உறவு மற்றும் சிக்கல்கள் வெவ்வேறானவை. சீனாவுடன் தொடர்ந்து வரும் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதே எங்கள் நோக்கம்.ஆனால், பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட முயற்சித்து வருகிறோம். என கூறினார்.

Exit mobile version