ஜோதிமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடலூர் பாஜகவினர் புகார்.

உலகம் போற்றும் பிரதமர் மோடியை மிக இழிவாக பேசி அவமானப்படுத்தும் வகையில் பேசிய இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கடலூர் மாவட்ட சார்பில் கடலூர் காவல் நிலையம் ஆய்வாளரிடம் பாரதிய ஜனதா கட்சி கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் புகார்மனு கொடுத்தனர் .

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் விஜயரங்கம் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் பெருமாள், எல் சிவா, மாவட்ட ஐடி பிரிவு தலைவர் ஜெனித் மேகநாதன், கலைப்பிரிவு வெங்கடேசன், கடலூர் நகர தலைவர் வெங்கடேசன், நகர பொதுச்செயலாளர் பரசுராமன், முன்னாள் நகர பொது செயலாளர் தென்றல்,திருக்குமார் விசுவநாதன்,அழகின் நத்தம் ,அருள் ,திருமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Exit mobile version