வெள்ளி கோவிலுக்கு தடை தி.மு.க.விற்கு சனி : கோவில்களை திறக்காவிட்டால் கோயிலுக்குள் நுழைந்தே தீருவோம் தி.மு.கவை சம்பவம் செய்த பொன்னார் !

அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு செல்ல அனுமதி கோரி பாஜக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் பேசிய பொன்னார் இந்து மக்களின் வழிபாட்டுக்கு உகந்த வெள்ளிக்கிழமை கோவிலை பூட்டி வழிபட தடை விதித்ததன் மூலம் தி.மு.க.,விற்கு சனி பிடித்து விட்டது,” தி.மு.கவை கிழித்து தொங்கவிட்டார்.

மேலும் அவர் போராட்டத்தில் பேசியதாவது: தி.மு.க.வில் இந்துக்கள் இருப்பதாக கூறுகிறீர்கள். தி.மு.க., அமைச்சர்கள் கோயிலுக்கு செல்வது சந்தோஷம் தான். திருச்செந்துார் கோயிலுக்கு அதிகம் செல்வோர் தி.மு.க.,வினர் தான்.

செய்த பாவங்கள் தீர தி.மு.க.,வினர் கோயிலுக்கு சென்று சாஷ்டாங்கமாக விழுவீர்கள். நீங்கள் செய்த பாவம் கோடிக்கணக்கான பக்தர்களை கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கவில்லை என்பது தான்.

வெள்ளிக்கிழமை ஹிந்துக்கள் கோயிலுக்கு சென்று வழிபட அனுமதித்து உத்தரவு பிறப்பியுங்கள். அப்படி பிறப்பிக்கவில்லை என்றால் பாவத்தை தீர்க்க தி.மு.க.,வினர் திருச்செந்துார், காசிக்கு சென்றாலும் தீராது. சனி பிடித்தே தீரும். இது அரசுக்கும் நல்லதல்ல. தமிழகத்திற்கும் நல்லதல்ல.

பா.ஜ., தமிழக மக்கள் உரிமைகளுக்காக போராடி வருகிறது. அதில் ஹிந்துக்கள் உரிமைகளை பேசக்கூடாது, அப்படி பேசினால் மதசார்பற்ற தன்மையாக இருக்காது என நீங்கள் கூறினால் உங்களுடைய போலி மதசார்பின்மையை தீயிட்டு கொளுத்த கூறுவோம்.

ஹிந்துக்களுக்கு முதலில் எல்லா நாட்களிலும் கோயிலுக்கு சென்று வழிபடும் உரிமையை தாருங்கள். உரிமை மறுக்கப்பட்டால் வரும் காலங்களில் கோயிலுக்குள் நுழைந்தே தீருவோம், என்றார்.

Exit mobile version