தி.மு.க 100 தொகுதிகளை தாண்ட கூடாது! அமித் ஷா முடிவு! தெறிக்கவிடும் தமிழக அரசியல் !

திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழகத்தில் எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறது தமிழக பாஜக கடந்த 45 வருடங்களாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இதற்கான மாற்றுக்கட்சிகள் என பல கட்சிகள் இருந்தும் அது சோபிக்கவில்லை அந்த கட்சிகள் தேர்தலில் திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்து தான் வெற்றி பெற்று வந்துள்ளது. திராவிட கட்சிகளின் வெற்றிகளுக்கு காரணம் அவர்களின் தலைமை மட்டுமே மிகவும் பிரபலமான முகம் அவர்களை வைத்துதான் இத்தனை ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்தி வருகிறார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் புரியும் இரு கட்சிகளும் எவ்வாறு தேர்தல்களில் ஜெயித்து வந்ததது என. தற்போது இரு கட்சிகளின் தலைமை என்பது வெற்றிடமே அதனால் தான் தடுமாறுகிறார்கள்

இதை பயன்படுதுவதற்கு பல கட்சிகள் பல நடிகர்கள் பயன்படுத்தி தமிழகத்தில் பெரிய சக்தியாக உருவெடுக்கலாம் என எண்ணி கமல் சீமான் அமீர் சூர்யா என அனைவரும் அவ்வப்போது வாய் திறந்து பேசி கிளர்ச்சியை உண்டாக்கும் விதமாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.ஆனால் கட்சி விரைவில் தொடங்குவர் என அறிவித்த ரஜினி கப்சிப், அவரும் நவம்பரில் கட்சி ஆரம்பிக்கலாம் என்ற பேச்சு அடிபட்டுள்ளது. அவர் கண்டிப்பாக பாஜக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தருவார் என்பது உறுதி. ஏனெனில் அவரின் முதலவர் வேட்பாளர் என அறியப்பட்ட அண்ணாமலை IPS பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார்.பாஜக ரஜினி கட்சி ஆரம்பித்து கணிசமான இடங்களை பெற்றால் துணை முதல்வர் பதவி பாஜகவிற்கு செல்லும். மேலும் டெல்லி பாஜகவும் இதைத்தான் விரும்புகிறதாம்.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் குறித்து, டில்லியில் உள்ள, பா.ஜ.க தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் தமிழக தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளாராம்.

‘தி.மு.க., குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெற வேண்டும்; 100 தொகுதிகளை தாண்டக் கூடாது’ என்பது தான், பா.ஜ.,வின் வியூகம் என்கின்றனர், ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சீனியர் தலைவர்கள்.இதற்காக, அதிரடி பிரசாரத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சமூக வலைத்தளங்களில், தி.மு.க.,விற்கு எதிராக, பா.ஜ.,க தீவிர பிரசாரம் செய்ய உள்ளது. தி.மு.க.,வின் கடவுள் மறுப்பு கொள்கையை எடுத்து வைத்தால், ஹிந்துக்களின் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என, பா.ஜ., நம்புகிறது. மேலும் கறுப்பர் கூட்டம் விஷயத்தை பெரிதாக்க முடிவு செய்துள்ளது. மோடியை இழிவாக பேசிய நபர்களின் வீடியோக்களை டெல்லி தலைமை கேட்டுள்ளதாம். மேலும் தேசத்திற்கு எதிரான பேசியவர்களையும் களையெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்து, தி.மு.க.,வின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என்ன செய்யப் போகிறார், அவருடைய திட்டம் என்ன என்கிற விபரங்கள், பா.ஜ.க விற்கு, ‘லீக்’ செய்யப்பட்டுவிட்டதாம். இந்த தேர்தல் முடிவில், தமிழகத்தில், பா.ஜ.,க தான் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் என, சீனியர் பா.ஜ.க தலைவர்கள் சொல்லி வருகின்றனர்.

மேலும் இந்த முறை அமித் ஷா நேரடியாக தமிழக தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதால் தமிழக கட்சிகள் சற்று அரண்டு காணப்படுகின்றார்கள். எந்த கட்சியில் இருந்து எந்த தலைவர் பாஜகவிற்கு செல்வர்க்ளோ என்ற பயம் தொற்றி உள்ளது. இந்த முறை தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரு புதுமையான தேர்தலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை .

Exit mobile version