அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு என்ன என்ன ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது என்று பார்க்கலாம்………

காலை 7 மணி க்கு:
இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எழுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கிறார்கள்…

காலை 8.30 மணிக்கு
2 இட்டிலி , சாம்பார் , வெங்காய சட்னி , சம்பா ரவை , கோதுமை உப்புமா அல்லது கிச்சடி , 2 வேகவைத்த முட்டை மற்றும் பால் வழங்கப்படுகிறது…

காலை 10.30 மணிக்கு
சாத்துக்குடி ஜூஸ்

மதியம் 12 மணிக்கு
வெள்ளரிக்காய் சாலட் மற்றும் காலையில் கொடுத்தது போலவே இஞ்சியை தோலுடன் கூடிய எழுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தருகிறோம்…

மதியம் 1.30 மணிக்கு
2 சப்பாத்தியுடன் புதினா சாதம் அல்லது வெஜிடபிள் சாதம் , வேகவைத்த காய்கறிகள் , கீரை , மிளகு ரசம் , உடைச்ச கடலை வழங்கப்படுகிறது….

மாலை 3 மணிக்கு
மிளகு , மஞ்சளுடன் உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரும் வழங்கப்படுகிறது….

*மாலை 5 மணிக்கு
பருப்பு சூப் , சுண்டல் கொடுக்கிறார்கள்..

இரவு 7 மணிக்கு
2 சப்பாத்தி , சம்பா ரவை அல்லது கோதுமை உப்புமா அல்லது கிச்சடி , வெஜிடபிள் குருமா , வெங்காய சட்னி மற்றும் பால் கொடுக்கப்படுகிறது…

இரவு 9 மணிக்கு
காலை 7 மணிக்கு மற்றும் மதியம் 12 மணிக்கு கொடுத்தது போலவே இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எழுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தருகிறார்கள்…..

இரவு 11 மணிக்கு
மிளகு மற்றும் மஞ்சளுடன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீர் வழங்கப்படுகிறது…

மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவே இதுபோன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை அரசு ஊட்டச்சத்து நிபுணர்களை வைத்து கொடுக்கிறார்கள் ஆகவே நாமும் முடிந்தால் வீட்டில் இது போன்ற உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது……

Exit mobile version