இந்தியாவை ஒன்றிணைத்த இரும்பு மனிதருக்கு இன்று பிறந்தநாள்.

patel

இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் நவீன இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேலின் பிறந்த நாள்.வணங்கி வழி
படுவோம். பட்டேல் இல்லை என்றால் இன்றைய இந்தியா இல்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, இங்கு 562 சுதேச அரசுகள் இருந்தன. அவற்றை எல்லாம் கண்மூடி கண்திறப்பதற்குள் இந்தியாவோடு இணைத்த படேலுக்கு காஷ்மீர், ஜுனகத் மற்றும் ஹைதராபாத் அரசுகள்
மட்டும் தண்ணி காட்டி வந்தன.

பிரிட்டிஷ் ஆட்சியிலேயே, ஹைதராபாதிற்கு என்று தனியாக ராணுவம், ரயில் சேவை மற்றும் தபால் துறை போன்ற வசதிகள் கொண்டு இந்தியாவின் நம்பர் 1 சுதேச அரசாக இருந்தது.

அது மட்டுமல்லாதுபிரிட்டிஸ் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அரசு என்கிற பெயர் வேறு ஹைதராபாத் அரசுக்கு இருந்தது .

ஹைதராபாத் அரசின் பரப்பளவு எவ்வ ளவு தெரியுமா? இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் ஒன்று சேர்த்த அளவிற்கு மிகப்பெரிய பரப்பளவு கொண்டு இந்தியாவிலேயே சர்வ வல்லமை கொண்டு இருந்தது ஹைதராபாத் .

அதாவது பாக்ய நகர் எந்த நேரத்தில் பாக்ய நகர் என்று யார் வைத்தார்களோ தெரியவில்லை. இன்றைய தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் தன்னுடைய பெயரான பாக்யநகரை மட்டுமல்லாது சகல பாக்யங்களையும் இழந்து தவித்து வருகிறது.

அப்போதைய ஹைதராபாத்தின் நிஜாமாக இருந் தவர் மீர் உஸ்மான் அலிகான் பகதூர். இவர் இந்தியாவுடன் ஹைதராபாத்தை இணைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஜின்னாவுக்கு அழைப்பு கொடுத்து ஹைதராபாத் பாகிஸ்தானோடு இணைய விரும்புவதாக அறிவித்தார்.இதை இந்தியா எதிர்த்து ராணுவ நடவடிக்கைக்கு தயாரானது.

இந்த நேரத்தில் ஒன்றை நினைவு கொள்ள வேண்டும். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு ஹைதராபாத் இந்தியாவோடு தான் இணைய வேண்டும் என்று அங்கிருந்த இந்துக்கள் சுவாமி ராமானந்த தீர்த்தர் என்கிற துறவி தலைமையில் போராட ஆரம்பித்தார்கள்.

அவர்களை ஹைதராபாத் நிஜாமிற்கு ஆதரவாக நின்ற ரசாக்கர்கள என்கிற கூலிப் படை கொன்று குவிக்க ஆரம்பி த்தார்கள். இவர்கள் தலைவனாக காசிம் ரிஸ்வி என்கிற வக்கீல் இருந்து வந்தார் இவர் வேறு யாருமல்ல.இப்பொழுது ஹைதராபாத்தை ஆட்டுவித்துக்கொ ண்டு இருக்கும் அசாதுதீன் உவைசியின் குரு என்றே கூறலாம். உவைசியின் மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் என்கிற அமைப்பின் அப்போதைய தலைவர் தான் இந்த காஸிம் ரிஸ்வி.

இந்த அமைப்பு 1911 லியே ஹைதராபாத் நிஜாமால் துவங்கப்பட்ட அமைப்பு ஆகும். இதுதுவக்கப்பட்ட உடனே ஹைதராபாத் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டது.

உஸ்மானியா பல்கலைக்கழகத்தை் கொ ண்டு வந்தஹைதராபாத் நிஜாம் கல்வி கற்க வரும் இந்து மாணவர்களுக்கு உரு து கற்பிக்க வைத்துதெலுங்கு மொழியை அழித்து மாணவர்களை முழு அளவில் மதம்மாற்றும் வேலைகளை செய்து கொ ண்டுஇருந்தார்.

உடன்படாத இந்துக்களை நிஜாமின் கூ லிப்படையான ரசாக்க ர்கள் அடித்து கொ ன்றும் ஹைதராபாத்தை விட்டு துரத்தி் விட்டுக் கொண்டு இருந்தார்கள்.
.
ரசாக்கர்களின் கொடுமை தாங்க முடியா மல் ஆயிரக் கணக்கான இந்துக்கள் ஹைதராபாத் எல்லையைக் கடந்து இந்தியாவின் ஏனைய பகுதிகளில் தஞ்சம் அடைந்தார்கள். ஆனால் அதே நேரத்தில் .வேறு பகுதிகளில் இருந்து முஸ்லிம்க ள் ஹைதராபாத் முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று ஹைதராபாத் நோக்கி வந்தார்கள் அவர்களுக்கு உடனடியாக அரசு வேலையும் நிரந்தரமாக தங்குவதற்கு வீடுகளும் வழங்கப்பட்டது.

இந்த காலத்தில் மட்டும் ஹைதராபாத் தில் குடியே றிய முஸ்லிம்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் இருக்கும்ஹைதராபாத் முஸ்லிம் நாடு எங்களை இந்தியாவா ல்அடக்கி ஆள முடியாது என்கிற முஸ்லி ம் களின் கோசமே ஹைதராபாத் முழுவ தும் எதிரொலிக்க ஆரம்பித்தது.

இதனால் கடுப்பான படேல் நேருவிடம் ஹைதராபாத் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தே ஆக வேண் டும் என்று உறுதி யாக நின்றார். ஆனால் நம்ம செக்யூலர் சிகாமணி நேருவோ அவசரம் வேண்டாம் பொறுமை காப்போம் என்று படேலின் கைகளை கட்டிப்போட்டார்.

சுமார் 2 மாதம் பொறுமை காத்து வந்த படேல்கடைசியில் வேறு வழியின்றி,1948ம்.ஆண்டு செப்டம்பர் 13 ம் தேதி ஹைதராபாத் சமஸ்தானத்தை கைப்பற்ற இந்திய ராணுவத்தை அனுப்பினார்.இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் போலோ என்று இந்திய ராணுவம் பெயர் வைத்தது.இந்த பெயர் காரணத்திற்கும் ஒரு முக்கிய பின்னணி உண்டு.

அந்த காலத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான போலோ விளையாட்டு மைதானங்கள் ஹைதராபாத்தில் தான் இருந்தது. நிஜாம்களுக்கு போலோ விளையாட்டு என்றால் இங்கிலாந்து கணவான்கள் கிரிக்கெட் விளையாட்டை நேசிப்பது மாதிரியாகும்.

நிஜாம்கள் பொழுது போக்குவதற்கு 17 போலோ விளையாட்டு மைதானங்கள் ஹைதராபாத்தில் மட்டும் இருந்தது. என் கால் பார்த்து கொள்ளுங்கள்அதனால் ஹைதராபாத்தை உலகின் போலோ கிரவுண்ட் என்று மேலை நாடுகள் அழைத்து வந்தன.

ஐந்து நாட்கள் மட்டுமே நீடித்த ஆபரேஷ ன் போலோ நடவடிக்கையில், ஹைதராபாத் சமஸ்தானத்தின் கூலிப்படையான ரஜாக்கர்கள் சுமார் 1500 பேர் கொல்லப்பட்டார்கள்.அது மட்டுமல்லாது ஹைதராபாத் அரசின் தரப்பில சுமார 1300 பா துகாவலர்களும் உயிரிழந்தார்கள்.

இந்திய ராணுவத்தின் தரப்பில் 66 வீர ர்கள் உயிரி ழந்ததாகவும் 97 பேர் காயம டைந்ததாகவும் இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.இந்த நடவ டிக்கை தொடங்குவதற்கு இரண்டு நாட்க ளுக்கு முன்னரே பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னாகாலமாகி விட்டதால் ஹை தராபாத்தை முன் வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு முழுஅளவிலான போர் நிகழாமல் போய்விட்டது என்றே
நான் நினைக்கிறேன்.

இன்னொரு முக்கியமான விசயம் என்ன வென்றால்இந்தியாவிலும் காந்தி இல் லாமல் போய் விட்டார்இருந்து இருந்தால் இதை நடைபெறாமல் செய்ய ஹைதரா பாத் நிஜாமின் அரண்மனையிலேயே காந்தி உண்ணாவிரதம் இருந்து இருப்பார். படேலும்போய் தொலையுங்கள் என்று காந்திக்காக ஹைதராபாத்தை கண்டு கொள்ளாது விட்டு இருப்பார்
.
அந்த வகையில் கோட்சேவுக்கு தான் ஹைதராபாத் இந்துக்கள் நன்றி கூற வேண்டும். இன்னொரு விஷயம் இரு க்கிறது. ஹைதராபாத் தை இந்திய ராணுவம் கைப்பற்றியதும் வீறு கொண்டு எழுந்தஇந்துக்கள் ரசாக்கர்கள் அப்பாவி முஸ்லிம்கள் என்று பிரித்து பா ர்க்காமல் போட்டு தாக்கியதில்சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள் கூடவே இருக்கலாம்..

இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஹைதராபாத் 1948 செப்டம்பர் 18 ம் தேதி வந்தது. ஹைதராபாத்ராணுவ தளபதி ஜெனரல் எல்.எட்ரூஸ் இந்தியபடைக்கு தலைமை தாங்கி ஆப்பரேசன் போலோ வை நடத்தி ஹைதராபாத்தை கைப்பற்றி ய மேஜர் சவுத்ரியிடம் சரணடைந்தார்.

ஹைதராபாத் இந்தியாவின் கைக்கு வ ந்தவுடன் ரசாக்கர்கள் படை கலைக்கப்ப ட்டு மஸ்ஜில் இட்டே ஹதுல் முஸ்லிமின் அமைப்பு தடை செய்யப்பட்டது காசிம் ரிஸ்வியை கைது செய்த இந்திய ராணுவம் நேருவின் கட்டளைக்கு ஏற்ப வீட்டுக் காவலில் வைத்து அழகு பாரத்தது.

காசிம் ரிஸ்வியை எப்படியாவது சிறை க்குள் தள்ள வேண்டும் என்கிற பட்டேலின். முயற்சி கடைசி வரை நேருவிடம் எடுபடவே இல்லை,ஆனால்மக்கள் விடவில்லை.காசிம் ரிஸ்வியை கொலை செய்ய முயற்சித்ததால் வேறு வழியின்றி அவனை சிறையில் அடைத்து வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார் நேரு.

இந்த ஹைதராபாத்தை மீட்கும் ஆப்பரேச ன்போலோ நடவடிக்கை கூட நேருவின் விருப்பம்இன்றியே படேல் மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.இதனால் பாகிஸ்தான் ஆயுதங்கள்வாங்குவதற்கு ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் அலிகா னிடம் 20 கோடி ரூபாய் கடன் கேட்டு இருந்தது.

நிஜாமும் பாகிஸ்தானுக்கு 20 கோடி ரூபாயை கட்டி வைத்துகாத்து கொண்டிருக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து பணத்தை மட்டும் அல்ல ஹைதராபாத் சமஸ்தானத்தையே கைப்பற்றி இந்தியாவோடு இணைத்த பட்டேல் இல்லை என்றால் நவீன இந்தியாவே இல்லை என்று கூறலாம்

இரண்டு லட்சம் ரசாக்கர்கள் என்னிடம் இருக்கிறார்கள்.. முடிந்தால் வாருங்கள் மோதி பார்ப்போம் என்று இந்தியா விடம் சவால் விட்ட நிஜாம்உஸ்மான் அலிகா னின் சவாலை ஏற்று எண்ணி100 மணி நேரத்தில் 2 லட்சம் ரசாக்கர்களைரஸ்க்கு
களாக பாரசல் செய்த இந்திய ராணுவ த்திற்கு தலைவணங்கி சல்யூட்.

இந்த ஆப்பரேசன் முடிந்த பிறகு ஹைத ராபாத்துக்குசென்ற படேலை நிஜாம் உஸ்மான் அலிகான் வணங்கி நின்ற காட்சி இருக்கிறதே. பதிலுக்கு . படேல் வெற்றி புன்னகையோடு நிஜாமை பார் த்த கம்பீரம் இருக்கிறதே..இதற்காகவே.. 600 அடியில் அல்ல 1000 அடியில்கூட படேலுக்கு சிலை வைக்கலாம்..
..

கட்டுரை:- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

.

Exit mobile version