தனி நாடு கோரிக்கையுடன் போராட்டம் நடத்தி வரும் பாகிஸ்தானின் பலுாசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டிற்கும், பிரதமர் மோடிக்கும் ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியமான பலுாசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் நடக்கிறது.அந்த பிராந்தியத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், பலுாச் விடுதலை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. .பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை தாக்கியபோது, நம் நாட்டிற்கு பலுாச் கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.தொடர்ந்து, அவர்கள் இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
பலுசிஸ்தான்: ‛‛ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டுவிட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும். இதற்கு சர்வதேச சமூகங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது” என்று பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் பலுசிஸ்தான் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டின் அதிரடி தாக்குதலுக்கு அஞ்சிய பாகிஸ்தான் உடனடியாக போரை நிறுத்த கெஞ்சியது. அதனை நம் நாடு ஏற்ற நிலையில் தற்போது போர் நிறுத்தம் என்பது அமலில் உள்ளது. அதோடு எல்லையில் அமைதி திரும்பி உள்ளது.இந்நிலையில் தான் பாகிஸ்தான் தனது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த நாட்டின் ஒருபகுதியாக இருக்கும் பலூச் மக்கள் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே ‘பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான்கிளர்ச்சி படையினர், தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் நடக்கிறது. இப்பகுதி மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபர்கள் திடீரென மாயமாவது. அவர்களுக்காக போராடுபவர்களை ஒடுக்குவது , கொடூர கொலைகள் என பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
இதனையடுத்து பாக்., ராணுவம் மீது, ‘பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்’ என்ற கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ஏராளமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் திணறி வருகிறது. பலுசிஸ்தானின் பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதோடு, அரசு அலுவலகங்களில் பாக்., கொடியை அகற்றி விட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர். தங்களை தனி நாடாக அங்கீகரிக்கும்படி, இந்தியா மற்றும் ஐ.நா.,வுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் பலுசிஸ்தான்களின் பிரதிநிதியான மிர் யார் பலோச் என்பவர், மனித உரிமை மீறல், வன்முறை மற்றும் மாயமாகும் அப்பாவி மக்கள் காரணமாக பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவுகளில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பலுசிஸ்தானில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். இனி பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கு சொந்தமானது அல்ல என்பது அவர்களின் முடிவு. இனிமேல் உலகம் அமைதியாக இருக்க முடியாது.
இந்திய தேசபக்தி கொண்ட மீடியாக்கள், யூடியூபர்கள், இந்தியாவை பாதுகாக்க போராடுபவர்கள் பலுசிஸ்தானை சேர்ந்தவர்களை பாகிஸ்தான் மக்கள் என குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல. பலுசிஸ்தானியர்கள். பாகிஸ்தானுக்கு உட்பட்ட பஞ்சாப் மக்கள், வெடிகுண்டுகளையும், திடீரென மாயமாவதையும், இனப்படுகொலையையும் சந்தித்தது கிடையாது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன். டாகாவில் 93 ஆயிரம் ராணுவ வீரர்கள் சரணடைந்து பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட அவமானம் மீண்டும் ஏற்படாமல் இருக்க, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்த வேண்டும். பாகிஸ்தான் ராணுவத்தை தோற்கடிக்கும் திறமை இந்தியாவுக்கு உண்டு. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மனித கேடயங்களாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதால், அங்கு ரத்த ஆறு ஓடினால் அதற்கு பாகிஸ்தான்ராணுவ தளபதிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.
பலுசிஸ்தான் விடுதலையை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். பலுசிஸ்தான் குறித்த பாகிஸ்தான் கட்டுக்கதைகளை சர்வதேச நாடுகள் இனியும் நம்பக்கூடாது. வெளிநாட்டு சக்திகள் உதவியுடன் வலுக்கட்டாயமாக பலுசிஸ்தானை பாகிஸ்தான் இணைத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.