குமரிக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவிகளை நேரில் சென்று வாழ்த்திய பொன்னார்.

குமரிக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவிகளை நேரில் சென்று வாழ்த்தினார் பொன்னார்

நீட் தேர்வில் அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வியில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் குமரி மாவட்ட அளவில் முதலிடமும் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மண்டைக்காடு பேரூராட்சி பகுதிக்குட்பட்ட கூட்டுமங்கலம் பகுதியை சார்ந்த கூலி தொழிலாளியின் மகளான செல்விதர்ஷனா 157 மதிப்பெண் பெற்று குமரி மாவட்ட அளவில் முதலிடமும் தமிழ்நாடு அளவில் 3-ஆம் இடமும் பெற்று சாதித்துள்ளார்.

மேலும் கல்லத்திவிளை பகுதியை சார்ந்த வேல்முருகன் மகள் செல்விஆஷிகா அவர்களும் 537 மதிப்பெண் பெற்று சாதித்து உள்ளார்கள், அவர்களை கௌரவபடுத்தும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் மாணவிகளின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தினார்கள்…

Exit mobile version