Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

Oredesam by Oredesam
June 15, 2025
in இந்தியா, உலகம், செய்திகள்
0
மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

FacebookTwitterWhatsappTelegram

தென் ஆப்பிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.3.22 கோடி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, டர்பன் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆசிஷ் லதா ராம்கோபின் (வயது 56). இவர் தென்ஆப்பிரிக்காவில் வசித்து வருகிறார். இவர் அகிம்சைக்கான சர்வதேச மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், செயல் இயக்குனராகவும் உள்ளார்.

இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அவர் அரசியல், சமூக பொருளாதாரம், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருவதோடு, அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இவர் கடந்த 2015ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவில் ‛நியூஆப்ரிக்கா அலையன்ஸ்’ என்ற காலணி விநியோக நிறுவனத்தின் இயக்குனர் மகாராஜ் என்பவரை சந்தித்துள்ளார். இவரது நிறுவனம் ஆடைகள் மற்றும் காலணிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் மகாராஜை சந்தித்த ஆசிஷ் லதா, தனக்கு 6 மில்லியன் ரேண்ட் (இந்திய மதிப்பில் ரூ.3.22 கோடி) தேவை உள்ளதாக தெரிவித்தார்.

அதாவது தென்ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல நெட்கேர் குழும மருத்துவமனைக்கு லினன் துணிகள் வழங்க வேண்டும். இதற்காக இந்தியாவில் இருந்து 3 கன்டெய்னர்களில் லினன் துணி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான வரி செலுத்த பணம் தேவை உள்ளது என கூறியுள்ளார். ஆனால் மகாராஜ் யோசித்துள்ளார். பணம் கொடுக்க தயங்கி உள்ளார்.
இதையடுத்து ஆசிஷ் லதா ராம்கோபின் சில ஆவணங்களை காண்பித்துள்ளார். கையெழுத்திடப்பட்ட பர்சேஸ் ஆர்டர், இன்வாய்ஸ், நெட்கேரில் இருந்து பெறப்பட்ட டெலிவரி நோட் உள்ளிட்டவற்றை காண்பித்தார். இதை பார்த்த மகாராஜ்க்கு சந்தேகம் தொடர்ந்து இருந்தது. இருப்பினும் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி என்பதால் ஆசிஷ் லதா ராம்கோபின் அவர் ரூ.3.22 கோடியை வழங்கினார்.

இந்த பணத்தை பெற்ற ஆசிஷ் லதா ராம்கோபின் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த வில்லை. இதற்கிடையே தான் அவர் போலி ஆவணங்களை காண்பித்து பணமோசடி செய்தது தெரியவந்தது. இதுபற்றி மகாராஜ் மோசடி புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த டர்பன் நீதிமன்றம் ஆசிஷ் லதாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, தேசிய வழக்கு விசாரணை ஆணையத்தின் (NPA)பிரிகேடியர் ஹங்வானி முலாவுத்ஸி, ‛‛ஆசிஷ் லதா ராம்கோபின் போலியான ஆவணங்களை பயன்படுத்தி மோசடி உள்ளார். இதனால் அவரை குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார். மேலும் குற்றச்சாட்டுகளுக்கான ஆவணங்களை வழங்கிய நிலையில் ஆசிஷ்லதா ராம்கோபினுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தற்போது அவர் தற்போது 50,000 ரேண்ட் பிணைத் தொகை செலுத்தி ஜாமீனில் வெளிவந்துள்ளார்.மகாத்மா காந்தியின் வாரிசுகள் பலர் மனித உரிமை ஆர்வலர்களாக பணியாற்றுகின்றனர். அவர்களில் ஆசிஷ் லதா ராம்கோபின்னும் ஒருவர். இவரது தாய் எலா காந்தி தென் ஆப்பிரிக்காவில் பிரபலமானவர். இவரது பணிகளை பாராட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அரசுகள் விருதுகள் வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கேரளாவில் முதல்முறையாக மசூதிகளில் தேசிய கொடி பறந்தது; 56 இஞ்ச் மோடியால் நடந்தது

February 12, 2020
உலகின் மிகப்பெரிய கூட்டம் ! சனாதன தர்மத்தின் இதயத்தை நோக்கிய பயணம்: மகா கும்பமேளா 2025.

உலகின் மிகப்பெரிய கூட்டம் ! சனாதன தர்மத்தின் இதயத்தை நோக்கிய பயணம்: மகா கும்பமேளா 2025.

January 3, 2025
சீரழிய துவங்குகிறதா சீனா? இல்லை சர்வதேசத்தை எதிர்த்து சாதிக்கும் வல்லமை உண்டா ?

சீரழிய துவங்குகிறதா சீனா? இல்லை சர்வதேசத்தை எதிர்த்து சாதிக்கும் வல்லமை உண்டா ?

July 6, 2020
உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி,மணம்பூண்டியில் மரக்கன்று நட்ட ஜஜேகே மாவட்ட தலைவர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி,மணம்பூண்டியில் மரக்கன்று நட்ட ஜஜேகே மாவட்ட தலைவர்.

June 5, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x