Wednesday, August 10, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

ஊடகவியலாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றால், அரசியல் தலைவர்களுக்கு இல்லையா? பாஜக தலைவர் ஆவேசம் .

Oredesam by Oredesam
January 4, 2022
in அரசியல், செய்திகள்
0
ஊடகங்களை புரட்டி எடுத்த அண்ணாமலை! தரமான சிறப்பான சம்பவம் என்னா அடி!
FacebookTwitterWhatsappTelegram

அண்ணாமலை செய்தது சரியே
கருத்து சுதந்திரம் ஒரு வழிப்பாதை அல்ல

“மழை, வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து மத்திய அரசு 3000 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. ஆனால், தமிழகத்தை புறக்கணித்தது” என்ற செய்தியை, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டது.

READ ALSO

‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இது தவறான செய்தி. ஏற்கனவே மாநில பேரிடர் நிதி மற்றும் தேசிய பேரிடர் நிதியிலிருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது’ என்று, தக்க ஆதாரங்களோடு பதிவிட்டு, ‘புகழ்மிக்க டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் இந்த நிருபர், பல மாதங்களாக பல்வேறு செய்திகளை பாஜகவுக்கு எதிராக உள்நோக்கத்தோடு திரித்து வெளியிட்டு வருகிறார். ஆகவே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆய்வு செய்து செய்திகளை வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

அவசர தேவைக்காக மாநில பேரிடர் நிதி மற்றும் தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஏற்கனவே தமிழகத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலே குறிப்பிட்ட 3000 கோடி ரூபாய் நிதியானது, மே முதல் செப்டம்பர் வரையில், ஆறு மாநிலங்களுக்கு, பேரிடர் நிவாரண குழுக்கள் அளித்த ஆய்வறிக்கையின் படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிய நிதி தமிழகத்திற்கு வழங்கப்படும். இதை புரிந்து கொள்ளாமல் தவறான செய்தியை வெளியிட்டிருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

அண்ணாமலையின் விமர்சனம் தவறு என்றும், ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், தனிப்பட்ட முறையில் நிருபர்களை விமர்சனம் செய்கிறார் என்றும் சிலர் சொல்வது முறையன்று. ஊடகவியலாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றால், அரசியல் தலைவர்களுக்கு அந்த சுதந்திரம் இல்லையா?

‘நாங்கள் எங்களுக்கு தோன்றியதை, எங்களுக்கு தெரிந்ததை எழுதுவோம், ஆனால், அதை தவறு என்று சொல்லக்கூடாது’ என்ற சிலரின் பிடிவாதம் ஏற்புடையது அல்ல. மத்திய பாஜக அரசை குறை கூற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, உண்மைக்கு புறம்பான தகவலைகளை பொதுவெளியில் வெளியிட்டால், அதை மறுத்து, உண்மையை உலகிற்கு சொல்லும் பொறுப்பு பாஜகவின் மாநில தலைவருக்கு உள்ளது. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல், நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து உண்மையை உலகிற்கு எடுத்து சொல்வதே, பொறுப்பான ஊடகவியலாளரின் கடமை.

ஒவ்வொரு மனிதனுக்கும் கொள்கைகள் வேறுபடலாம். ஆனால், ஒரு பத்திரிகையாளர், விருப்பு, வெறுப்புகளை புறந்தள்ளி, உண்மையான செய்திகளை மக்களிடத்தில் சென்றடையச் செய்வதன் மூலம் மட்டுமே ஊடக அறத்தை காக்க முடியும். அதை விடுத்து, அண்ணாமலை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார், மிரட்டுகிறார் என்று சொல்வது ஜனநாயகம் அல்ல. அண்ணாமலை, பாஜகவின் மாநிலத் தலைவர். கட்சி குறித்தோ, ஆட்சி குறித்தோ உண்மைக்கு புறம்பான தகவல்கள் வருமாயின், அவற்றை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும், உரிமையும் அவருக்கு உள்ளது.

இதை புரிந்துகொள்வதோடு, பேச்சுரிமை, கருத்துரிமை என்பது ஒரு வழிப்பாதை அல்ல என்பதை உணர்வார்களா, தொடர்புடைய ஊடகவியலாளர்கள்?

  • நாராயணன் திருப்பதி -பாஜக செய்தித் தொடர்பாளர்
ShareTweetSendShare

Related Posts

‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.
அரசியல்

‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.

August 8, 2022
தி.மு.கவை வேரோடு அசைத்து பார்க்க ரெடியான அண்ணாமலை! அந்த ஆடியோ டேப் எப்போது வெளியீடு?
அரசியல்

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..

August 8, 2022
பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !
சினிமா

பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !

August 8, 2022
தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

August 7, 2022
ஹிந்து இளைஞரை மணந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, தனது மகளை  கொல்ல முயன்ற இஸ்லாம் கான் !
இந்தியா

ஹிந்து இளைஞரை மணந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, தனது மகளை கொல்ல முயன்ற இஸ்லாம் கான் !

August 7, 2022
துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில்-ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி.
இந்தியா

துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில்-ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி.

August 3, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

இந்தியா சீனாவை எளிதில் வெல்லும் ! உலக அளவில் ஆய்வுகள் வெளியானது!

சீனாவுக்கு மீண்டும் ஆப்பு வைத்த மோடி அரசு பெரும் அதிர்ச்சி!

July 25, 2020
தமிழகத்தில் கலவரத்தை தூண்ட தி.மு.க சதி!

ஸ்டாலின் குடும்பத்துக்கு ஆடிட்டர், மருத்துவர், வக்கீல், தொழில் பார்ட்னர்கள் என பல பிராமண நண்பர்கள் உண்டு.

March 20, 2020
முதன் முறையாக மணிப்பூர் மாநிலம் ரயில்வே வரைபடத்தில் இடம்பெற்றது! வரலாறு படைக்கும்   மோடி அரசின் அசத்திய சாதனை!

முதன் முறையாக மணிப்பூர் மாநிலம் ரயில்வே வரைபடத்தில் இடம்பெற்றது! வரலாறு படைக்கும் மோடி அரசின் அசத்திய சாதனை!

July 6, 2021

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயிலில் இருந்தபோது நடந்தவை….

December 13, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.
  • கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..
  • பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !
  • தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x