மோடி-அமித்ஷா அடுத்த திட்டம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழுமா?

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ராஜ்ய சபா தேர்தல் மூலமாக உருவாகி இருக்கிறது.ராஜ்ய சபை தேர்தலை வைத்து அமித்ஷா விளையாடும் விளையா ட்டில் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சி
கவிழ்ந்து பிஜேபி ஆட்சி அமைய வாய்ப்புகள் இருக்கிறது.

நாடு முழுவதும் 55 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக் காலம் ஏப்ரல் மாதம் முடிவடைவதால்
காலியாகும் 55 ராஜ்யசபா இடங்களுக்கும் ஏற்கனவே காலியாக உள்ள 2 இடங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 57 இடங்களுக்கு வருகி ற மார்ச் 26ம் தேதி நடைபெற இருக்கிறது.

ராஜ்ய சபாவில் பிஜேபிக்கு ஏற்கனவே 82 எம்பிக்கள் இருக்கிறார்கள்.இந்த தேர்தலில் இந்த எண்ணிக்கு குறைவதற்கு வாய்ப்புகள்
இருக்கிறது.

காரணம் என்னவென்றால்
ராஜஸ்தான்,மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா,சட்டீஸ்கர்,ஜார்கண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பிஜேபி ஆட்சியை இழந்த தால் அங்கு சில இடங்களை இழக்க நேரிடும்.

இதை எப்படி தடுக்கலாம் என்று தான் அமித்ஷா தீவிரமாக யோசித்து கொண்டு இருக்கி றார்.காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளில் இருந்து சில எம்எல்ஏக்களை இழுத்து எப்படி
யாவது இந்த 82 எண்ணிக்கையை தக்க வைத்து கொள்ளலாம் என்று பல கணக்கு களை போட்டுள்ளார்.

அந்த கணக்குகள் ஒர்க் அவுட் ஆனது என்றா ல் பிஜேபி இந்த 82 எண்ணிக்கையை தக்க வைத்து கொள்வதோடு 2 அல்லது 3 எம்பி க்கள் பிஜேபிக்கு அதிகமாக கிடைக்கக்கூடும் அதோடு அந்த கணக்குகளின் படி சில மாநில ஆட்சிகள் கலைய வாய்ப்புகள் இருக்கிறது.

அந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பது மத்தியபிரதேசம் தான். மத்திய பிரதேசத்தில்
வருகின்ற ஏப்ரல் மாதம் 3 ராஜ்ய சபை உறுப்பினர்கள் ரிடையர்டு ஆகிறார்கள்.இதில் பிஜேபி 2 எம்பிக்கள் காங்கிரஸ் 1 எம்பி.

அதனால்வருகின்ற 26 ம் தேதி 3 இடங்களுக்கு தேர்தல்நடைபெற இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் இப்பொழுது உள்ள எம்எல்ஏக்களின் பலத்தை வைத்து பார்த்தால் பிஜேபிக்கு ஒரே ஒரு எம்பி மட்டுமே கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் மத்தி ய பிரதேசத்தில் ஒரு ராஜ்ய சபா எம்பியை தேர்ந்தெடுக்க 59 எம்எல்ஏ க்களின் ஆதரவு வேண்டும்.

பிஜேபிக்கு 107 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் ஆனால் காலியாகும் பிஜேபியின் இடங்க ளையும் கைப்பற்ற வேண்டும் என்றால் பிஜேபிக்கு இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு
தேவைப்படுகிறது. அந்த 11 எம்எல்ஏக்களை பகுஜன் சமாஜ் கட்சி-2 சமாஜ்வாடி-1 சுயேச் சைகள்-3 என்று 6 கூடவே காங்கிரசில் இரு ந்து குறைந்தது 8 எம்எல்ஏக்கள் என்று 14 எம்எல்ஏக்களுக்கு பிஜேபி குறிவைத்து இருக்கிறது.

இது ஒர்க் அவுட் ஆகி விட்டால் பிஜேபி காலியாகும் தன்னுடைய 2 எம்பி இடங்களையும் தக்கவைத்து கொள்ளும். கூடவே இந்த குழப்பத்தை பயன்படுத்தி ஊசலாடிக்கொண்டு இருக்கும் கமல்நாத் ஆட்சியையும் கவிழ்த்துவிடலாம்.

இப்பொழுது சில காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் பிஜேபியின் கட்டுப்பாட்டில் கர்நாடகாவில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது உறுதியாகி விட்டதால் அமித்ஷா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விடுவார் என்று
நம்புவோம்…

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version