மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் நாளுக்கு நாள் மிக தீவிரமடைந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இஸ்ரால்,ஜோர்டான்,கத்தார்,ஓமன் உள்ளிட்ட 8 நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான இந்தியர்கள் பாதுகாப்பு என்ன என்பது கேள்விக்குறியாக இருந்த சூழ்நிலையில் மேற்காசியாவில் உள்ள 8 நாடுகளின் தலைவர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
கிட்டத்தட்ட கடந்த 48 மணி நேரத்தில் அவர் இந்த ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறார்.பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை நடத்திய நாடுகள் மற்றும் தலைவர்கள் விவரங்கள்;
ஐக்கிய அரபு அமீரகம் – அதிபர் ஷேக் முகமதுபின் ஜாயித் அல் நாஹ்யான்,சவூதி அரேபியா – பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான்,கத்தார் – அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அர்தனி,ஓமன் – சுல்தான் ஹய்தான் பின் தாரிக்,பஹ்ரைன் – மன்னர் ஹமாத் பின் ஐசா அல் கலிபா,குவைத் – பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்காலித் அல்ஹமத் அல்முபாரக் அல்சபாஹ்,இஸ்ரேல் – பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,ஜோர்டான் – மன்னர் 2ம் அப்துல்லா ஆகிய 8 உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி மேற்காசியாவில் தற்போதுள்ள நிலவரம், இந்தியர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
போர் சூழலுக்கு மத்தியில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த ஆலோசனையின் போது பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி இருக்கிறார்.
எந்த நாடுகளுடன் என்ன ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரங்களையும் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.இதனிடையே, வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அங்குள்ள இந்திய தூதரகங்களுடன் மத்திய அரசு தொடர்பில் இருந்து வருவது, குறிப்பிடத்தக்கது.
வளைகுடா நாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் நிலவிய அச்சத்தைப் போக்க உதவியுள்ளன.
போர் மேகங்கள் சூழ்ந்துள்ள போதிலும், உலகத் தலைவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்து இந்தியர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்தியப் பிரதமர் மோடி காட்டி வரும் உறுதிப்பாட்டை இது பறைசாற்றுகிறது.24 மணிநேர உதவி மையங்கள்: வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது, அவசரநிலை ஏற்பட்டால் மீட்பதற்கான ஏற்பாடுகளை செய்வது ஆகியவை குறித்து இதில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. ஈரான் தலைநகர் டெஹ்ரான், இஸ்ரேலின் டெல் அவிவ், அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் 24 மணி நேர உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
