திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் தமிழகம் எப்போதுமே டில்லிக்கு, ‘அவுட் ஆப் கன்ட்ரோல்’தான்.என் பேசியது பெரும் விவாதத்திற்கு உள்ளானது ஆனால் தமிழகத்தில் மது தான் ‘அவுட் ஆப் கன்ட்ரோளாக ஓடி கொண்டிருக்கிறது. தமிழகத்தின் தற்போது சட்டம் ஒழுங்கு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
ஆனால் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல், மைக் கிடைத்தால் போதும் திமுகவில் உள்ள அனைவரும் பேச ஆரம்பித்துவிடுவார்கள் தற்பெருமை பேசியே நான்கு ஆண்டுகளை ஓட்டி விட்டனர்.
ஆனால் தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து சொல்லி மாளாது.மேலும் இளைஞர்கள் மாணவர்கள் போதையால் சீரழிந்து வருகிறார்கள் போதையால் மாணவர்கள் அரிவாள் தூக்கும் அளவுக்கு கல்வி நிலையங்களை கெடுத்து விட்டுது இந்த திரவிட மாடல் அரசு தமிழக இளைஞர்கள் மத்தியில் க ஞ்சா பழக்கம் சாதரணமாக மாறி வருகிறது. இதை கட்டுப்படுத்த வக்கில்லாமல் ஆளும் திமுக இளைஞரணி கூட்டத்தில் மதுவுடன் அசைவ விருந்து கொடுத்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மதுவை ஒழிப்பேன் என கூறி ஆட்சிவந்த திமுக டாஸ்மாக் ஊழல் மதுவிற்பனையில் சாதனை படைத்துவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் மது ஆலைகள் மூடப்படும் என என கனிமொழி கூறினார் ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் ஒரு புல்லை கூட எடுக்கவில்லை மது ஒழிப்பு பிரசாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தில் உள்ள 11 மதுபான ஆலைகளில் 6 ஆலைகள் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் இயங்குகிறது. அதேபோல் தமிழகத்தில் உள்ள 7 பீர் ஆலைகளில் 6 திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் தான் இயங்குகின்றன.
இவைகளில் பெரும்பாலான ஆலைகள் திமுகவினருடையது தான். அதை மூடாமல் மதுவை ஒழிப்போம் என பிரசாரம் செய்து, திமுக இரட்டை வேடம் போடுகிறது
இதற்கிடையே கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், திமுக ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பெறுநர்கிள்ளி ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு தேர்தல் குறித்தும் வாக்குச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.
கூட்டம் முடிந்து சட்டமன்ற உறுப்பினரும் தொகுதி பொறுப்பாளரும் சென்ற பிறகு 3 ஒன்றிய செயலாளர்கள் மூலமாக வந்திருந்த வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோருக்கு மதுவுடன் (பீர் பாட்டிலுடன்) கூடிய அசைவ விருந்து வைக்கப்பட்டுள்ளது.
சாப்பாட்டு மேஜையின் மீது இலையுடன் ஆளுக்கு ஒரு பீர் பாட்டில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கும் காட்சிகள், புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மது ஒழிப்பு, வெங்காய கொள்கை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என திமுக தலைமை பேசி வரும் நிலையில், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிணைந்து தனியார் திருமண மண்டபத்தில் இளைஞர்களுக்கு மதுவுடன் கூடிய அசைவ விருந்து வைத்த சம்பவம் அனைவரிடமும் பேசுபொருளாய் மாறி உள்ளது.குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் இது கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.