Tuesday, March 28, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home மற்றவைகள்

நீட் தேர்வு தமிழக மாணவர்கள் பாதிப்பு! மாற்றப்படாத தமிழக அரசின் பாடத்திட்டம் தான் காரணம்! வானதி சீனிவாசன்.

Oredesam by Oredesam
September 14, 2021
in மற்றவைகள்
0
நீட் தேர்வு தமிழக மாணவர்கள் பாதிப்பு! மாற்றப்படாத தமிழக அரசின் பாடத்திட்டம் தான் காரணம்! வானதி சீனிவாசன்.
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வு குறித்த உண்மைகளைப் பேச பாஜகவை அனுமதிக்கவில்லை தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் (13-9-2021) நிறைவுப் பெற்றது. நிறைவு நாளான இன்று நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குகோரும் சட்ட மசோதாவை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதத்தில் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் பேசினார். நீட் தேர்வு குறித்த உண்மைகளைப் பேச அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. குறுக்கீடுகள் அதிகமாக இருந்தன.

அதனால் வெளிநடப்பு செய்து, சட்டப்பேரவைக்கு உள்ளே பேச வேண்டியதை, சட்டப் பேரவைக்கு வெளியே பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் நுழைவுவாயிலில் செய்தியாளர்களிடம் நான் பேசியது:மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நீட் தேர்வு, ‘சமூக நீதி’க்கு எதிரானது என்று ஆளும் திமுகவும், தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

READ ALSO

விடியா திமுக அரசின் தில்லாலங்கடி அம்பலம் ! அப்போ பால்… இப்போ தயிர்…

திராவிட மாடலில் என்றைக்காவது ஒரு தலித் முதல்வராக முடியுமா ?

‘சமூக நீதி’ என்றால் ‘இட ஒதுக்கீடு’. நீட் தேர்வால் பட்டியலின (SC), பழங்குடியின (ST), பிற்படுத்தப்பட்ட(BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) பிரிவினருக்கான இட ஒதுக்கீடு எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது எந்த இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டதோ, எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்ததோ அதே இட ஒதுக்கீட்டு முறை தான் நீட் தேர்வு வந்த பிறகும் பின்பற்றப்படுகின்றன.

எனவே நீட் தேர்வு ‘சமூகநீதி’க்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு முற்றிலும் பொருத்தமற்றது.ஏழை அடித்தட்டு மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு செல்வதை நீட்தேர்வு தடுக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். நீட் தேர்வு நடைபெறாத, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற 2006 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்தைக் கூட தாண்டவில்லை. இதனால்தான் கடந்த அதிமுக அரசு, மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. இந்த இட ஒதுக்கீட்டால் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து நீட் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என்று ஒரு குற்றச்சாட்டையும் முன் வைக்கிறார்கள். பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் என்ற நிலை, நீட் தேர்வுக்கு மட்டும் இல்லை. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) படிப்பதற்கும், ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணி தேர்வுகளுக்கும் சிறப்பு பயிற்சியும், கவனமும் எடுத்துக் கொண்டால்தான் வெற்றி கிடைக்கும். நீட் தேர்வுக்கும் இது தான் பொருந்தும். நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் பற்றி எதுவும் பேசுவதில்லை. நீட் தேர்வுக்கு முன்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணங்களை வசூலித்துக் கொண்டு இருந்தன.

நீட்தேர்வு வந்த பிறகு கட்டண முறை ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு சொன்னதால், தகுதியான மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் சூழ்நிலை நீட் தேர்வால் உருவாகியுள்ளது.13 ஆண்டுகளாக தமிழக அரசின் பாடத்திட்டம் மாற்றப்படாததால் 2016-17-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். பாடத்திட்டம் மாற்றப்பட்ட பிற, கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேசிய சராசரியை விட தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த 15 சதவீத இடங்களில் மற்ற மாநிலங்களை விட தமிழக மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர்.

இது நீட் தேர்வால் தான் சாத்தியமாகியுள்ளது.இது பற்றி சட்டப்பேரவையில் வெளிப்படையான விவாதத்திற்கு திமுக அரசு தயாராக இல்லை. நீட் தேர்வு பற்றி உண்மைகளைப் பேச சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்குஅனுமதி கிடைக்கவில்லை. அவர் பேசும்போது குறுக்கீடுகள் அதிகமாக இருந்தன. அதனால் தான் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்

ShareTweetSendShare

Related Posts

விடியா திமுக அரசின் தில்லாலங்கடி அம்பலம் ! அப்போ பால்… இப்போ தயிர்…
மற்றவைகள்

விடியா திமுக அரசின் தில்லாலங்கடி அம்பலம் ! அப்போ பால்… இப்போ தயிர்…

August 7, 2022
தமிழக மக்களுக்கு ஷாக் மேல் ஷாக்!  நீட் பிரச்னை முடியவில்லை அதற்குள் மின்கட்டண பிரச்சனை!  விழிபிதுங்கும் திமுக!
மற்றவைகள்

திராவிட மாடலில் என்றைக்காவது ஒரு தலித் முதல்வராக முடியுமா ?

May 1, 2022
மற்றவைகள்

கோபாலபுரம் தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏவை அடித்து விரட்டிய பொதுமக்கள்…!

May 1, 2022
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
மற்றவைகள்

உ.பியில் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கும்-அமித்ஷா..

February 26, 2022
ஸ்டாலின் ஆட்சி மீது கடும் அதிருப்தி ! அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்கம் கவர்னர்.
மற்றவைகள்

ஸ்டாலின் ஆட்சி மீது கடும் அதிருப்தி ! அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்கம் கவர்னர்.

January 18, 2022
சாய்னா நேவால் மீது ஆபாச விமர்சனம்..பாய்ஸ் படத்தில் நிர்வாணமாக ஓடிய ஆபாச சித்தார்த்..மகளிர் ஆணையம் வழக்கு பதிவு!
மற்றவைகள்

எப்போதும் நீங்கள் தான் சாம்பியன்! என்னை மன்னித்து விடுங்கள் .. மன்னிப்பு கேட்ட ஆபாச நடிகர் சித்தார்த்

January 12, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் மாநில தலைவர் வேலூர் இப்ராகிம் அவர்களின் பிரசார யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் – பொன் ராதாகிருஷ்ணன்

September 8, 2020
பாயும் இந்தியா! பம்மும் சீனா ! பிரச்சனைகளை பேசியே தீர்த்துக்கொள்ளலாம் சீனா அறிக்கை!

சீனாவின் பிரச்சனையை தீர்ப்பது மோடி தான் 72.6% இந்திய மக்கள் முழு நம்பிக்கை! சி-வோட்டர் கருத்து கணிப்பு

June 25, 2020

ஊடகங்கள் அண்ணாமலை நேரடி IPS சகாயம் எப்படி IAS ஆனார் என்று விவாதம் நடத்துமா ?

August 29, 2020
மோடியை விட தாலிபான்கள் பெஸ்ட்! தாலிபான்கள் தந்த சர்பத் சூப்பர்!  இந்திய டுடே எடிட்டர் சர்தீப்!

மோடியை விட தாலிபான்கள் பெஸ்ட்! தாலிபான்கள் தந்த சர்பத் சூப்பர்! இந்திய டுடே எடிட்டர் சர்தீப்!

August 23, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x