எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை! ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு- ரஜினிகாந்த் ஜெய் ஹிந்த்!

2017 ஆம் ஆண்டு சிஸ்டம் சரியில்லை தமிழ் மக்களுக்காக உயிரை தருவேன் என நான் அரசியலுக்கு வருவேன் என தடாலடியாக அறிவித்தார் ரஜினி. அவரை நம்பி தமிழருவி மணியன் மற்றும் பல பிரபலங்கள் ரஜினி கட்சியில் சேர்ந்து விடலாம் என்ற நினைப்பில் இருந்தார்கள்.

டிசம்பர், 2017ல் அரசியலுக்கு வருவேன் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு 2 மாதங்கள் முன்னதாக, 2020ல் அதே போன்ற ஒரு டிசம்பர் மாதத்தில் அரசியல் கட்சி தொடங்கவில்லை. கொரோனா தொற்று பரவல் காரணமாகவும் தனது உடல்நிலை காரணமாகவும் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார். மேலும், தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சிகிச்சை முடித்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். அரசியலுக்கு வருவதாகச் சொன்ன நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தொற்று நோய் மற்றும் உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று அறிவித்த பிறகு, தனது ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது

போயஸ் தோட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது : “மக்கள் மன்றத்தை தொடர்ந்து செயல்படுத்துவதா? இல்லையா? என்பது பற்றி ஆலோசனை மக்கள் மன்றத்தின் எதிர்காலப் பணிகள் என்ன என்று கேள்விகள் உள்ளன எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? என்கிற கேள்வியும் உள்ளது அனைத்து கேள்விகளுக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்” – என கூறினார் நடிகர் ரஜினிகாந்த்

மன்ற நிர்வாகிகளை சந்தித்து முடித்த பின்னர் ஓர் அறிவிக்கையை வெளியிட்டுள்ளார் அதில்

ரஜினி மக்கள்‌ மன்ற நிர்வா௫ுகளுக்கும்‌. உறுப்பினர்களுக்கும்‌.என்னை வாழ வைத்த தெய்வங்களான ர9ிக பெருமக்களுக்கும்‌ வணக்கம்‌. நான்‌ அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு. ரஜினி மக்கள்‌ மன்றத்தின்‌ பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள்‌ மன்ற நிர்வா௫கள்‌ மற்றும்‌ ரகர்கள்‌ மத்தியில்‌
கேள்விக்குறியாக இருக்‌இறது அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை.

நான்‌ அரசியல்‌ கட்‌சி ஆரம்பித்து, அரசியலில்‌ ஈடுபட ரஜினிகாந்த்‌ ரசிகர்‌ நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள்‌ மன்றமாக மாற்றி, மாநில அளவிலும்‌. மாவட்ட அளவிலும்‌ பல பதவிகளையும்‌, பல சார்பு அணிகளையும்‌ உருவாக்‌கினோம்‌.

கால சூழலால்‌ நாம்‌ நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்இல்‌ அரசியலில்‌ ஈடுபடப்போகும்‌ எண்ணம்‌ எனக்‌கு இல்லை, ஆகையால்‌ ரஜினி மக்கள்‌ மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள்‌ எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள்‌ மன்றத்தில்‌ உள்ள செயலாளர்கள்‌, இணை, துணை செயலாளர்கள்‌ மற்றும்‌செயற்குழு உறுப்பினர்களுடன்‌ மக்கள்‌ நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த்‌ ரசிகர்‌ நற்பணி மன்றமாக செயல்படும்‌ என்று அன்புடன்‌ தெரிவித்துக்கொள்கிறேன்

வாழ்க தமிழ்‌ மக்கள்‌! வளர்க தமிழ்‌ நாடு!! ஜெய்ஹிந்த்‌!!!

Exit mobile version