தமிழகத்தில் 33 இடங்ளில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி !

தமிழகத்தில் 33 இடங்ளில் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது,

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்.எஸ்.எஸ். கோரிய மனுவில் போதிய தகவல்கள் இல்லை. எனவே அணிவகுப்பால் சட்டம்,ஒழுங்கு பாதிக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டி காவல்துறை தெரிவித்தது.

அணிவகுப்பால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் அளிக்க வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியது.இதையடுத்து இரு தரப்பையும் விசாரித்த உயர்நீதிமன்றம் காவல்துறை நிபந்தனைகளை ஏற்று இரு நாட்கள் 33 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.

Exit mobile version