Saturday, November 15, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

செந்தில் பாலாஜி அரசியலுக்கு உலை வைத்த நீதிபதி ! அமைச்சர் பதவி அம்போ! செந்தில் பாலாஜி வக்கீல்களை ஓடவிட்ட நீதிமன்றம்.. !

Oredesam by Oredesam
April 26, 2025
in செய்திகள், தமிழகம்
0
SENTHIL-BALAJI

SENTHIL-BALAJI

FacebookTwitterWhatsappTelegram

வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத்துறையால் கைது, பைபாஸ் சர்ஜரி, 471 நாள் சிறைவாசம், மீண்டும் அமைச்சர் பதவி, ஜாமீனில் பிரச்னை, டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டுகள் எனத் திக்கித் திணறுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. “நான்கு நாள்கள்தான் அவகாசம். அமைச்சர் பதவியா… சுதந்திரமா… இதில் எது வேண்டும் என அவரை முடிவுசெய்யச் சொல்லுங்கள்…” என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கும் கண்டிப்பான வார்த்தைகளால், ரொம்பவே ஆடித்தான் போயிருக்கிறார் செந்தில் பாலாஜி. இதற்கிடையே, டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்திருப்பது, அவருக்கான சிக்கலை மேலும் அதிகரித்திருக்கிறது.

ஜாமீன் பெற்ற சமயத்தில் அமைச்சர் பொறுப்பில் பாலாஜி இல்லை. அவருடைய வழக்கறிஞர்கள், ‘அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்’ எனச் சிறப்பு மனுவைத் தாக்கல் செய்த பிறகுதான், அவருக்கு ஜாமீனே வழங்கப்பட்டது. ஜாமீனுக்கான நிபந்தனையாக, `சாட்சிகளைக் கலைக்கக் கூடாது; சாட்சிகளை சந்திக்கக் கூடாது; வாரத்துக்கு இரண்டு முறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்’ எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தச் சூழலில், அவருக்கு ஜாமீன் வழங்கியதை ரத்துசெய்யக் கோரி, வித்யா குமார் என்பவரும், அமலாக்கத்துறையும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கு விசாரணையில்தான், குட்டுவைத்து கண்டிப்பு காட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

READ ALSO

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

நீதிபதி அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்த விசாரணையில், ‘நன்னடத்தை அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கவில்லை. நீண்டகாலமாகச் சிறையில் இருக்கிறார். அரசியலமைப்பின் 21-வது சட்டப் பிரிவு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை அவருக்குக் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதால்தான் ஜாமீன் வழங்கினோம். அவருடைய ஜாமீன் மனு மீதான விசாரணை முழுவதுமே, அவர் அமைச்சராக இல்லை, சாட்சிகள் மீது தாக்கம் செலுத்த மாட்டார் என்பதன் மேல்தான் நடந்தது. அதைப் புரிந்துகொள்ளாமல், உடனடியாக அமைச்சராகி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறார். அமைச்சராக அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைக்க மாட்டார் என்பதற்கு என்ன உறுதி… சாட்சிகள் நீதிமன்றத்துக்கு வராமல் இருப்பதற்கு அவரிடமிருக்கும் அதிகாரம் ஒரு முக்கியக் காரணம் என்கிறது அமலாக்கத்துறை. அது கருத்தில்கொள்ள வேண்டிய விஷயம்தான். உங்களுக்கு ஜாமீன் வழங்கி பெரிய தவறைச் செய்துவிட்டோம்…’ என நீதிபதி ஓகா கடுகடுக்க, நீதிமன்ற அறை முழுவதும் நிசப்தமானது.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் எழுந்து, ‘சாட்சியங்கள் கலைக்கப்படுவார்கள் என்று நினைத்தால், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள்…’ எனக் கோரிக்கை வைத்தார். கடுப்பான நீதிபதி ஓகா, ‘இந்த வழக்கில் ஆயிரக்கணக்கான சாட்சியங்கள் இருக்கிறார்கள். அவர்களால் வேறொரு மாநிலத்துக்குச் சாட்சி சொல்ல எப்படி வர முடியும்… இந்த நடத்தையை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது…’ எனப் பொரிந்து தள்ளிவிட்டார்.

பாலாஜிக்காக ஆஜரான சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி சில விஷயங்களை எடுத்துச் சொல்லவும், ‘ஏற்கெனவே, வழக்கை வாபஸ் பெறுவதற்கு செட்டில்மென்ட் நடந்துவிட்டதாக, கீழமை நீதிமன்றத்தில் வாதாடியதெல்லாம் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நாங்கள் வழங்கிய ஜாமீன் என்பது சாட்சியங்களைக் கலைக்கக் கொடுக்கப்பட்ட லைசென்ஸ் கிடையாது…’ என டென்ஷனான நீதிபதி ஓகா, ‘அமைச்சர் பதவியா… ஜாமீனா… இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யுங்கள்’ என உத்தரவிட்டார். கபில் சிபல் தரப்பில் நான்கு நாள்கள் அவகாசம் கேட்கவும், ‘அவர்கள் இதோடு நான்காவது முறையாக அவகாசம் கேட்கிறார்கள். இறுதித் தீர்ப்புத் தேதியை அறிவித்துவிடுங்கள்’ என்றார் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. ‘அன்று வாதம் செய்யப்போவதில்லை, பதில் மனு மட்டுமே தாக்கல் செய்கிறோம்’ என கபில் சிபல் உத்தரவாதம் அளிக்கவும், வழக்கின் விசாரணை வரும் திங்கள்கிழமை மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது, ‘சூழ்நிலைகள் மாறியிருக்கின்றன’ (Change of Circumstances) என்று சொல்லி ஜாமீன் வழங்கப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்குகளில் ஜாமீன் பெற்றவர்களுக்கு, இப்படியொரு வார்த்தையை இதற்கு முன்னர் நீதிமன்றம் பயன்படுத்தவில்லை. இப்போது, அந்தச் சூழல்களைத் தனக்குச் சாதகமாக பாலாஜி பயன்படுத்திக்கொண்டு, நீதிமன்றத்தோடு விளையாடுவதாகக் கருதுகிறது உச்ச நீதிமன்றம். உத்தரவு வெளியானவுடன், முகுல் ரோஹத்கி, கபில் சிபல் உள்ளிட்டோருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியிருக்கிறார். டெல்லியிலுள்ள சில சீனியர் வழக்கறிஞர்கள், ‘தற்போதைய சூழலில் ராஜினாமா செய்வதுதான் சிறந்த வழி’ என்று அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கேரள கடல் வழியில் கடத்தல் போதை பொருளின் மதிப்பு ஒரு லட்சம் கோடியினை நெருங்குகின்றது ! காரணம் என்ன ?

கேரள கடல் வழியில் கடத்தல் போதை பொருளின் மதிப்பு ஒரு லட்சம் கோடியினை நெருங்குகின்றது ! காரணம் என்ன ?

April 20, 2021
காவல்துறைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு !

காவல்துறைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு !

February 18, 2020
டிஜிட்டல் இந்தியாவை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறோம்! 75,000 கோடி இந்தியாவில் முதலீடு  கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை

டிஜிட்டல் இந்தியாவை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறோம்! 75,000 கோடி இந்தியாவில் முதலீடு கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை

July 14, 2020
Annamalai

மாணவி பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரன் குறித்த புதிய ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை

December 28, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x