Saturday, November 15, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தில் தலை எடுக்கும் தொடர் கொலைகள்! விடியல் ஆட்சியின் லட்சணம்! வாய் மூடி வேடிக்கை பார்க்கும் ஊடகங்கள்!

Oredesam by Oredesam
September 19, 2021
in செய்திகள், தமிழகம்
0
oredesam

oredesam

FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம், மீண்டும் ரத்தம் பார்க்கத் துவங்கி இருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.அவர்களின் அச்சத்தைப் போக்க காவல்துறை லத்தியை சுழற்றி கட்டுக்குள்கொண்டுவர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் பட்டப்பகலில் மனிதநேய ஜனநாயகக் கட்சி பிரமுகர் வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட சம்பவம் வடமாவட்டங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. முதலில்இந்தக் கொலை எதற்காக நடந்தது? என்று விசாரணையை துவங்கிய போலீஸாருக்கு நிஜக்காரணம் தெரிந்ததும் அதிர்ந்து போயினர்.

READ ALSO

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

வாணியம்பாடி நகரில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தது இந்த வசீம் அக்ரம்தான். கடந்த ஜூலை 10ம் தேதி குறிப்பிட்ட இடத்தில் ரெய்டு நடத்தி கஞ்சாவை கைப்பற்றினர். கஞ்சாவைக் கைப்பற்றிய போலீஸார், கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்யவில்லை.

இந்த நிலையில் வசீம் அக்ரம் கொலை செய்யப்பட, கொலையாளிகளை பிடிக்க திணறிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் நடத்திய வாகன சோதனையில் ஓட்டேரி பிரசாத் என்கிற ரவியும், டில்லிகுமாரும் ரத்தக்கறை படிந்த பட்டாக் கத்திகளுடன் சிக்கினர்.

அவர்களிடம் நடத்திய விசாரனையில் கஞ்சா விற்பனையைக் காட்டிக்கொடுத்ததால் டீல் இம்தியாஸ் ஏவிவிட்ட கதையைச் சொன்னார்கள். இம்தியாஸ் உட்பட சி.சி.டி.வி. கேமராவில் பதிவான மற்றவர்களைத் தேட அவர்களில் 6 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் சரணடைய அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிவகாசி கோர்ட்டில் இம்தியாஸ் சரணடைய அவரை வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சொல்லி வாணியம்பாடி நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டிருக்கிறார்.

சம்பவம் : 2
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை மேலப்பாளையத்தை அடுத்து வடக்கு கோபாலசமுத்திரம் தெற்கு கோபாலசமுத்திரம் என்ற கிராமம் இருக்கிறது.

இரு கிராமங்களுக்கும் அடிக்கடி மோதல் நடப்பது வாடிக்கை இந்த மோதல்கள் மெல்ல மெல்ல பக்கத்து கீழச்செவல், மேலச்செவல், முன்னீர்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் பரவி இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 36 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த கொலைகள் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், கீழச்செவல் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சங்கரசுப்பிரமணியன், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், கடந்த 13ம் தேதி இரவு வேலைக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வடுவூர்பட்டி ரோட்டின் இருட்டுப் பகுதியில் டாஸ்மாக் கடையை அடுத்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்திருக்கிறது. சட்டென அரிவாளால் அவரை வெட்டவே அதிர்ந்துபோன சங்கர சுப்பிரமணியன் டைக்கோடு தரையில் சரிந்தார்.

அவ்வளவுதான், அவரைசுற்றி வளைத்த அந்தக் கும்பல் கொத்திக் குதறி விட்டு அவரது தலையை மட்டும் அறுத்து எடுத்துக்கொண்டு எஸ்கேப்பாகி விட்டது. மறுநாள் காலையில் முன்னீர்பள்ளம் போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

உடனடியாய் ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், சங்கரசுப்பிரமணியனின் உடலை போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பிவிட்டு தலையை தேடி வந்தார்கள். அந்தத் தலை தெற்கு கோபாலசமுத்திரத்தில் உள்ள சுடுகாட்டில் மந்திரம் என்பவரதுகல்லறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மந்திரம் கடந்த 2013ம் ஆண்டு அவரது மகள் திருமணத்துக்காக வீட்டில் பந்தல், தோரணம் கட்டியிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு கிராமத்தினரின்இறந்தவரின் சடலம் கொண்டு சென்றபோது மந்திரம் வீட்டில் பூக்களை வீசியுள்ளார்

இதனால் டென்ஷனான மந்திரம் தட்டிக் கேட்டிருக்கிறார், அவ்வளவுதான். அதே இடத்தில் வெட்டி சாய்க்கப்பட்டார். அந்த கொலையாளிகளுக்கு சங்கர சுப்பிரமணியன் உதவி செய்திருக்கிறார். இதனாலேயே வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் பதற்றம் அடங்குவதற்குள் பழிக்குப் பழியாய் அடுத்த 36 மணி நேரத்தில் இன்னொருவரை பழி தீர்த்துள்ளார்கள்.

“தெற்கு கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். 15ம் தேதி காலையில் வழக்கம் போல் டீ குடிப்பதற்காக பஜாருக்கு வந்திருக்கிறார். அப்போது அவரை வழிமறித்த ஒரு கும்பல் சரமாரியாய் அரிவாளால் வெட்டி வீழ்த்தியது.

அவரது இடது காலை துண்டித்த கும்பல், அவரது தலையையும் துண்டித்து எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து சங்கரசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட இடத்தில் போட்டுவிட்டு எடுத்த சபதத்தை முடித்து விட்டோம்’ என்று கோஷமிட்டபடி கலைந்து சென்றிருக்கிறது’

அடுத்தடுத்து நடைபெற்றிருக்கும் இந்த கொலைகள் நெல்லையில் பெரும் பதற்றத்தைஏற்படுத்திவிட எஸ்.பி. மணிவண்ணன் ஸ்பாட்டில் முகாமிட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

சம்பவம் :3

செங்கல்பட்டு சூனாம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடப்பாக்கம் மீனவ குப்பத்தில் காசிமேட்டைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்தது. காசிமேடு ரமேஷ் மீது சென்னை, பாண்டிச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

வழக்கு ஒன்றிற்காக கடப்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வந்த நிலையில்தான் ரமேஷ் கொல்லப்பட்டார். இந்நிலையில், கடப்பாக்கத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரான ரஞ்சித் குமார் என்பவரை ரமேஷ் உறவினர் தலையை தனியாக வெட்டி எடுத்துச் சென்று ரமேஷ்
கொலை செய்யப்பட்ட இடத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர் இதனால் பதட்டம் தொற்றிக்கொண்டது. இதுகுறித்து பேசிய செங்கல்பட்டு எஸ்பி விஜயகுமார், ரமேஷ் கொலைக்கும் ரஞ்சித்குமாருக்கும் சம்பந்தம் இல்லை. அவசரப்பட்டு அவரை கொலை செய்துள்ளனர். ரமேஷை கொலை செய்த 4 பேரைகைது செய்துவிட்டோம். ரஞ்சித்குமாரை கொலை செய்த கும்பலை தேடி வருகிறோம் என்றார்.

சம்பவம் : 4

திருச்சி கொட்டப்பட்டு எம்ஜியார் நகரைச் சேர்ந்த சக்திவேலுவுக்கும் பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அலெக்ஸுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் செப்15 தேதி மாலை பொன்மலைப்பட்டி கடைவீதியில் சென்ற சக்திவேலுவின் தம்பி சின்ராசுவை அலெக்ஸ்
தரப்பு வெட்டி தலையை தனியாக எடுத்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலை எடுக்கும் கலாச்சாரத்தால் தமிழகம் நிம்மதி இழந்துள்ளது மறுக்க முடியாது. விடியல்ஆட்சி எண்டு வந்துவிட்டு விடிந்தால் தலை இருக்குமா என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஊடகங்களோ பெரியார் வாழ்க என திமுகவிற்கு சொம்பு தூக்கி வருகிறார்கள்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கொரோனாவைரஸ் பாதிப்பால் வருமானம் இழக்கும் தின கூலி வர்க்க மக்களுக்கு யோகி அரசு நிதி உதவி!

கொரோனாவைரஸ் பாதிப்பால் வருமானம் இழக்கும் தின கூலி வர்க்க மக்களுக்கு யோகி அரசு நிதி உதவி!

March 19, 2020
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
பாஜகவின் துள்ளி வரும் வெற்றிவேலைக் கண்டு கழகங்கள் கதறுவது  ஏன்?

டிசம்பர்- 7 ல் திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழா.

December 1, 2020
கமல் உருவாக்கும் பிஜேபி எதிர்ப்பு கூட்டணி.

கமல் உருவாக்கும் பிஜேபி எதிர்ப்பு கூட்டணி.

November 6, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x